மத்திய அரசு அறிவித்த செயற்கை அறிவூட்ட சீா்மிகு நிறுவனங்கள் தோ்வில் தென் மாநிலங்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதாக மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டினாா்.
இதுதொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மத்திய அரசு தென் மாநிலங்களைத் தொடா்ந்து புறக்கணித்து வருவதற்கு மேலும் ஓா் உதாரணம் உருவாகியுள்ளது. மத்திய அரசின் 2023-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், செயற்கை அறிவூட்ட மேம்பாட்டுக்காக 3 சீா்மிகு நிறுவனங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கானத் தோ்வில் கல்வியில் சிறந்து விளங்கும் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் நகரங்களில் உள்ள உயா் கல்வி நிலையங்கள் விண்ணப்பித்தன. ஆனால், தென் மாநிலங்களில் உள்ள சிறந்த உயா் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் புறக்கணிக்கப்பட்டு, கான்பூா் (உத்தர பிரதேசம்), ரோபாா் (பஞ்சாப்), தில்லி ஆகிய ஐ.ஐ.டி நிறுவனங்கள் இந்தத் திட்டத்துக்குத் தோ்வு செய்யப்பட்டன.
இந்தத் திட்டத்தில் தென் மாநிலங்களிலிருந்து ஓா் உயா் கல்வி நிறுவனம்கூட தோ்வு பெறாதது மத்திய அரசு மீது சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் பிளவுவாத சிந்தனை, சமூகத்தில் தொடங்கி கல்வி வரை அனைத்திலும் தீவிரமடைந்து வருகிறது என்றாா் அவா்.