கோவையில் அமித் ஷா! பாஜகவினர் உற்சாக வரவேற்பு; காங். கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!
இந்திய அணிக்கு சுயதிருப்தி தேவையில்லை..! பிசிசிஐ செயலாளர் பேட்டி!
இந்திய அணி பெரிய போட்டிகளுக்காக தயாராக இருக்க வேண்டுமென பிசிசிஐ செயலாளர் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருந்த ஜெய் ஷா, தற்போது சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பதால், செயலாளர் பதவிக்கு தேவஜித் சைக்கியா சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். இவர் கிரிக்கெட், சட்டம், நிர்வாகம் எனப் பன்முகத் திறன் கொண்டவர்.
இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 2 போட்டிகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
இது குறித்து தேவஜித் சைக்கியா கூறியதாவது:
இந்த வெற்றிகளுக்காக நாம் சுயதிருப்திபட்டுக்கொள்ள தேவையில்லை. அரையிறுதி, இறுதிப் போட்டிகளுக்காக நாம் தயாராக இருக்க வேண்டும். அணியில் அனைவரும் நன்றாக விளையாடுகிறார்கள்.
ரோஹித் அடித்தார், விராட் கோலி சதம், ஹார்திக் பாண்டியா நன்றாக பந்துவீசினார். பாகிஸ்தானுடன் பெற்ற வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது.
துபையில் 70 சதவிகிதம் பேர் இந்திய அணிக்கு ஆதரவளித்தார்கள். சூழலும் மின்னூட்டியது. அனைவரும் இந்தியாவுக்காக பெருமைப்படுகிறோம் என்றார்.
குரூப் பி சுற்றில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் முதலிரண்டு இடங்களில் இருக்கின்றன.