செய்திகள் :

திமுக வேரோடு பிடுங்கப்படும்: அண்ணாமலை

post image

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.

கோவை பீளமேடு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் புதிய அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர் பொன். ராதா கிருஷ்ணன், பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும் கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன், பாஜக சட்டப்பேரவைத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட கட்சியின் மூத்தத் தலைவர்கள், நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசியதாவது, ``ஒவ்வொரு மாநிலமாக பாஜக ஆட்சியை பிடித்துக் கொண்டு வருகிறது. பாஜகவின் வளர்ச்சி தமிழக மக்கள் மனதில் நிலைகொள்ள ஆரம்பித்து விட்டது. வேகமாக வளர்வதால் நம்மீது கல்லை வீசுகின்றனர்.

இதையும் படிக்க:மேடையில் இப்படி பொய் சொல்லலாமா? - விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!

நடுத்தர மக்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி யோசித்து மருந்தகத்தை ஆரம்பித்தால், அதனை தமிழக அரசு அனுமதி மறுக்கிறது. ஆனால், அதையே காப்பியடித்து முதல்வர் மருந்தகம் என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலின் ஆரம்பித்துள்ளார். 2026-ல் திமுக வேரோடு பிடுங்கப்பட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்.

புதிய தலைவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது நமது கடமை. அரவிந்த் கேஜரிவால் , மம்தா பேனர்ஜி வீட்டுக்கு சென்றுவிட்டார்கள். அவர்களைப் போலவே, நீங்கள் என்ன குட்டிக்கரணம் போட்டாலும் 2026-ல் வீட்டுக்கு அனுப்பப்படுவது உறுதி. சிவபெருமான்போல விஷத்தை உண்டு வெற்றியை நோக்கி நாம் செல்ல வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

கும்மிடிப்பூண்டி ரயில் சேவையில் மாற்றம்!

தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையேயான தண்டவாள பராமரிப்புப் பணிகளின் க... மேலும் பார்க்க

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவராக ஆர். பாலகிருஷ்ணன் நியமனம்!

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர். பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.புகழ்பெற்ற தமிழ்மொழி அறிஞரும், ஆட்சிப்பணி வல... மேலும் பார்க்க

தொகுதிகள் மறுசீரமைப்பு: மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தமிழகத்துக்கு தண்டனையா? -திமுக

தமிழகத்தில் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ள விவகாரம் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தமிழகத்துக்கு கிடைக்கும் தண்டனையா என்று மத்திய அரசுக்கு திமுக கேள்வியெழுப்பியுள்ளது.மக்களவைத் தொகுதிகளின் மறுச... மேலும் பார்க்க

கோவையில் அமையவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு தடையில்லா சான்று!

கோவையில் அமையவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று அளித்தது.கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று மக்களவைத் தேர்தலின்போது முதல்வர் மு... மேலும் பார்க்க

'மேடையில் இப்படி பொய் சொல்லலாமா? - விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!

விஜய் முதலில் தான் சொல்வதை கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "விஜய், தனது கட்சியின் ஆண்டு விழாவில் மத்திய அரசு, மாநில அரசு இரண... மேலும் பார்க்க

தமிழகத்தில் நாளை முதல் கனமழை!

தமிழகத்தில் நாளை (பிப். 27) முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, பிப். 26ல் தென்தமிழக மாவட்டங்கள்... மேலும் பார்க்க