செய்திகள் :

தெலங்கானா சுரங்கம்: விபத்து இடத்தை நெருங்கியும் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை!

post image

தெலுங்கானா சுரங்கத்தில் விபத்து நடந்த இடத்தை மீட்புக் குழுவினர் நெருங்கிய நிலையில், விபத்தில் சிக்கியவர்களை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்டத்தில் சுரங்கம் அமைக்கும் பணியின்போது ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் பணியில் 5-வது நாளாக மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க : தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் குறைக்கப்படாது: அமித் ஷா

சுரங்கத்துக்குள் 14 கி.மீ. தொலைவில் விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர், ராணுவம், கடற்படை, எலிவளை சுரங்க தொழிலாளர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 4 நாள்களில் இல்லாத வகையில், இன்று மீட்புப் பணியில் முன்னேற்றம் கண்டுள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார்.

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை வீரர்கள், எலிவளை சுரங்க தொழிலாளர்கள் அடங்கிய 20 பேர் கொண்ட குழுவினர், சுரங்கத்தில் இறுதிவரை சென்று திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுரங்கத்தின் கடைசி 50 மீட்டர் முழுவதும் சேறும் இடிபாடுகளும் இருக்கும் நிலையில், இடிபாடிகளில் சிக்கியுள்ள யாரையும் கண்டறிய முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமையும் சுரங்கத்தில் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர், ஆனால், எவ்வித முன்னேற்றமும் அடையாததால் இரவு வெளியேறினர்.

வண்டல் மண் மற்றும் சுரங்கத்துக்குள் தண்ணீர் தொடர்ந்து பாய்வதால், மீட்புக் குழுவினரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், தொடர்ந்து மீட்புக் குழுவினர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, சுரங்கத்தின் மண் மாதிரிகளை சேகரித்துள்ள இந்திய புவியியல் ஆய்வுக் குழுவினர் மண்ணின் வலிமை மற்றும் பிற ஆய்வுகள் நடத்தி வருகிறார்கள்.

மேலும், சுரங்கத்துக்குள் சிக்கியிருப்பவர்களுக்கு தேவையான ஆக்ஸிஜன் தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது. மீட்புப் பணிகள் நடைபெறும் இடத்தில் அமைச்சர்கள் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.

அருணாசல் நெடுஞ்சாலை திட்டம் விரைவில் நிறைவடையும்: கிரண் ரிஜிஜு

அருணாச்சலப் பிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களையும் இணைக்கும் நெடுஞ்சாலை திட்டம் விரைவில் நிறைவடையும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.கம்லே மாவட்டத்தில் உள்ள போசிம்லாவில் நியிஷி பழங்குடி... மேலும் பார்க்க

தில்லி பேரவையின் துணைத் தலைவராகிறார் மோகன் சிங்!

தில்லி சட்டப்பேரவையின் துணைத் தலைவர் பதவிக்கு பாஜக எம்எல்ஏ மோகன் சிங் பிஷ்ட் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். முன்னதாக கடந்த பிப். 24 அன்று குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு விஜேந்தர் குப்தா பேரவையின் தலைவராக... மேலும் பார்க்க

சமூகத் தீமைகளை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் துறவிகள்: முர்மு

இந்தியாவில் உள்ள துறவிகள் சமூகத் தீமைகளை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தின் கர்ஹா கிராமத்தில் உள்ள பாகே... மேலும் பார்க்க

பழக் கழிவுகளால் கான்கிரீட் வலிமையை அதிகரிக்கலாம்: புதிய யோசனை சொல்லும் இந்தூர் ஐஐடி!

கான்கிரீட்டில் உணவுக் கழிவுகளைக் கலப்பதன் மூலம் கட்டுமானத்தின் வலிமையை அதிகரிக்கலாம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.கான்கிரீட் வலிமையை அதிகரிப்பது குறித்து ஐஐடி இந்தூர் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்து... மேலும் பார்க்க

கும்பமேளா நிறைவு நாள்: இதுவரை 81 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்!

உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவின் கடைசி நாளான இன்று இதுவரை 81 லட்சம் பேர் புனித நீராடியுள்ளதாக அந்த மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் மகாசிவராத்திரி விழா கோலாகலமாகக் ... மேலும் பார்க்க

கௌரி சங்கர் கோயிலில் தில்லி முதல்வர் வழிபாடு!

மகாசிவராத்திரியை முன்னிட்டு கௌரி சங்கர் கோயிலில் தில்லி முதல்வர் ரேகா குப்தா வழிபாடு மேற்கொண்டார். நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா இன்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் மகா சிவராத்திரிய... மேலும் பார்க்க