செய்திகள் :

சென்னை: போதையில் நடந்த தகராறில் நடத்துநர் உயிரிழப்பு; பயணி கைது; நடந்தது என்ன?

post image

சென்னை மாநகர பேருந்து கழகத்தில் நடத்துநராக பணிபுரிந்து வருபவர் ஜெகன்குமார். நேற்று (அக்டோபர் 24), அவர் எம்.பி.கே நகர் முதல் கோயம்பேடு வரை செல்லும் பேருந்தில் பணியிலிருந்திருக்கிறார். வேலூரைச் சேர்ந்த கோவிந்தன் என்பவர் அண்ணா வளைவு பேருந்து நிறுத்தத்திலிருந்து அந்த பேருந்தில் ஏறியுள்ளார். கோவிந்தன் குடிபோதையில் இருந்திருக்கிறார்.

பயணி கைது

பேருந்தில் ஏறிய கோவிந்தனை டிக்கெட் எடுக்குமாறு ஜெகன்குமார் சொன்னபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில், இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஜெகன்குமார் நிலைதடுமாறி பேருந்திலிருந்து கீழே விழுந்துள்ளார்.

இதனையடுத்து, உடனடியாக இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், ஏற்கனவே ஜெகன்குமார் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனால், கோவிந்தன் மீது கொலை வழக்குப் பதிவு செய்து தற்போது காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

சென்னை: இளம்பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை - சஸ்பெண்ட் காவலர் சிக்கிய பின்னணி

தென்சென்னையைச் சேர்ந்த ராணி (பெயர் மாற்றம்) என்ற இளம்பெண், ஸ்பா ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 17.10.2024-ம் தேதி தன்னுடைய கணவருடன் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். வரும் வழியில் ... மேலும் பார்க்க

சென்னை: நைஜீரிய நெட்வொர்க்குடன் தொடர்பு; போதைப்பொருள் வழக்கில் முன்னாள் டிஜிபி மகன் கைது!

போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளை சென்னைப் போலீஸார் எடுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை நந்தம்பாக்கத்தில் கொக்கைன்... மேலும் பார்க்க

சென்னை: 5,230 நோட் பேடுகளுடன் கன்டெய்னர் கடத்தல்; கோடீஸ்வரனாக ஆசைப்பட்ட பட்டதாரியின் மாஸ்டர் பிளான்!

சீனாவிலிருந்து சரக்கு கப்பல் மூலம் சென்னை துறைமுகத்துக்கு கடந்த மாதம் கன்டெய்னரில் 34 கோடி ரூபாய் மதிப்பிலான note pad கொண்டு வரப்பட்டது. நோட் பேடு வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் துறைமுகத்தில் உள்ள சென்ன... மேலும் பார்க்க

கணவன் கொலையில் சிக்கிய மனைவி; உடந்தையாக இருந்த விசிக நிர்வாகியும் திடீர் தற்கொலை - நடந்தது என்ன?!

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகேயுள்ள கல்யாணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், ஆரணி அடுத்துள்ள பையூர் கிரா... மேலும் பார்க்க

சேலம்: அரசு மருத்துவமனையில் பெண் மீது தாக்குதல் - புகார் கொடுத்தும் வாங்க மறுத்ததா போலீஸ்?

சேலம் மாநகரில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக வந்து செல்... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: சிறுமிகள் பாலியல் வன்கொடுமை... கர்ப்பம்! - தலைமை ஆசிரியர் உட்பட இருவர் மீது குண்டாஸ்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆதி திராவிடர் நல ஆரம்பப் பள்ளியில், R.R குப்பத்தைச் சேர்ந்த 52 வயதான துரை அரசன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். அதே... மேலும் பார்க்க