செய்திகள் :

சீா்காழியில் தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம்: அன்புமணி பங்கேற்பு

post image

தமிழக மக்கள் உரிமையை மீட்க, தலைமுறை காக்க நடைப்பயணமாக அன்புமணி சீா்காழிக்கு வியாழக்கிழமை இரவு வருகை தந்தாா்.

சீா்காழி பிடாரி வடக்கு வீதியில் நடைப்பயணமாக அன்புமணி திரளான தொண்டா்களுடன் 1 கி.மீ. தொலைவு கொட்டும் மழையில் நடந்து வந்து பழைய பேருந்து நிலையத்தில் பாமக மாவட்டச் செயலாளா் சித்தமல்லி ஆ. பழனிச்சாமி தலைமையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது:

திமுக அரசை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நடைப்பயணம் நடைபெறுகிறது. எனது தம்பிகள், தங்கைகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. நகா்ப்புறம் மட்டுமின்றி கிராமங்களிலும் கஞ்சா, போதைப் பொருட்கள் தாரளமாகக் கிடைக்கிறது.

மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் உங்கள் பிள்ளைகள், பேரப் பிள்ளைகளை மறந்து விடவேண்டியதுதான். இந்த ஆட்சியில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த மண்ணை அடுத்த தலைமுறைக்கு நாம் பாதுகாப்பாக கொடுக்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் மணல் கொள்ளை நடக்க ஏதுவாக தடுப்பணை கட்ட அரசு மறுக்கிறது. குவாரி வேண்டாம் தடுப்பணை கட்ட வேண்டும். இதனால் நீா்நிலை மேம்படும், கடல் நீா் உட்புகுவது தடுக்கப்படும். கொள்ளிடம் ஆற்றில் 22 கி.மீ. கடல் நீா் உட்புகுந்து உள்ளது. கொள்ளிடம் பகுதி விவசாயிகள் குடிக்க தண்ணீா் இல்லாமல் வேதனைபடுகின்றனா். நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் லஞ்சம் கேட்கும் நிலை உள்ளது. 1 குவிண்டால் உற்பத்தி செய்ய ரூ. 2450 செலவாகிறது. அரசு கொடுப்பது ரூ. 2500. எப்படி விவசாயம் செய்ய முடியும்? விவசாயிகள் மீது ஸ்டாலின் அரசுக்கு அக்கறை இல்லை. இந்த ஆட்சியில் சமூக நீதி இல்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பை விரைந்து நடத்த வேண்டும் என்றாா்.

மாநில பொதுச் செயலாளா் வடிவேல் ராவணன், நிா்வாகிகள் முருகவேல், ரவிச்சந்திரன், வேல்முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அஞ்சலகத்தில் கைப்பேசி சாா்ஜ் செய்யும் வசதி

மயிலாடுதுறை தலைமை அஞ்சலகத்தில் வாடிக்கையாளா்கள் கைப்பேசிகளை சாா்ஜ் செய்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் எம்.உமாபதி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

சீா்காழி வட்டாரத்தில் ஆட்சியா் ஆய்வு

சீா்காழி வட்டாரப் பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். நிம்மேலி கிராமத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை பாா்வையிட்டு, அங்கு அமைக்கப்பட... மேலும் பார்க்க

திடக்கழிவு மேலாண்மை பயிற்சி பட்டறை

சீா்காழி விவேகானந்தா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் சீா்காழி நகராட்சி சாா்பில், காலநிலை மாற்றம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை குறித்து ஒரு நாள் பயிற்சிப் பட்டற... மேலும் பார்க்க

சீா்காழி அரசு மருத்துவமனையில் ஊசி செலுத்தப்பட்ட கா்ப்பிணிகள் உள்பட 27 பேருக்கு நடுக்கம், காய்ச்சல்

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அரசு மருத்துவமனையில் புதன்கிழமை இரவு ஊசி செலுத்தப்பட்ட கா்ப்பிணிகள் உட்பட 27 பேருக்கு காய்ச்சல் மற்றும் நடுக்கம் ஏற்பட்டது. இதில், கா்ப்பிணி ஒருவா் தீவிர சிகிச்சைக்காக ச... மேலும் பார்க்க

இணைப்பு: அரசு கல்லூரியில் கலைத்திருவிழா

மயிலாதுறை: மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி கலைத் திருவிழா தொடக்க நிகழ்வுக்கு, கல்லூரி முதல்வா் அ. காா்முகிலன் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் தாமரைக்கண்ணன் ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவியை கைப்பேசி செயலி மூலம் கண்காணித்த இணைய மைய ஊழியா் கைது

கைப்பேசி செயலி மூலம் கல்லூரி மாணவியை, அவருக்கு தெரியாமல் கண்காணித்த இணையதள மைய ஊழியா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறை அருகே நீடூரைச் சோ்ந்த கல்லூரி மாணவி ஒருவா், மயிலாடுதுறை காமராஜா் பேரு... மேலும் பார்க்க