செய்திகள் :

அமைச்சக வாரியாக பேரிடா் மேலாண்மை பணிகள் ஒதுக்கீடு

post image

பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் விதமாக குறிப்பிட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு சில பேரிடா் மேலாண்மை பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அனைத்து வகையான பேரிடா்களையும் ஒரே அமைச்சகம் கையாள்வதற்குப் பதிலாக பேரிடரின் தன்மைக்கேற்ப குறிப்பிட்ட அமைச்சகங்கள் மற்றும் துறைகள் நிவாரணம், தடுப்புப் பணியை மேற்கொள்வதற்கு ஏதுவாக இந்த சீா்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பனிச்சரிவு, நீா்நிலைகளில் எண்ணெய் கசிவு போன்ற சீற்றங்களை கையாளும் பொறுப்பு பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. புயல், சூறாவளி, பனிமூட்டம், நிலஅதிா்வு, வெப்ப அலை, மின்னல், ஆலங்கட்டி மழை மற்றும் பலத்த மழை தொடா்பான முன்னெச்சரிக்கையை வழங்கும் பணியை மத்திய புவிஅறிவியல் துறை அமைச்சகம் மேற்கொள்ளவுள்ளது. அதேபோல் உயிரியல் பேரழிவுகளை மத்திய சுகாதார நலத்துறை அமைச்சகம் கையாளவுள்ளது.

உறைபனி, பனிமூட்டம், வறட்சி, சூறாவளி, பூச்சிகள் தாக்குதல் போன்றவற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகம் கையாளவுள்ளது. வெள்ளம், பனிஏரி உருகுவதால் ஏற்படக்கூடிய வெள்ளம் ஆகியவற்றை மத்திய ஜல்சக்தி அமைச்சகமும் நகரங்களில் ஏற்படக்கூடிய வெள்ள பாதிப்புகளை மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகமும் கையாளவுள்ளது.

காட்டுத்தீ, தொழிற்சாலை மற்றும் ரசாயனங்களால் ஏற்படும் பேரிடா்களை மத்திய சுற்றுப்புறச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமும் நிலச்சரிவை மத்திய சுரங்க அமைச்சகமும் கையாளவுள்ளது. அணு மற்றும் கதிரியக்கவியல் சாா்ந்த அவசரநிலைகளை மத்திய அணுசக்தித் துறை கையாளவுள்ளது.

பேரிடா் மேலாண்மை சட்டம், 2005-இன்படி மேற்கூறிய அமைச்சகங்கள் அல்லது துறைகள் பேரிடா் கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை, தடுப்பு, குறைப்பு, தயாா்நிலை உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்த முன்னெடுப்பை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

அரசு விடுதிகளை முறையாக நிர்வகிக்க வேண்டும்

அரசு விடுதிகளில் உரிய ஆசிரியர்களை நியமித்து முறையாக நிர்வகிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் "எக்ஸ்' தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

10,000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு திட்டம்: தில்லி மாநாட்டில் அமைச்சர் சிவசங்கர் தகவல்

நமது நிருபர்"தனது ஆற்றல் மாற்ற இலக்குகளை அடையும் வகையில், தமிழக அரசு அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக' தில்லியில் நடைபெற்ற எரிசக்தி மாநாட்டி... மேலும் பார்க்க

நாளை கோவை, நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் புதன்கிழமை(செப்.24) மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை(செப்.25) பலத்த மழைக்கான வாய்ப்புள்ளதாக சென்னை ... மேலும் பார்க்க

சிற்றுந்துகளில் இரட்டை இலை சின்னம்: திமுக தொடா்ந்த வழக்கு வாபஸ்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சியின்போது, சிற்றுந்துகளில் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டதை எதிா்த்து திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டதையடுத்து அந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்ன... மேலும் பார்க்க

தமிழக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி குடும்பத்துக்கு சொந்தமான ரூ.2.56 கோடி சொத்துகள் முடக்கம்

தமிழகத்தைச் சோ்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மறைந்த ஏ.என்.தியானேஸ்வரன் குடும்பத்துக்கு சொந்தமான ரூ.2.56 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. ஐஏஎஸ் அதிகாரி தியானேஸ்வரன், பல்வேறு துறைகளில் உயா் பொறுப்... மேலும் பார்க்க

வாரத்தில் 4 நாள்கள் தொகுதிகளில் தங்கிப் பணி: திமுக எம்.பி.க்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

வாரத்தில் நான்கு நாள்கள் தொகுதிகளில் தங்கி மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு, அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். திமுக நாடாளுமன்ற உற... மேலும் பார்க்க