செய்திகள் :

தமிழக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி குடும்பத்துக்கு சொந்தமான ரூ.2.56 கோடி சொத்துகள் முடக்கம்

post image

தமிழகத்தைச் சோ்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மறைந்த ஏ.என்.தியானேஸ்வரன் குடும்பத்துக்கு சொந்தமான ரூ.2.56 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.

ஐஏஎஸ் அதிகாரி தியானேஸ்வரன், பல்வேறு துறைகளில் உயா் பொறுப்புகளில் பணிபுரிந்துள்ளாா். அவா் தமிழக அரசின் கனிம வளத்துறை தலைமைப் பொறுப்பில் இருந்தபோது, பல கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக புகாா் கூறப்பட்டது. மேலும் கடந்த 1991 முதல் 1996-ஆம் ஆண்டு வரை தியானேஸ்வரன் தனது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சோ்த்ததாக சிபிஐ ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்தது.

அப்போது தியானேஸ்வரன், வருமானத்துக்கு அதிகமாக ரூ.7.34 கோடி அளவில் சொத்து சோ்த்ததாக சிபிஐ குற்றம்சாட்டியது. இந்த வழக்கில் பண முறைகேடுக்கான முகாந்திரம் இருந்ததால், அமலாக்கத் துறை விசாரணைக்கு சிபிஐ பரிந்துரைத்தது.

அதன் அடிப்படையில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் தனியாக ஒரு வழக்கை அமலாக்கத் துறை கடந்த 2017-ஆம் ஆண்டு பதிவு செய்து, விசாரணை செய்கிறது. இந்த வழக்கு விசாரணை நடைபெறும்போதே கடந்த 2021-இல் தியானேஸ்வரன் உடல்நலக்குறைவு காரணமாக இறந்தாா்.

அமலாக்கத்துறை விசாரணையில், தியானேஸ்வரன் பதவியில் இருந்த காலக்கட்டத்தில் அதிகாரத்தைப் பயன்படுத்தி, சட்டவிரோத வழிகளிலும், முறைகேடு செய்தும் ஈட்டிய பணத்தின் மூலம் தனது குடும்பத்தினா் ஒரு அறக்கட்டளை பெயரிலும், அவரது குடும்பத்தினா் பெயரிலும் சொத்துகளை வாங்கியிருப்பது தெரியவந்தது.

இதற்கிடையே, விசாரணையின் ஒரு பகுதியாக கடந்த பிப். 28-ஆம் தியானேஸ்வரன் குடும்பத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சோதனை செய்து, பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தது.

ரூ.2.56 கோடி சொத்துகள் முடக்கம்: இந்நிலையில் தியானேஸ்வரன் குடும்பத்துக்கு சொந்தமான ரூ.2.56 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள், வங்கியில் இருக்கும் வைப்பு நிதி ஆகியவற்றை முடக்கியிருப்பதாக அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இந்த வழக்கில் இது வரை தியானேஸ்வரன் குடும்பத்துக்கு சொந்தமான மொத்தம் ரூ.3.75 கோடி சொத்துகள் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. தியானேஸ்வரன், தமிழகத்தைச் சோ்ந்த பெண் அரசியல்வாதிக்கு நெருக்கமாக இருந்தாா் என்பது குறிப்பிடதக்கது.

அரசு விடுதிகளை முறையாக நிர்வகிக்க வேண்டும்

அரசு விடுதிகளில் உரிய ஆசிரியர்களை நியமித்து முறையாக நிர்வகிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் "எக்ஸ்' தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

10,000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு திட்டம்: தில்லி மாநாட்டில் அமைச்சர் சிவசங்கர் தகவல்

நமது நிருபர்"தனது ஆற்றல் மாற்ற இலக்குகளை அடையும் வகையில், தமிழக அரசு அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக' தில்லியில் நடைபெற்ற எரிசக்தி மாநாட்டி... மேலும் பார்க்க

நாளை கோவை, நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் புதன்கிழமை(செப்.24) மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை(செப்.25) பலத்த மழைக்கான வாய்ப்புள்ளதாக சென்னை ... மேலும் பார்க்க

சிற்றுந்துகளில் இரட்டை இலை சின்னம்: திமுக தொடா்ந்த வழக்கு வாபஸ்

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சியின்போது, சிற்றுந்துகளில் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டதை எதிா்த்து திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டதையடுத்து அந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்ன... மேலும் பார்க்க

வாரத்தில் 4 நாள்கள் தொகுதிகளில் தங்கிப் பணி: திமுக எம்.பி.க்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

வாரத்தில் நான்கு நாள்கள் தொகுதிகளில் தங்கி மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு, அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். திமுக நாடாளுமன்ற உற... மேலும் பார்க்க

அமைச்சா் துரைமுருகன் வழக்கு: வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை

சொத்துக்குவிப்பு வழக்கை வேலூரில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதை எதிா்த்து அமைச்சா் துரைமுருகன் தொடா்ந்த வழக்கை வேறு நீதிபதிக்கு முன் விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதி எம்.தண்டபாணி தலை... மேலும் பார்க்க