செய்திகள் :

பட்ஜெட்டில் அறிவித்த ரூ.5 லட்சம் கிரெடிட் கார்டு யாருக்கு? எப்படி விண்ணப்பிப்பது?

post image

lசிறு, குறு தொழில் நிறுவனங்களை நடத்துவோருக்கு, அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கடன் பெறும் வசதி கொண்ட கிரெடிட் கார்டு வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்திருந்தார்.

இதற்காக, கூடுதலாக ரூ.30,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்திருக்கிறது. சிறு, குறு தொழில் நிறுவனங்களை நடத்துவோர் தங்களது வணிகத்தை விரிவாக்குவதற்கு இந்த கடன் அட்டையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த கடன் அட்டையைப் பெற, சிறு தொழில் நிறுவனர், தனது நிறுவனத்தைப் பதிவு செய்து, அதற்கான தகுதிகள் இருக்கும்பட்சத்தில் கிரெடிக் கார்டு பெற முடியும்.

சிறு வணிக நிறுவனங்கள், கடைகள், சிறு, குறு தொழில் மற்றும் உற்பத்தி நிறுவனங்களை நடத்துவோர், இதில் பயன்பெற முடியும். இந்த கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிப்போரின் வங்கிப் பரிவர்த்தனைகள், தொழில் நிறுவனத்தின் நிலை என பல்வேறு விஷயங்களும் கருத்தில் கொள்ளப்படும்.

இந்த கடன் அட்டைக்கான பயன்பாட்டுக் காலம் ஓராண்டுகள். இந்த கடன் அட்டையைப் பெற, ஆண்டுக்கு ரூ.10 முதல் 25 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோரே தகுதி பெறுவார்கள். இந்த தகுதி உடையவர்கள் உதயம் (UDYAM) இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அதாவது msme.gov.in இணையதளத்துக்குச் சென்று குயிக் லிங்க்ஸ் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

அங்கு உதயம் ரெஜிஸ்டிரேஷன் (பதிவு) என்பதை தேர்வு செய்து, அதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களை பூர்த்தி செய்து பதிவேற்ற வேண்டும்.

இதையும் படிக்க.. குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் இதைச் செய்யாவிட்டால்?

இதுவரை சிறு, குறு நிறுவனமாக பதிவு செய்யப்படாத அல்லது புதிய தொழில் முனைவோர்களாக இருந்தால் இதுவரை பதிவு செய்யப்படாத தொழில்முனைவோர் என்ற வாய்ப்பைத் தேர்வு செய்து அதில் ஆதார் எண் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்டு, செல்போன் எண்ணை வழங்கினால் அதற்கு ஒரு ஓடிபி வரும், அதன் மூலம், ஒருவர் தனது அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

பிறகு, அவரது வணிக நிறுவனத்தின் விவரங்களைப் பதிவு செய்து, சமர்ப்பிக்கவும். இந்த விண்ணப்பத்தை மத்திய நிதியமைச்சகம் பரிசீலித்து தகுதி உடையவர்களுக்கு கிரெடிட் கார்டு வழங்கும் என்று கூறப்படுகிறது.

திணறும் பிரயாக்ராஜ்..! கும்பமேளாவுக்கு யாரும் வர வேண்டாம் - உள்ளூர் மக்கள் கோரிக்கை

மகா கும்பமேளாவுக்கு வரும் பக்தர்களால், தங்களது அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதால் பக்தர்கள் வர வேண்டாம் என்று உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும... மேலும் பார்க்க

பள்ளி விடுதியில் குழந்தை பெற்றெடுத்த 10ஆம் வகுப்பு மாணவி!

ஒடிசாவில் 10ஆம் வகுப்பு மாணவிக்கு பள்ளி விடுதியில் குழந்தை பிறந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளி தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். ஒடிசா மாந... மேலும் பார்க்க

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர்!

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் புனித நீராடினார்.உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நத... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியின் மதுபான கொள்கையால் ரூ.2,002 கோடி வருவாய் இழப்பு!

ஆம் ஆத்மியின் மதுபான கொள்கையால் ரூ.2,002 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புதியாக பதவியேற்றுள்ள தில்லி அரசு தெரிவித்துள்ளது.தில்லி முதல்வராக இருந்த அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆ... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியில் இரட்டிப்பான அஸ்ஸாம் பொருளாதாரம்: பிரதமர் மோடி

பாஜக ஆட்சியில் அஸ்ஸாமின் பொருளாதாரம் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அஸ்ஸாம் தலைநகர் குவாஹட்டியில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை இன்று (பிப். 25) பிரதமர் நரேந்திர... மேலும் பார்க்க

119 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் பிரபல கடையின் மாத வாடகை ரூ.3 கோடியா?

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் ஜாரா நிறுவனத்தின் மாத வாடகை சுமார் ரூ.3 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது இணையத்தில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.தெற்கு மும்பையின் கோட்... மேலும் பார்க்க