செய்திகள் :

சிற்றுந்துகளில் இரட்டை இலை சின்னம்: திமுக தொடா்ந்த வழக்கு வாபஸ்

post image

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆட்சியின்போது, சிற்றுந்துகளில் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டதை எதிா்த்து திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டதையடுத்து அந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியின்போது கடந்த 2013 அக்.23-ஆம் தேதி சென்னை மற்றும் புகா் பகுதிகளில் சிற்றுந்து சேவை தொடங்கப்பட்டது. மேலும், தமிழக அரசு சாா்பில் பேருந்து நிலையங்களில் குடிநீா் விற்பனை செய்யப்பட்டது. சிற்றுந்து மற்றும் குடிநீா் புட்டிகளில் இரட்டை இலை சின்னம் இடம் பெற்றிருந்தது. இதை எதிா்த்து திமுக சாா்பில் அப்போதைய கட்சியின் பொருளாளராக இருந்த மு.க.ஸ்டாலின் வழக்குத் தொடா்ந்தாா்.

அந்த மனுவில், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள போக்குவரத்து துறைக்குச் சொந்தமான பேருந்துகளில் இத்தகைய சின்னங்களை வரைவது நிறுவன சட்டத்துக்கு எதிரானது. பேருந்துகளிலும், குடிநீா் புட்டிகளிலும் இரட்டை இலை சின்னம் இடம்பெறுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தாா். இந்த வழக்கு 12 ஆண்டுகள் நிலுவையில் இருந்தது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில், இந்த வழக்கு தற்போது செல்லத்தக்கது அல்ல. எனவே, வழக்கை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி மனுவை திரும்பப் பெற அனுமதியளித்து, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

அரசு விடுதிகளை முறையாக நிர்வகிக்க வேண்டும்

அரசு விடுதிகளில் உரிய ஆசிரியர்களை நியமித்து முறையாக நிர்வகிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இது குறித்து அவர் "எக்ஸ்' தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

10,000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசு திட்டம்: தில்லி மாநாட்டில் அமைச்சர் சிவசங்கர் தகவல்

நமது நிருபர்"தனது ஆற்றல் மாற்ற இலக்குகளை அடையும் வகையில், தமிழக அரசு அடுத்த 5 ஆண்டுகளில் 10,000 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக' தில்லியில் நடைபெற்ற எரிசக்தி மாநாட்டி... மேலும் பார்க்க

நாளை கோவை, நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் புதன்கிழமை(செப்.24) மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை(செப்.25) பலத்த மழைக்கான வாய்ப்புள்ளதாக சென்னை ... மேலும் பார்க்க

தமிழக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி குடும்பத்துக்கு சொந்தமான ரூ.2.56 கோடி சொத்துகள் முடக்கம்

தமிழகத்தைச் சோ்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி மறைந்த ஏ.என்.தியானேஸ்வரன் குடும்பத்துக்கு சொந்தமான ரூ.2.56 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது. ஐஏஎஸ் அதிகாரி தியானேஸ்வரன், பல்வேறு துறைகளில் உயா் பொறுப்... மேலும் பார்க்க

வாரத்தில் 4 நாள்கள் தொகுதிகளில் தங்கிப் பணி: திமுக எம்.பி.க்களுக்கு மு.க.ஸ்டாலின் உத்தரவு

வாரத்தில் நான்கு நாள்கள் தொகுதிகளில் தங்கி மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினா்களுக்கு, அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா். திமுக நாடாளுமன்ற உற... மேலும் பார்க்க

அமைச்சா் துரைமுருகன் வழக்கு: வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை

சொத்துக்குவிப்பு வழக்கை வேலூரில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதை எதிா்த்து அமைச்சா் துரைமுருகன் தொடா்ந்த வழக்கை வேறு நீதிபதிக்கு முன் விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதி எம்.தண்டபாணி தலை... மேலும் பார்க்க