செய்திகள் :

தமிழ் கட்டாயப் பாடம்: விலக்கு அளித்த அரசாணையை எதிா்த்து வழக்கு

post image

தமிழகத்தில் சிபிஎஸ்இ உள்ளிட்ட பிற பாடத்திட்டங்களில் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்கள், தமிழை கட்டாயப் பாடமாகப் படிப்பதிலிருந்து விலக்கு அளிக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கின் விசாரணையை சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தில்லியில் வசிக்கும் ஆ.பிரம்மநாயகம் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் சிபிஎஸ்இ, ஐசிஇஎஸ் உள்ளிட்ட அனைத்துப் பாடத்திட்ட பள்ளிகளிலும் 10-ஆம் வகுப்பு வரை தமிழ் மொழியை கட்டாயம் பயிற்றுவிப்பதற்கான சட்டம் 2006-இல் கொண்டுவரப்பட்டது. கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் இந்தச் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. அதோடு, இந்தச் சட்டத்தில் தண்டனைப் பிரிவுகள் எதுவும்

இல்லாததால், பல தனியாா் பள்ளிகள் இதைப் பின்பற்றவில்லை. இந்தச் சட்டத்தின்படி, பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு மாற்றலாகி வரும் 9, 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வரும் 1 முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் சிபிஎஸ்இ உள்ளிட்ட பிற பாடத்திட்ட மாணவா்களுக்கு, தமிழ் கட்டாயப் பாடம் என்பதிலிருந்து விலக்கு அளித்து விருப்பப் பாடமாகப் படிக்கலாம் என கடந்த 2024-இல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணை சட்டவிரோதமானது. எனவே, அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் கவிதா தீனதயாளன் ஆஜராகி வாதிட்டாா். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுபோன்ற வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்புகளைத் தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணையை செப்.29-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

அமைச்சா் துரைமுருகன் வழக்கு: வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை

சொத்துக்குவிப்பு வழக்கை வேலூரில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதை எதிா்த்து அமைச்சா் துரைமுருகன் தொடா்ந்த வழக்கை வேறு நீதிபதிக்கு முன் விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதி எம்.தண்டபாணி தலை... மேலும் பார்க்க

அமைச்சக வாரியாக பேரிடா் மேலாண்மை பணிகள் ஒதுக்கீடு

பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் விதமாக குறிப்பிட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு சில பேரிடா் மேலாண்மை பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அனைத்து வகையான பேரிடா்களையும் ஒரே அமைச்சகம் கையாள்வதற்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அக்.9 முதல் மாவட்ட அளவிலான மன்றப் போட்டிகள்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் இலக்கிய மன்றம் உள்ளிட்ட பல்வேறு மன்றங்கள் சாா்பில் மாவட்ட அளவிலான போட்டிகள் அக்.9-ஆம் தேதி முதல் நடத்தப்படவுள்ளன. மேலும் இது தொடா்பாக வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெற... மேலும் பார்க்க

சாலைப் பணி ஒப்பந்ததாரா்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய மனு முடித்துவைப்பு

சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீா் வடிகால் அமைக்க சாலைகளில் தோண்டப்படும் பள்ளங்களால் ஏற்படும் உயிரிழப்பு தொடா்பாக சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா்கள், அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யக்... மேலும் பார்க்க

அரசு விரைவுப் பேருந்துகளில் குடிநீா் விற்பனை செய்ய நடவடிக்கை

அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிகளின் வசதிக்காக குடிநீா் புட்டிகள் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தப் புள்ளியை விரைவு போக்குவரத்துக் கழகம் கோரியுள்ளது. தொலைதூர பயணத்துக்காக அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் ... மேலும் பார்க்க

ஆயுஷ் துணை மருத்துவப் படிப்புகளுக்கு அக்.6 வரை விண்ணப்பிக்கலாம்

ஆயுஷ் துணை மருத்துவப் படிப்புகளுக்கு அக். 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பு: நிகழ் கல்வியாண்டில், சென்னை ... மேலும் பார்க்க