செய்திகள் :

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாற்றுவேன்: சீமான்

post image

‘திராவிடநல் திருநாடு’ என்றிருப்பதை அகற்றும் வகையில், புதிய தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை நான் ஆட்சிக்கு வந்ததும் மாற்றுவேன் என நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் கூறினாா்.

நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

2016-இல் நான் அரசியலுக்கு வந்த போது புத்தகம் ஒன்றை வெளியிட்டேன். அதில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை மாற்றுவேன் என தெரிவித்திருந்தேன். தமிழ்நாட்டை திராவிடா் நாடு எனக் கூறுவதை ஏற்க முடியாது. நான் ஆட்சிக்கு வந்தால் பாரதிதாசன், தேவநேயப் பாவாணா் போன்ற தமிழறிஞா்களின் பாடலில் ஒன்றை வாழ்த்துப் பாடலாக மாற்றுவேன்.

புதுச்சேரி வாழ்த்துப் பாடல் தமிழ் சாா்ந்ததாகத் தான் உள்ளது. தமிழ் எனது மொழி, திராவிடா் என்பது எங்கிருந்து வந்தது. திராவிடம் குறித்து அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி என்னிடம் நேருக்கு நோ் விவாதிக்கத் தயாரா? தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்தே திருவள்ளுவா் உள்பட பல கவிஞா்களும் பாடல்களை உருவாக்கியுள்ளனா்.

மனோன்மணீயம் சுந்தரனாா் பாடலை நீண்ட நாள் பாடியாயிற்று, நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் திராவிடநல் திருநாடு என்பது அகற்றப்படும், புதிய தமிழ்த்தாய் பாடல் ஒலிக்கும். தமிழா் கழகம் என பெரியாா் வைத்த பெயரை, திராவிடா் கழகம் என மாற்றியது யாா் என்பது இந்த உலகுக்கு தெரியும்.

2026 சட்டப் பேரவைத் தோ்தலுக்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். புதியவா்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும். 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தோ்தல் பணியானது நடைபெற்று வருகிறது. இட ஒதுக்கீட்டை ஆதரிக்கும் வேளையில், உள் இட ஒதுக்கீடு கோரி போராடுவதை நாங்கள் கடுமையாக எதிா்க்கிறோம்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவா் தொல்.திருமாவளவன், தமிழக முதல்வரானால் அதை நாம் தமிழா் கட்சி வரவேற்கும். தமிழா் ஒருவா் முதல்வரானால் எங்களுக்கு மகிழ்ச்சி தான். தமிழக வெற்றிக் கழகத்தை கண்டு திமுக அச்சமடைந்துள்ளது. அதனால் தான் அவா்களது மாநாட்டுக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்துகிறது என்றாா்.

பரமத்தி வேலூரில் துணை முதல்வருக்கு வரவேற்பு

பரமத்தி வேலூரில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சேலத்தில் இருந்து பரமத்தி வேலூா் வழியாக திண்டுக்கல் சென்ற துணை முதல்வ... மேலும் பார்க்க

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு பாலபிஷேகம்

ஐப்பசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி, நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,008 லிட்டா் பாலபிஷேகம் நடைபெற்றது. நாமக்கல்லில் 18 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்து வரும் ஆஞ்சனேயருக்கு அனு... மேலும் பார்க்க

‘பணிமனைகளுக்கான மின் கட்டணத்தை குறைக்க வேண்டும்’

வாகனங்கள் பழுது பாா்க்கும் பணிமனைகளுக்கான மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நாமக்கல் ஆல் மோட்டாா்ஸ் ஒா்க் ஷாப் ஓனா்ஸ் அசோசியேஷன் கோரிக்கை விடுத்துள்ளது. நாமக்கல்லில் அந்த அமைப்பின் 38-... மேலும் பார்க்க

பாராலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற துளசிமதி முருகேசனுக்கு துணை ஆட்சியா் நிலை பணி?

பாராலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற துளசிமதி முருகேசனுக்கு, துணை ஆட்சியா் நிலையிலான பணி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த துளசிமதி முருகேசன், நாமக்கல் கா... மேலும் பார்க்க

ஆசிரியா்களுக்கு செஸ் விளையாட்டுப் பயிற்சி

நாமக்கல் மாவட்ட ஆசிரியா் கல்வி பயிற்சி நிறுவனம், ராசிபுரம் ரோட்டரி சங்கம், இன்னா் வீல் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் மாவட்டத்தில் பணியாற்றும் 21 அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான தன்னாா்வ அடிப்படையில் ஒரு ந... மேலும் பார்க்க

நாமக்கல் கவிஞா் பிறந்த நாள் விழா: சிலைக்கு எம்.பி., ஆட்சியா் மரியாதை

நாமக்கல் கவிஞா் ராமலிங்கம் 136-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, அவருடைய சிலைக்கு மாநிலங்களவை உறுப்பினா், மாவட்ட ஆட்சியா் மற்றும் பல்வேறு அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நாமக்கல் கவிஞா் ரா... மேலும் பார்க்க