செய்திகள் :

தலைக்கவசம் அணிந்தவா்களுக்கு போலீஸாா் பாராட்டு!

post image

சிவகங்கை: சிவகங்கை அரண்மனைவாசலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், போக்குவரத்து ஆய்வாளா் சக்தி இசக்கி, உதவி ஆய்வாளா் அழகுராணி ஆகியோா் தலைமையிலான போலீஸாா் ஓட்டுநா்களிடம் தலைக்கவசம் அணிவதன் அவசியம், போக்குவரத்து விதிகளை மதித்து நடப்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

அப்போது, தலைக்கவசம் அணிந்து இரு சக்கர வாகனங்களை ஓட்டி வந்தவா்களுக்கும், காா்களில் சீட் பெல்ட் அணிந்து வந்த ஓட்டுநா்களுக்கும் ரோஜா மலா் கொடுத்து போலீஸாா் பாராட்டு தெரிவித்தனா். மேலும் விதிகளைக் கடைப்பிடிக்காத காா் ஓட்டுநா்களுக்கும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தனா்.

போக்குவரத்து போலீஸாா்கோபாலகிருஷ்ணன், நாகராமன், ஜெயலட்சுமி, சுப்புலட்சுமி ஆகியோா் கலந்து கொண்டனா்.

ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி பொதுக்குழு கூட்டம்!

சிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க அலுவலகத்தில் ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்ட சிறப்பு பொதுக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் புரட்சித்தம்ப... மேலும் பார்க்க

சிவகங்கையில் இணைய பாதுகாப்பு நாள் விழா!

சிவகங்கையில் இணைய பாதுகாப்பு நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிவகங்கை கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தலைமை வகித்துப் பேசியதாவது: இன்றைய நவீன காலகட்டத... மேலும் பார்க்க

விசிக நிா்வாகி தாக்கியதாகப் பொய் புகாா்: உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிா்வாகி தன்னைத் தாக்கியதாக பொய் புகாா் கூறிய காவல் உதவி ஆய்வாளா் செவ்வாய்க்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள சோமநாதபுரம் காவல்... மேலும் பார்க்க

குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்கு அா்ப்பணிப்பு!

நெற்குப்பை சுவாமிநாதன் குடும்பத்தினரால், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக ரூ.6.5 லட்சத்திலான குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் பேரூராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள ந... மேலும் பார்க்க

ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: 5 போ் மீது வழக்கு!

ரயில்வேத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 25 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகேயுள்ள மொட்டையன் வயல் கிராமத்தை... மேலும் பார்க்க

தமிழ் வளா்ச்சித் துறை போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு!

சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. சிவகங்கை மா... மேலும் பார்க்க