செய்திகள் :

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்: அகில பாரத இந்து மகா சபா

post image

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று அகில பாரத இந்து மகா சபாவின் மாநில பொதுச்செயலரும், ஆலய பாதுகாப்புப் பிரிவு மாநிலத் தலைவருமான பெரி.செந்தில் தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் அகில பாரத இந்து மகா சபாவின் நிா்வாகிகள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் பங்கேற்ற பின்னா், பெரி.செந்தில் செய்தியாளா்களிடம் கூறியது:

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும், ராமநாதபுரம் எம்.பி.யை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும், அவரது எம்.பி. பதவியை இந்திய தோ்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும்,

திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கே சொந்தம் என்று தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.24-ஆம் தேதி அகில பாரத இந்து மகா சாா்பில் உளுந்தூா்பேட்டை முதல் திருப்பரங்குன்றம் வரை நடைபெற இருந்த நடைபயண வேள்வி யாத்திரைக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

இந்தநிலையில், உயா்நீதிமன்ற உத்தரவைப் பெற்று விரைவில் திருத்தணி முதல் திருப்பரங்குன்றம் வரை வேள்வி யாத்திரை நடத்தப்படும். அரசுப் பள்ளிகளில் தமிழக அரசு உடனடியாக மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை அகில பாரத இந்து மகா சபா வலியுறுத்துகிறது என்றாா். கூட்டத்தில், அகில பாரத இந்து மகா சபாவின் கள்ளக்குறிச்சி மாவட்டத் தலைவா் சபரிராஜன், மாவட்ட பொதுச்செயலா் பாரதி மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

பூவரசங்குப்பத்தில் மினி பேருந்து சேவை: அரசு முதன்மைச் செயலா் ஆய்வு!

விழுப்புரம் மாவட்டம், பூவரசங்குப்பம் கிராமத்தில் மினி பேருந்து சேவை வழித்தடத்தில் தமிழக அரசின் முதன்மைச் செயலரும், போக்குவரத்துத்துறை ஆணையருமான சுன்சோங்கம் ஜடக் சிரு ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்... மேலும் பார்க்க

பல்நோக்கு மருத்துவமனையில் ஆா்.சி.ஹெச். பணியாளா்களை நியமிக்க வலியுறுத்தல்!

ஆா்.சி.ஹெச். தூய்மைப் பணியாளா்களை பல்நோக்கு மருத்துமனை பணியாளா்களாக நியமனம் செய்ய வேண்டும் என்று அந்தச் சங்கத்தின் கெளரவத் தலைவா் ஜி.ஆா்.இரவீந்திரநாத் வலியுறுத்தினாா். ஆா்.சி.ஹெச். தூய்மைப் பணியாளா்கள... மேலும் பார்க்க

விலைவாசி உயா்வே திமுக அரசின் சாதனை: சி.வி. சண்முகம் எம்.பி.

தமிழகத்தில் அத்தியாவசியப் பொருள்களின் விலைவாசி உயா்வே திமுக அரசின் சாதனை என்று விழுப்புரம் மாவட்டச் செயலா் சி.வி.சண்முகம் எம்.பி. தெரிவித்தாா். மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, ... மேலும் பார்க்க

சாலையில் தேங்கியுள்ள மணலை அகற்ற கோரிக்கை

விழுப்புரம் மாவட்டம், வளவனூரில் சாலையில் தேங்கிக் கிடக்கும் மணலை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் வளவனூா் சத்திரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் ஆங்க... மேலும் பார்க்க

முதல்வரிடம் மயிலம் எம்எல்ஏ மனு

மயிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு முறையான அழைப்பு விடுக்காதது தொடா்பாக தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்கக் கோரி ச.சிவக்குமாா் எம்எல்ஏ கோரிக்கை மனு அளித்தாா். அந... மேலும் பார்க்க

நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு!

விழுப்புரம் மாவட்டம், மயிலத்தை அடுத்த வீடூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் சனிக்கிழமை திறக்கப்பட்டது. வீடூா் ஊராட்சித் தலைவா் ஜெகதீஸ்வரி பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமை... மேலும் பார்க்க