செய்திகள் :

ஹோட்டல் ஜன்னல் வழியாக வீசி குழந்தை கொலை! அமெரிக்க பெண்ணிடம் விசாரணை!

post image

பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் ஹோட்டலின் ஜன்னல் வழியாக வீசப்பட்டு குழந்தையைக் கொன்றதாகக் கூறப்படும் அமெரிக்க பெண்ணை அந்நாட்டு அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரீஸிலுள்ள ஹோட்டலின் இரண்டாவது தளத்திலுள்ள ஜன்னலின் வழியாக பச்சிளம் குழந்தை ஒன்று நேற்று (பிப்.24) காலை வீசப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அங்கு விரைந்த அதிகாரிகள் உடனடியாக அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அது ஏற்கனவே பலியாகிவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: காணாமல் போன மலேசிய விமானம்: 11 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தேடுதல் வேட்டை!

ஐரோப்பாவிற்கு இளம் குழுவினரோடு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ள 18 வயதுடைய பெண் ஒருவர் தனது ஹோட்டல் அறையில் குழந்தையை பெற்றெடுத்து அங்குள்ள ஜன்னல் வழியாகக் வீசியிருக்கக் கூடும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், குழந்தைப் பெற்ற பெண் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பாரிஸ் காவல் துறையினரால் அந்த பெண் தற்போது காவலில் எடுக்கப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முன்னதாக, இந்த வழக்கை விசாரிக்கும் பணி குழந்தைகள் பாதுகாப்பு காவல் பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் இது கர்ப்பம் மறுப்பாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலையில் ஒரு பெண் பிரசவம் வரை தனது கர்ப்பத்தைப் பற்றி அறியாமலோ அல்லது அதனை முழுவதுமாக நிராகரித்தோ இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

கல்லூரியில் ஹோலி நிகழ்ச்சி ரத்து! ஆசிரியர்களை பூட்டி சிறை வைத்த மாணவர்கள்!

மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரிலுள்ள கல்லூரியில் ஹோலி நிகச்சிகள் ரத்து செய்யப்பட்டதினால் ஆசிரியர்களை அறைக்குள் வைத்து மாணவர்கள் பூட்டி சிறைப்பிடித்துள்ளனர்.இந்தூரிலுள்ள 133 ஆண்டுகள் பழமையான ஹோல்கர் ... மேலும் பார்க்க

சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் இரு நாள்களுக்கு நிறுத்தம்!

பராமரிப்புப் பணி காரணமாக சென்னை மாநகராட்சியின் இணையவழி சேவைகள் இரு நாள்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னை பெ... மேலும் பார்க்க

மனிதர்களைத் தாக்க முயன்ற செய்யறிவு ரோபோ? விடியோ வைரல்!

சீனாவில் ரோபோ ஒன்று மனிதர்களைத் தாக்க முற்படுவது போன்ற விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. சீனா நாட்டின் சைனீஸ் திருவிழா ஒன்றில் ஏராளமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் ஓர் பகுதியாக ஏஐ எனப்படும்... மேலும் பார்க்க

நின்றபடியே வேலை பார்ப்பவரா நீங்கள்? அப்போ, இது உங்களுக்குத் தான்!

மாறிவரும் 5ஜி யுகத்தின் வேகத்தில் வேலை செய்யும் முறைகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக மாறிவருகின்றன. ஓடி, ஓடி உழைத்த காலமெல்லாம் மலையேறிவிட்ட இந்த நவீன காலத்தில் உட்கார்ந்துகொண்டோ அல்லது ஒரே இடத்தி... மேலும் பார்க்க

சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஐ.டி.ரெய்டு

சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை அண்ணா சாலையில் தமிழ்நாடு மின்வாரியத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது, இங்குள்ள பசுமை எரிசக்தி பி... மேலும் பார்க்க

தென் மாநிலங்களின் குரலை நசுக்கத் திட்டமிடுகிறது மத்திய பாஜக அரசு: கனிமொழி

தொகுதி மறுசீரமைப்பு மூலமாக தென் மாநிலங்களின் குரலை மத்திய பாஜக அரசு நசுக்கத் திட்டமிடுகிறது என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தியாவின் அடிப்படை கூட்டாட... மேலும் பார்க்க