செய்திகள் :

வாழ்வா? சாவா? போட்டியில் இங்கிலாந்து - ஆப்கன்! அரையிறுதி வாய்ப்பு யாருக்கு?

post image

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 8-வது போட்டியில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் மோதும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானின் கராச்சி, ராவல்பிண்டி, லாகூர் ஆகிய நகரங்களில் நடைபெற்றுவருகிறது. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் ஹைபிரிட் முறையில் துபை பன்னாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் போட்டியில் இருந்து வெளியேறின.

அரையிறுதியில் வாய்ப்பு யாருக்கு?

குரூப் பி பிரிவில் எந்தெந்த அணிகள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் என்று இன்னும் முடிவாகவில்லை. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் ஒரு வெற்றி, ஒரு போட்டியில் முடிவில்லை என முதலிரண்டு இடங்களில் இருக்கின்றன.

இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளனர். இந்த நிலையில், யார் அரையிறுதிக்குத் தகுதி பெறுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும். மேலும், தனது கடைசி போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதிபெறும்.

ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்க அணிகள் மழையால் பாதிக்கப்பட்டதால், அந்த அணிகளுக்கு 3 புள்ளிகள் கிடைத்துள்ளன. அதுமட்டுமின்றி, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளும் கடைசிப் போட்டியில் வெற்றியாவது அல்லது ஒரு புள்ளிகளையாவது வென்றாக வேண்டியக் கட்டாயத்தில் இருக்கின்றன.

ஒருநாள் தரவரிசை: விராட் கோலி முன்னேற்றம்! முதலிடத்தில் கில்!

ஐசிசி ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி முன்னேற்றம் பெற்றுள்ளார்.சர்வதேச கிரிக்கெட் தரவரிசைப் பட்டியல் வாரந்தோறும் புதன்கிழமை வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி, இந்தவாரத்த... மேலும் பார்க்க

ரஞ்சி கோப்பையை வெல்லப் போவது யார்? டாஸ் வென்ற கேரளம் பந்துவீச்சு!

ரஞ்சி கோப்பையின் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற கேரளம் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது. ரஞ்சி டிராபி இறுதிப் போட்டியில் விதர்பாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற கேரள கேப்டன் சச்சின் பேபி முத... மேலும் பார்க்க

தில்லி அசத்தல் பந்துவீச்சு: குஜராத் ஜெயண்ட்ஸ் 127 ரன்கள் சேர்ப்பு!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற தில்லி அணியின் கேப்டன் மெக்-லானிங் முதலில் பந்துவீசுவதா... மேலும் பார்க்க

இந்திய அணிக்கு சுயதிருப்தி தேவையில்லை..! பிசிசிஐ செயலாளர் பேட்டி!

இந்திய அணி பெரிய போட்டிகளுக்காக தயாராக இருக்க வேண்டுமென பிசிசிஐ செயலாளர் கூறியுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருந்த ஜெய் ஷா, தற்போது சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக நியமிக்கப்... மேலும் பார்க்க

சர்வதேச கிரிக்கெட்டில் மிகப் பெரிய வீரராக உருவெடுக்கும் ஷுப்மன் கில்: ஹாசிம் ஆம்லா

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியின் ஷுப்மன் கில் மிகப் பெரிய வீரராக உருவெடுக்க உள்ளதாக தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஹாசிம் ஆம்லா தெரிவித்துள்ளார்.இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான ஷுப... மேலும் பார்க்க

திடலில் அத்துமீறி நுழைந்தவருக்கு வாழ்நாள் தடை..! பாதுகாப்பை பலப்படுத்தும் பாகிஸ்தான்!

ராவல்பிண்டி திடலில் அத்துமீறி நுழைந்த நபரால் சாம்பியன்ஸ் டிராபியில் பாதுகாப்பை பலப்படுத்த பிசிபி முடிவெடுத்துள்ளது.சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) நடத்துகின்றன. நடப... மேலும் பார்க்க