செய்திகள் :

ஆஸி. - தெ.ஆ. போட்டி ரத்தானால் அரையிறுதிக்கு தகுதிபெறுவதில் சிக்கல்!

post image

சாம்பியன்ஸ் டிராபியில் மழையின் காரணமாக ஆஸி.-தெ.ஆ. ஆட்டம் தொடங்கபடவில்லை என்பதால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ராவல்பிண்டியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.

ராவல்பிண்டியில் மழை பெய்து வருவதால் போட்டிக்கான டாஸ் சுண்டப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த மழையின் காரணமாக போட்டி நடைபெறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஒருவேளை ஆட்டம் நடைபெறாவிட்டால் ஆஸி. அணிக்கும் தென்னாபிரிக்கா அணிக்கும் யார் அரையிறுதிக்கும் செல்வார்கள் என்பதில் சிக்கல் ஏற்படுமென கணிக்கப்படுகிறது.


2 (+2.140) புள்ளிகளுடன் குரூப் பி பிரிவில் தெ,ஆ. முதலிடத்திலும் ஆஸி. 2 (+0.475) 2ஆம் இடத்திலும் இருக்கின்றன.

என்னென்ன வாய்ப்புகள் இருக்கின்றன?

1. வெற்றியினால் மாற்றம் வரும்

  • போட்டி நடைபெறாவிட்டால் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளிகள் அளிக்கப்படும். கடைசி போட்டியில் இரு அணிகளும் வென்றால் இரண்டுமே அரையிறுதிக்கு தகுதிபெறும்.

2. தெ.ஆ.வெற்றி, ஆஸி. தோல்வியடைந்தால் என்னாகும்?

  • இங்கிலாந்துடன் தென்னாப்பிரிக்கா வென்றாலும் ஆப்கானிஸ்தானுடன் ஆஸி. தோற்றாலும் தென்னாப்பிரிக்கா அரையிறுதிக்கு தகுதிபெறும்.

  • இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் போட்டி பிப்.26இல் நடைபெறும். இது அரையிறுதிக்கான முக்கிய போட்டியாக இருக்கும்.

  • இதில் இங்கிலாந்து வென்றால் ஆஸி. 3 புள்ளிகளுடனே அரையிறுதிக்கு தகுதிபெறும்.

3. ஆஸி. வெற்றி, தெ.ஆ. தோல்வியடைந்தால் என்னாகும்?

  • இங்கிலாந்துடன் தென்னாப்பிரிக்கா தோல்வியும் ஆப்கானிஸ்தானுடன் ஆஸி. வென்றாலும் ஆஸி. அரையிறுதிக்கு தகுதிபெறும்.

  • ஆப்கன் இங்கிலாந்தை வீழ்தினால் 3 புள்ளிகளுடன் தெ.ஆ. தகுதிபெறும்.

  • இங்கிலாந்து, ஆப்கன் ஒரேயொரு போட்டிகளில் மட்டும் வென்றால் இரண்டுமே வெளியேறும்.

4. ஆஸி., தெ.ஆ. தோல்வியடைந்தால் என்னாகும்?

  • ஆஸி. தெ.ஆ. இரண்டும் தோல்வியுற்றால் ஆப்கன் - இங்கிலாந்து ஆட்டதில் ஒரு அணி அரையிறுதிக்கு தகுதிபெறும்.

  • 2ஆவது அணியாக ரன் ரேட் விகிதத்தில் ஆஸி. அல்லது தெ.ஆ. தேர்வாகும்.

முடிவு

மழையினால் ஆட்டம் ரத்தானால் அரையிறுதிக்கான வாய்ப்புகள் மேலும் கடினமாகும். இந்தப் போட்டி குறைவான ஓவர்கள் உடனாவது நடைபெற்றால் யார் வெற்றி பெறுகிறார்கள் அவர்கள் அரையிறுதிக்கு தகுதிபெறுவது குறிப்பிடத்தக்கது.

ஒருநாள் தரவரிசை: விராட் கோலி முன்னேற்றம்! முதலிடத்தில் கில்!

ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி முன்னேற்றம் பெற்றுள்ளார்.சர்வதேச கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வாரந்தோறும் புதன்கிழமை வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தவாரத்த... மேலும் பார்க்க

வாழ்வா? சாவா? போட்டியில் இங்கிலாந்து - ஆப்கன்! அரையிறுதி வாய்ப்பு யாருக்கு?

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 8-வது போட்டியில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் மோதும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானின் கராச்சி, ராவல்பிண்டி, ல... மேலும் பார்க்க

ரஞ்சி கோப்பையை வெல்லப் போவது யார்? டாஸ் வென்ற கேரளம் பந்துவீச்சு!

ரஞ்சி கோப்பையின் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற கேரளம் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் விதர்பாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கேரள கேப்டன் சச்சின் பேபி முத... மேலும் பார்க்க

தில்லி அசத்தல் பந்துவீச்சு: குஜராத் ஜெயண்ட்ஸ் 127 ரன்கள் சேர்ப்பு!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தில்லி அணியின் கேப்டன் மெக்-லானிங் முதலில் பந்துவீசுவதா... மேலும் பார்க்க

இந்திய அணிக்கு சுயதிருப்தி தேவையில்லை..! பிசிசிஐ செயலாளர் பேட்டி!

இந்திய அணி பெரிய போட்டிகளுக்காக தயாராக இருக்க வேண்டுமென பிசிசிஐ செயலாளர் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருந்த ஜெய் ஷா, தற்போது சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்... மேலும் பார்க்க

சர்வதேச கிரிக்கெட்டில் மிகப் பெரிய வீரராக உருவெடுக்கும் ஷுப்மன் கில்: ஹாசிம் ஆம்லா

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஷுப்மன் கில் மிகப் பெரிய வீரராக உருவெடுக்க உள்ளதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஹாசிம் ஆம்லா தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப... மேலும் பார்க்க