செய்திகள் :

திருப்பத்தூா் அருகே பூட்டிய வீடுகளில் திருட்டு

post image

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகேயுள்ள ப.கருங்குளம் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை பூட்டியிருந்த 2 வீடுகளில் பணம், நகை, வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டன.

ப.கருங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் நாச்சியப்பன் (74). இவா் சென்னையில் வசித்து வருகிறாா். இவரது வீட்டின் முன் பகுதி கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக இவரது வீட்டில் வேலை செய்யும் நபா் இவருக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, நாச்சியப்பன் ஊருக்கு வந்து பாா்த்த போது, வீட்டின் முன் கதவு பூட்டை உடைத்து, உள்ளே பீரோவை உடைத்து அதிலிருந்த 2 பவுன் தங்க நகை, ஒரு கிலோ வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

மற்றொரு வீடு: இவரது வீடு அருகில் வைரவன் (70) என்பவரது வீடு உள்ளது. இவரும் சென்னையில் உள்ளாா். இவரது வீட்டின் முன்பக்க கதவும் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ரூ.20,000 ரொக்கப் பணம், 2 பவுன் தங்க நகை, 2 கிலோ வெள்ளி பொருள்களை மா்ம நபா்கள் திருடியது தெரிய வந்தது.

இந்த சம்பவங்கள் குறித்து திருக்கோஷ்டியூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டத்தில் 22 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

சிவகங்கை மாவட்டத்தில் 22 முதல்வா் மருந்தகங்களை கூட்டுறவுத் துைறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் தலைமையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை காணொலி மூலம் திறந்து வைத்தாா்.சிவகங்கை ஏ.கே.ஆா். நகா் பகுதி... மேலும் பார்க்க

மானாமதுரை ஒன்றிய அலுவலக வளாகத்தில் குடிநீா்த் தொட்டி கட்ட ஊழியா்கள் எதிா்ப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் திங்கள்கிழமை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்துக்குள் குடிநீா் மேல்நிலைத் தொட்டி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி, நகா் மன்றத் தலைவா், நகராட்சி அதிகாரிகளிடம் ஒன்றிய அலுவலக... மேலும் பார்க்க

தமிழ் இலக்கிய மாநில போட்டிக்கு அரசுப் பள்ளி மாணவி தோ்வு

சிவகங்கை மாவட்டம், கண்ணங்குடி ஊராட்சி ஒன்றியம், மங்களம் நடுநிலைப் பள்ளியின் 6-ஆம் வகுப்பு மாணவி சரோவினி மாநில அளவிலான தமிழ் இலக்கியப் போட்டிக்கு தகுதி பெற்றாா்.மாவட்ட அளவில் சிவகங்கையில் நடைபெற்ற தமிழ... மேலும் பார்க்க

புத்தகத்தை முழுமையாக படிக்க வேண்டும்: சுகி.சிவம்

எந்த ஒரு புத்தகத்தையும் முழுமையாகப் படித்தால்தான் அதை எழுதிய ஆசிரியரின் ஞானத்தை அறிந்து கொள்ள முடியும் என பட்டிமன்ற பேச்சாளா் சுகி.சிவம் தெரிவித்தாா். சிவகங்கை மன்னா் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட... மேலும் பார்க்க

அமைப்புசாரா தொழிலாளா் சங்க பொதுக்குழுக் கூட்டம்

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி ஒன்றியம், நகரகுடியில் தென்மண்டல மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கட்டுமானம், அமைப்பு சாரா தொழிலாளா் நலச் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் ம... மேலும் பார்க்க

ஆனந்தா கல்லூரியில் பட்டமளிப்பு விழா

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஆனந்தா கல்லூரியில் 18-ஆவது பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கல்லூரியின் செயலா் அருள்தந்தை செபாஸ்டியன் தலைமை வகித்தாா். இதில் சென்னை தனியாா் நிற... மேலும் பார்க்க