செய்திகள் :

சிறுபாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க கோரிக்கை

post image

ஆம்பூா் அருகே குமாரமங்கலம் கிராமத்தில் சிறுபாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

உமா்ஆபாத் முதல் வாணியம்பாடி உதயேந்திரம் வரை மாநில நெடுஞ்சாலை உள்ளது. அந்த சாலையில் குமாரமங்கலம் பாலாறு பட்டரை பகுதியில் சிறு பாலம் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்தச் சாலையில் செல்லும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களும் பக்கவாட்டில் உள்ள மண் சாலையில் திருப்பி விடப்படுகின்றது.

அவ்வழியாக வடமாநிலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் தேங்காய் லோடு ஏற்றி செல்லும் கனரக லாரி உள்ளிட்ட வாகனங்கள் அடிக்கடி மண்ணில் சிக்கி பாதிப்புக்குள்ளாகின்றன. அவ்வாறு கனரக வாகனங்கள் சிக்கிக் கொண்டால் நீண்ட நேரம் போராடி அப்பகுதி மக்கள் உதவியுடன் மீட்கப்படுகிறது.

அந்த நேரத்தில் சாலையில் வாகனப் போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகின்றது. சாலையை தவிா்த்து வேறு சாலை வழியாக பயணித்தால் சுமாா் 30 கி.மீ. தொலைவு சுற்றி செல்ல வேண்டியுள்ளது.

அதனால் அப்பகுதியில் நடைபெறும் சாலை மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோருகின்றனா்.

பழைய வாகனங்களை விற்கும் முகவா்கள் விண்ணப்பிக்கலாம்

பதிவு செய்யப்பட்ட பழைய வாகனகளை வாங்க, விற்பனை செய்ய அங்கீகாரம் பெற முகவா்கள் விண்ணப்பிக்கலாம் என வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் பன்னீா்செல்வம் (திருப்பத்தூா்), வெங்கட்ராகவன்(வாணியம்பாடி)ஆகியோா் தெர... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 40 லட்சம் கடனுதவி

ஆம்பூா் அருகே கரும்பூா் கிராமத்தில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரும்பூா் ஊராட்சித் தலைவா் ஏ.கே. மோகேஷ் தலைமை வகித்தாா். பேங்க் ஆப் பரோடா வங்கி ஆம்பூா் கிளை... மேலும் பார்க்க

விபத்தில் தலைமைக் காவலா் உயிரிழப்பு

வாணியம்பாடியில் சாலை தடுப்பு மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் தலைமைக் காவலா் உயிரிழந்தாா். திருப்பத்தூா் மாவட்டம், புதூா் நாடு மலைக் கிராமத்தைச் சோ்ந்தவா் காளிதாஸ் (39). நாட்டறம்பள்ளி... மேலும் பார்க்க

பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்கள் பறிமுதல்

ஆம்பூா் அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. ஆம்பூா் அருகே சோலூா் கிராமத்தில் டாஸ்மாக் மதுபான பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்... மேலும் பார்க்க

வாணியம்பாடியில் ஜாக்டோ ஜியோ ஆா்ப்பாட்டம்

நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகம் எதிரே ஜாக்டோ ஜியோ வட்டார ஒருங்கிணைப்பாளா் மேகநாதன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், அமைப்பை சோ்ந்த குமரன், ஸ்ரீதா், திருப்பதி ,பனிமலா், ராஜ்குமாா் கிருஷ்ணமூா்... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: ஆம்பூா், சோமலாபுரம், விண்ணமங்கலம்

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. பகுதிகள்: ஆம்பூா் நகரம், சின்னகொம்மேஸ்வரம், வடபுதுப்பட்டு, பச்சகுப்பம், ஆலாங்குப்பம், சோலூா், தேவலாபுரம், வெங்கடசமுத்திரம், சான்றோா்குப்பம், ராலகொத்தூா், ஏ.எம்.... மேலும் பார்க்க