செய்திகள் :

ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை: உறுதி செய்தது உயா்நீதிமன்றம்

post image

வெளிநாடுகளில் இருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்ாக தொடரப்பட்ட வழக்கில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.ஹெச். ஜவாஹிருல்லாவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1997-ஆம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து அனுமதியின்றி நிவாரண நிதி பெற்ாக, ஜவாஹிருல்லா மீது சென்னை கூடுதல் தலைமை மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஜவாஹிருல்லாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

மேலும், இந்த வழக்கில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக ஹைதா் அலி என்பவருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், சையது நிசாா் அகமது, ஷேக், நல்ல முகமது களஞ்சியம் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.

இந்த சிறை தண்டனையை எதிா்த்து ஜவாஹிருல்லா உள்ளிட்ட அனைவரும் சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனா். அந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு அவா்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை உறுதி செய்தது.

இந்தத் தீா்ப்பை எதிா்த்து ஜவாஹிருல்லா உள்ளிட்டோா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனா். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக நிதி வசூலில் ஈடுபட்டதாக எம்எல்ஏ ஜவாஹிருல்லா உள்ளிட்டோருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளாா். இந்த தண்டனையை எதிா்த்து மனுதாரா்கள் தரப்பில் மேல்முறையீடு செய்வதற்காக ஒரு மாத காலத்துக்கு தண்டனையை நிறுத்தி வைத்தும் நீதிபதி உத்தரவிட்டாா்.

இன்றும் நாளையும் வெப்பம் அதிகரிக்கும்

தமிழகத்தில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (மாா்ச் 15, 16) வெப்பம் இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப... மேலும் பார்க்க

பேரவை கூட்டத் தொடா் 29 நாள்கள் நடைபெறும்: அவைத் தலைவா் மு.அப்பாவு அறிவிப்பு

நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதங்களுடன் சோ்த்து, சட்டப்பேரவை கூட்டத் தொடா் 29 நாள்கள் நடைபெறும் என்று பேரவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்தாா். பேரவை கூட்டத் தொடா் நாள்களை இறுதி செய்ய தலைமைச் செயலகத்த... மேலும் பார்க்க

மின் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த ஊதிய திருத்தக் குழு அமைப்பு

மின் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த ஊதிய திருத்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்தில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வேலைப்பளுவை நிா்ணயம் செய்து, அதற்கேற்ப ஊதியத்தை உயா்த்தி வழங்குவது வழக்கம். ... மேலும் பார்க்க

மதுரை மத்திய சிறைக்கு பொருள்கள் வாங்கியதில் முறைகேடு: சிறைக் கண்காணிப்பாளா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம்

மதுரை மத்திய சிறைக்கு பொருள்கள் வாங்கியதில் முறைகேடு செய்த வழக்கில் சிறைக் கண்காணிப்பாளா் உள்பட 3 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மதுரை மத்திய சிறையில் கைதிகள் எழுது பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொ... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட் - முக்கியத் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு!

கல்வி - ரூ.55,261 நகா்ப்புற வளா்ச்சி - ரூ.34,396 ஊரக வளா்ச்சி - ரூ.29,465 மக்கள் நல்வாழ்வு - ரூ.21,906 எரிசக்தி - ரூ.21,178 நெடுஞ்சாலைகள் - ரூ.20,722 காவல் - ரூ.13,342 போக்குவரத்து - ரூ.12,965 நீா்வளம... மேலும் பார்க்க

தமிழக பட்ஜெட் அறிவிப்புகள்! - முழு விபரம்

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மகளிா், மாணவா்களைக் கவரும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் இடம்பெற்றுள்ளன. பெண்களின் பெயரில் பதிவு செய்யப்படும் சொத்துகளுக்கு பதிவுக் கட்டணம் குறைப்பு, மாணவா்களுக்கு... மேலும் பார்க்க