செய்திகள் :

திருச்சி சிறையில் விசாரணைக் கைதி மர்ம மரணம்; மறு உடற்கூராய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

post image

திருச்சி மத்திய சிறையில் விசாரணைக் கைதி ஒருவர் மரணமடைந்த விவகாரத்தில் அவர் குடும்பத்தினர் சந்தேகம் எழுப்பியதால் மறு உடற்கூராய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை
உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரேவதி, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், "என் மகன் சுபின்குமார் (வயது 19) கஞ்சா வைத்திருந்ததாகக் கூறி பெரம்பலூர் காவல்துறையினர் அவன் மீது பொய் வழக்குப்பதிவு செய்ததால் திருச்சி மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக வைக்கப்பட்டார்.

கடந்த அக்டோபர் 24 ஆம் தேதி வலிப்பு நோயால் தண்ணீர் தொட்டியில் விழுந்து இறந்து விட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். என் மகன் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டதாகக் கூறுவது தவறு, அவனுக்கு ஒருபோதும் வலிப்பு நோய் வந்ததில்லை. சிறை அதிகாரிகள் கூறுவது முற்றிலும் தவறானது, சந்தேகத்திற்கு உரியது.

சிறைக் கைதி மர்ம மரணம்
சிறைக் கைதி மர்ம மரணம்

என் மகன் காவல்துறை விசாரணையில் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கலாம், அல்லது சிறை அதிகாரிகளின் அலட்சியத்தால் மரணம் அடைந்திருக்கலாம். அதனால் வழக்கு விசாரணையை சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும்.

அரசு இழப்பீடு வழங்க உத்தரவிட்டு, உயர் நீதிமன்றம் ஏற்கனவே ஒரு வழக்கில் பிறப்பித்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மறு உடற்கூராய்பு செய்ய உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் அழகுமணி ஆஜரானார். விசாரித்த நீதிபதி சுந்தர்மோகன், "திருச்சி அரசு மருத்துவமனையில் மறு உடற்கூராய்வு செய்து, கபின்குமாரின் உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டும்" என்று, இடைக்கால உத்தரவைப் பிறப்பித்து வழக்கை ஒத்தி வைத்தார்.

இந்த உத்தரவின் மூலம் திருச்சி மத்திய சிறையில் விசாரணைக் கைதியின் திடீர் மரணத்துக்கான உண்மையான காரணம் வெளிவரும் என்று சொல்லப்படுகிறது.

கரூர்: 3D கேமரா, சாலையை அளக்கும் பணி! - இரண்டாவது நாளாக CBI அதிகாரிகள் விசாரணை!

கரூர், வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி அந்த கட்சியின் தலைவர் விஜய் மேற்கொண்ட மக்கள் சந்திப்பு கூட்டத்தில் உரையாற்றும் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41... மேலும் பார்க்க

திருச்சி: இன்டர்வியூ-க்கு சென்ற இளம்பெண் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு; போலீஸ் தீவிர விசாரணை

திருச்சி மாவட்டம், சீனிவாச நகர் பகுதியைச் சேர்ந்தவர் மீரா ஜாஸ்மின் (வயது: 22). கல்லூரி படிப்பை முடித்த மீரா ஜாஸ்மின், வேலை தேடி விண்ணப்பித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று வேலை விஷயமாக நேர்முகத் தே... மேலும் பார்க்க

புனே: "ரூ.10,000-க்கு 10 ஆண்டு கொத்தடிமைகளாக இருந்தோம்" - கரும்பு வெட்டும் 27 தொழிலாளர்கள் மீட்பு

மகாராஷ்டிராவில் புனே, சோலாப்பூர் போன்ற மாவட்டங்களில் அதிக அளவு கரும்பு விளைவிக்கப்படுகிறது. கரும்பு வெட்டுவதற்காக தொழிலாளர்கள் அண்டை மாவட்டத்தில் இருந்து அழைத்து வரப்படுவது வழக்கம்.அது போன்று புனே அரு... மேலும் பார்க்க

சிவகாசி: அரசு ஒப்பந்த பணி வாங்கித் தருவதாக கூறி ரூ.55 லட்சம் மோசடி; போலி பி.டி.ஓ கைது

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பேராபட்டியைச் சேர்ந்த கண்ணன் (51) அச்சகம், டிசைனிங் மற்றும் கிரானைட் அறுக்கும் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.அந்நிறுவனத்தில் பேராபட்டியைச் சேர்ந்த சங்கரநாராயணன் பொறிய... மேலும் பார்க்க

``திருமணம் மீறிய உறவில் மனைவி'' - 2 குழந்தைகளை கொன்றுவிட்டு உயிரை மாய்த்துக் கொண்ட தொழிலாளி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகிலுள்ள தெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (42). இவருக்கும், ஆரணி அருகேயுள்ள ஆகாரம் கிராமத்தைச் சேர்ந்த பூங்கொடி (32) என்பவருக்கும் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ... மேலும் பார்க்க

திருப்பூர்: பட்டா மாறுதலுக்கு ரூ. 40 ஆயிரம் லஞ்சம்; கிராம நிர்வாக அலுவலர் கைது; சிக்கியது எப்படி?

திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் அருகே உள்ள சந்தவநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. தையல் தொழிலாளரான இவர் தனது தோட்டத்துக்கு வாரிசு அடிப்படையில், பட்டா பெயர் மாற்றம் செய்வதற்காக ஆன்லைனில் விண்ண... மேலும் பார்க்க