செய்திகள் :

மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துகிறார் முதல்வர்: அண்ணாமலை

post image

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவதாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,

யாருமே தொகுதி மறுவரையறை பற்றி பேசாத நிலையில் முதல்வர் ஏன் கபட நாடகமாடுகிறார்.

நாடாளுமன்ற தொகுதிகள் குறையும் என யார் சொன்னார்கள் என்பதை முதல்வர் தெரிவிக்க வேண்டும்.

தொகுதி மறுவரையறையில் தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கொண்டுவருவது எங்கள் கடமை.

முதல்வர் மு.க. ஸ்டாலின் மக்களிடம் பயத்தை ஏற்படுத்துகிறார். மக்கள் மனதில் பயத்தை ஏற்படுத்த முயலும் முதல்வரை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் எங்கள் எதிரி என திமுக கூறுகிறது. குருட்டு பூனை விட்டத்தில் பாய்வதைப் போன்று முதல்வர் பேசுகிறார். தொகுதி மறுவரையில் தமிழகத்துக்கு பாதிப்பு என யார் சொன்னது என்பதை முதல்வர் விளக்க வேண்டும். அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்று இது குறித்து கேள்வி எழுப்பும்.

பெயிண்ட் எடுத்துச் செல்லும் திமுகவினர் இந்திக்கு பதிலாக ஆங்கிலத்தை அழிக்க முயற்சிக்கின்றனர்.

மூன்று மொழிகள் படித்த சாதனையாளர்கள் யாரும் முதல்வர் கண்ணுக்குத் தெரியவில்லையா? திமுக குடும்பத்தில் உள்ள குழந்தைகள் மூன்று மொழிகள் படிப்பதும், தமிழ்நாட்டு மக்கள் இரு மொழி படிக்க வேண்டும் என்பதே திமுகவின் மொழிப் போராட்டம்.

பள்ளிக் கூடத்தில் மூன்றாவது மொழி என்ன என்பதை ஆசிரியர் பெற்றோர் கழகம் முடிவு செய்யும். ஒரு மாநில முதல்வர் முடிவு செய்ய முடியாது. மூன்றாவது மொழியாக கன்னடம் இருக்கலாம். மலையாளம் இருக்கலாம். அது அந்தந்தப் பகுதிகளைப் பொறுத்தது. ஹிந்திதான் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

இருமொழிக் கொள்கையால்தான் மாநிலம் முன்னேறியது என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்டார்.

விஜய்யுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை அரசியல் வியூக வகுப்பாளரும் ஜன் சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் இன்று (பிப். 25) சந்தித்துப் பேசினார்.தவெகவின் இரண்டாமாண்டு தொடக்கவிழா நாளை நடைபெறவுள்ள ந... மேலும் பார்க்க

சமத்துவத்தை சீர்குலைப்பது எங்கள் வேலையல்ல!

சமத்துவம் இருக்கும் இடத்தை குலைப்பது எங்கள் வேலையல்ல என மதுரை எம்.பி., சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ரூபாய் நோட்டில் உள்ள இந்தி மொழியை அழிக்க முடியுமா என மூ... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டங்களைக் காப்பியடிக்கிறது திமுக! -தமிழிசை சௌந்தரராஜன்

சென்னை : மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாத முதல்வர் மக்களால் வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று(பிப். 25) செய்தியாளர்களுடன் பேசும்போது தெரிவித்தார். புதி... மேலும் பார்க்க

'வரலாற்றில் மிகப்பெரும் பிழையை செய்ய நினைக்கிறது மத்திய பாஜக அரசு' - எஸ். ரகுபதி

தொகுதி மறுசீரமைப்பு மூலமாக வரலாற்றில் மிகப்பெரும் பிழையை செய்ய நினைக்கிறது மத்திய பாஜக அரசு என சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "தமிழ்நாடு மட்டுமல்... மேலும் பார்க்க

சென்னையில் குத்துச்சண்டை அகாதெமியைத் திறந்துவைத்தார் முதல்வர்!

சென்னை, கோபாலபுரத்தில் ரூ. 8 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 'கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாதெமி' கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(செவ்வாய்க்கிழமை) திறந்துவைத்தார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியி... மேலும் பார்க்க

பிப்.27 முதல் கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் பிப்ரவரி 27 முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில், தெற்கு கேரளா மற்றும் அதனை ஓட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல ... மேலும் பார்க்க