செய்திகள் :

சென்னை: காதல் ஜோடியை மிரட்டிய கும்பல் - ஆன்லைன் மூலம் பணத்தை பறித்ததால் சிக்கிய பின்னணி!

post image

வில்லிவாக்கத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், படப்பையை அடுத்த மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணைக் காதலித்து வந்திருக்கிறார். சம்பவத்தன்று மணிமங்கலம் பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், காதல் ஜோடியை மிரட்டியுள்ளது. பின்னர் இளைஞரிடம் எங்க ஏரியா பெண்ணிடம் நீ எப்படி பழகலாம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதன்பிறகு அந்தக் கும்பல், வில்லிவாக்கம் இளைஞரை சரமாரியாக தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதோடு இளைஞரை மிரட்டி ஆன்லைன் மூலம் 10,000 ரூபாயை பறித்திருக்கிறது. மர்ம கும்பல் தாக்கியதில் காயமடைந்த இளைஞர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

கைது

இதையடுத்து வில்லிவாக்கம் இளைஞர், மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் தாம்பரம் துணை கமிஷனர் பவன்குமார் மேற்பார்வையில் உதவி கமிஷனர் சுந்தர், இன்ஸ்பெக்டர் டில்லிபாபு ஆகியோர் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆன்லைன் மூலம் பணத்தை மிரட்டி வாங்கியது சதீஷ் எனத் தெரியவந்தது. பின்னர் சதீஷைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தியதில் இந்த சம்பவத்தில் மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்த லோகேஷ்வரன், அருண் உள்பட சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்தனர். இதில் சதீஷ் மீது கொலை வழக்கு உள்ளது. தொடர்ந்து போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

`காதலிக்க மறுத்த ராணுவ வீரரின் காதலி மீது ஆசிட் வீச்சு' - சோசியல் மீடியா காதலனை ஏவிய பெண்

ஆசிட் வீசிய பெண்உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அம்ரோஹா மாவட்டத்தில் இருக்கும் திக்ரி என்ற கிராமத்தைச் சேர்ந்த சுகுனா(22) என்ற ஆசிரியை பள்ளிக்குச் சென்றுவிட்டு ஸ்கூட்டரில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந... மேலும் பார்க்க

மதுரை: கழிவறை ஜன்னல் வழியாக பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்த மின்வாரிய ஊழியர் கைது

கழிவறையில் மொபைல் போன் வைத்து சக பெண் ஊழியர்களை வீடியோ எடுத்த மின்வாரிய ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் வாடிப்பட்டி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆபாச வீடியோமதுரை மாவட்டத்திலுள்ள மின்வாரிய அ... மேலும் பார்க்க

மதுரை: போலீஸ் கஸ்டடியில் சிறுவன் மரணம்; இன்ஸ்பெக்டர், போலீஸாருக்கு 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை

விசாரணையில் உயிரிழந்த சிறுவன்மதுரை கோச்சடை பகுதியைச் சேர்ந்த ஜெயா என்பவரின் மகன் முத்து கார்த்திக் என்ற 17 வயதுச் சிறுவனை கடந்த 2019 ஆம் ஆண்டு ஒரு வழக்கு தொடர்பான விசாரணைக்காக எஸ்.எஸ்.காலனி காவல் நிலை... மேலும் பார்க்க

சென்னை: கலெக்ஷன் ஏஜென்ட்டிடம் ரூ.45 லட்சம் வழிப்பறி; ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்ட இளைஞர்களுக்கு சிறை

சென்னை, சின்மையா நகர், வேதா நகரில் வசித்து வருபவர் நாரயணன் (35). இவர் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வரும் சாந்தகுமார் என்பவரிடம் கலெக்ஷன் ஏஜெண்டாக வேலை செய்து வருகிறார். கோயம்பேடு மற்றும... மேலும் பார்க்க

கல்வராயன் மலை: கோழியை நோக்கிச் சீறிய துப்பாக்கி குண்டு - இளைஞரின் உயிரைக் காவு வாங்கியது எப்படி?

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்திருக்கிறது கல்வராயன் மலை. இங்கு 50 வருவாய் கிராமங்களும், 170-க்கும் மேற்பட்ட குக்கிராமங்களும் இருக்கின்றன. இந்த கிராமங்களைச் சேர்ந்த சிலர் சட்டவிரோதமாகவும், விலங்குகள... மேலும் பார்க்க

நெல்லை: கோழிகளைத் தூக்கிச் செல்ல முயன்ற சிறுத்தை; தொடர் அட்டகாசத்தால் அச்சத்தில் மக்கள்

நெல்லை மாவட்டம், பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், மிளா, சிங்கவால் குரங்கு, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.இந்த விலங்குகள்... மேலும் பார்க்க