செய்திகள் :

'மேடையில் இப்படி பொய் சொல்லலாமா? - விஜய்க்கு அண்ணாமலை கேள்வி!

post image

விஜய் முதலில் தான் சொல்வதை கடைப்பிடிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"விஜய், தனது கட்சியின் ஆண்டு விழாவில் மத்திய அரசு, மாநில அரசு இரண்டையும் குறை சொல்லியிருக்கிறார். ஏன் எல்கேஜி மாணவர்கள் போல சண்டையிட்டுக்கொள்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

நான் சொல்கிறேன், விஜய் என்ன பேசுகிறாரோ அதனை முதலில் அவர் பின்பற்ற வேண்டும். உங்கள் குழந்தைக்கு மட்டும் 3 மொழிகள், உங்கள் பள்ளியில் 3 மொழி கற்பிக்கிறீர்கள், ஆனால் தவெக தொண்டர்களின் குழந்தைகளுக்கு மட்டும் 2 மொழியா? விஜய் சொல்வதை அவர் முதலில் கடைப்பிடிக்க வலியுறுத்துகிறேன். நீங்கள் ஏன் பொய் சொல்கிறீர்கள்? மேடையில் இப்படி பொய் சொல்லலாமா?

விஜய் 'கெட் அவுட் கையெழுத்து இயக்கம் ஆரம்பித்தார். ஆனால், விஜய்க்கு பிரசாந்த் கிஷோர் 'கெட் அவுட்' சொல்லிவிட்டார். தேர்தல் ஆலோசனை சொல்லும் பிரசாந்த் கிஷோர் 'நான் கெட் அவுட்' என சொல்லிவிட்டு கையெழுத்திடாமல் சென்றுவிட்டார். அந்த நடவடிக்கைக்கு என்ன மரியாதை என பிரசாந்த் கிஷோரே காண்பித்துவிட்டார். எங்கும் யாரும் எந்த மொழியையும் திணிக்கவில்லை.

திருச்சியில் மார்ச் 22 ஆம் தேதி பாஜக பொதுக்கூட்டம் நடத்தவிருக்கிறோம். அந்த கூட்டத்தைப் பாருங்கள். திமுகவைவிட ஒருபடி மேலாக நாங்கள் பேசுவோம். அவர்கள் பாணியிலே அவர்களுக்கு பதிலடி கொடுப்போம்.

இதையும் படிக்க | பெண்கள் தலை வழுக்கையாக கோதுமை காரணமா?

பிகாரில் இருந்துவந்த ஒருவருக்கு தமிழ்நாட்டில் மரியாதை கிடைப்பது மகிழ்ச்சிதான். ஆனால் அவருக்கு ஒரே ஒரு கேள்வி, ஏன் அரசியல் ஆலோசனை தந்து திமுகவை ஏன் ஆட்சியில் அமர வைத்தீர்கள் என்று கேட்கிறேன். அதற்காக தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் உங்களை மன்னிக்கமாட்டார்கள். நல்லது செய்தால் யாருக்கு வேண்டுமானாலும் தமிழ்நாட்டு மக்கள் மரியாதை அளிப்பார்கள் என்று கூறினார்.

விஜய் கட்சி ஆண்டு விழாவில் செய்தியாளர் மீதான தாக்குதலை வன்மையான கண்டிக்கிறேன்' என்று கூறியுள்ளார்.

இன்றைய கட்சியின் 2-ம் ஆண்டு விழாவில் , தமிழகத்துக்கான கல்வி நிதியை மத்திய அரசு தராதது குறித்துப் பேசிய விஜய், 'மத்திய அரசும் மாநில அரசும் எல்கேஜி, யுகேஜி மாணவர்கள் போல சண்டையிட்டுக்கொள்கிறார்கள். ஏற்கெனவே பேசிவைத்துக்கொண்டு ஹேஷ்டேக் போட்டு சமூக வலைத்தளங்களில் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்' என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத் தலைவராக ஆர். பாலகிருஷ்ணன் நியமனம்!

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர். பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.புகழ்பெற்ற தமிழ்மொழி அறிஞரும், ஆட்சிப்பணி வல... மேலும் பார்க்க

தொகுதிகள் மறுசீரமைப்பு: மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தமிழகத்துக்கு தண்டனையா? -திமுக

தமிழகத்தில் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ள விவகாரம் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தமிழகத்துக்கு கிடைக்கும் தண்டனையா என்று மத்திய அரசுக்கு திமுக கேள்வியெழுப்பியுள்ளது.மக்களவைத் தொகுதிகளின் மறுச... மேலும் பார்க்க

திமுக வேரோடு பிடுங்கப்படும்: அண்ணாமலை

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார்.கோவை பீளமேடு பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் புதிய அலுவலகத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று திறந்து வை... மேலும் பார்க்க

கோவையில் அமையவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு தடையில்லா சான்று!

கோவையில் அமையவிருக்கும் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று அளித்தது.கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று மக்களவைத் தேர்தலின்போது முதல்வர் மு... மேலும் பார்க்க

தமிழகத்தில் நாளை முதல் கனமழை!

தமிழகத்தில் நாளை (பிப். 27) முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, பிப். 26ல் தென்தமிழக மாவட்டங்கள்... மேலும் பார்க்க

தமிழ்நாட்டில் ரூ. 5,000 கோடி முதலீட்டில் காலணி உற்பத்தி! 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு!

தமிழ்நாட்டில் ரூ.5,000 கோடி முதலீட்டில் தோல் அல்லாத காலணி தொழிற்சாலை அமைக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று(பிப். 26) கையெழுத்தானது. இதன் மூலமாக கரூர், பெரம்பலூர் மா... மேலும் பார்க்க