செய்திகள் :

குழந்தைகளைத் தேரில் இருந்து தூக்கி வீசும் விநோத சடங்கு? தடை செய்ய கோரிக்கை!

post image

பெங்களூரு : அண்டை மாநிலமான கர்நாடகத்தில் குழந்தைகளைத் தேரில் இருந்து கீழே தூக்கி வீசும் விநோத நேர்த்திக்கடன் வழிபாட்டு முறைக்கு தடை செய்ய கோரிக்கை வலுத்துள்ளது.

காடிவாடிகியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற மகாலக்‌ஷ்மி கோயிலில் நடைபெறும் வருடாந்திர திருவிழாவின் ஒருபகுதியாக இந்த விநோத நேர்த்திக்கடன் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

இதற்காக தேரின் மேலே அமர்ந்துகொள்ளும் பூசாரி தம்மிடம் மேலே கொண்டு வந்த தரப்படும் குழந்தைகளை கீழே திரண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களை நோக்கி வீசுவார். அப்போது, தரையில் நிற்கும் பக்தர்கள் பெரிய போர்வையை விரித்துப் பிடித்துக்கொள்வர்.

தேரிலிருந்து கீழே வீசப்படும் குழந்தைகள் ஒவ்வொன்றாக போர்வைகளில் வந்து விழுந்ததும் அந்த குழந்தைகளை அவர்தம் பெற்றோர்கள் எடுத்துச் செல்கின்றனர்.

இதன்மூலம், லக்‌ஷ்மிதேவியின் அருள் பரிபூரணமாகக் கிட்டும் என்பது இங்குள்ள மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. மேலும், குழந்தைகளின் ஆரோக்கியத்துக்கும் இந்த சடங்கு நல்லதாக அமையுமென்றும் அவர்கள் நம்புகின்றனர்.

கடந்த காலங்களில் சுமார் 20 அடி உயரத்திலிருந்து குழந்தைகள் கீழே வீசப்பட்டு வந்த நிலையில், இப்போது பாதுகாப்பு கருதி அந்த உயரம் 6 அடியாகக் குறைக்கப்பட்டு இந்த சடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த விசேஷ சடங்கைக் காண கர்நாடகம் மட்டுமல்லாது அண்டை மாநிலங்களிலிருந்தும் திரளான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தருவதைக் காண முடிகிறது. கர்நாடகத்தின் வடக்கு பகுதிகளில் அதிலும் குறிப்பாக, பல்லாரி, கோப்பல், பாகல்கோட் உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த சடங்கு மிகப் பிரபலம்.

இத்தகைய வினோத சடங்குகளால் குழந்தைகளுக்கு உடலளவிலும் மனதளவிலும் பாதிப்பு ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதையடுத்து, இந்த சடங்கை தடை செய்ய வேண்டுமென சமூக செயல்பாட்டாளர்கல் தரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கை வலியுறுத்தப்பட்டு வருகிறது.

அதனடிப்படையில், வடக்கு கர்நாடக மாவட்டங்களில் பல இடங்களில் அதிகாரிகள் இந்த சடங்கை நடத்தவிடாமல் தடுக்க முயற்சிகள் எடுத்தாலும், அதையும் மீறி கிராம மக்கள் தங்கள் பகுதிகளில் இந்த வினோத வழிபாட்டு முறையை இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றனர்.

பெண் ஐபிஎஸ் அதிகாரியை கொல்ல முயற்சி: 4 காவலா்களுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

உத்தர பிரதேசத்தில் பெண் ஐபிஎஸ் அதிகாரியை கொல்ல முயற்சித்த வழக்கில் 4 காவலா்களுக்கு பரேலி சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. கடந்த 2010-ஆம் ஆண்டு பெண் ஐபிஎஸ... மேலும் பார்க்க

பெட்ரோலில் எத்தனால் கலப்பு 20%-க்கு மேல் அதிகரிக்க முடிவு

பெட்ரோலில் எத்தனால் கலப்பதை 20 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக நீதி ஆயோக் சாா்பில் குழு உருவாக்கப்பட்டுள்ளது என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் பு... மேலும் பார்க்க

கும்பமேளாவில் பங்கேற்காத ராகுலை ஹிந்துக்கள் புறக்கணிக்க வேண்டும்- மத்திய அமைச்சா் வலியுறுத்தல்

மகா கும்பமேளாவில் பங்கேற்காத காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, சிவசேனை (உத்தவ்) கட்சித் தலைவா் உத்தவ் தாக்கரே ஆகியோரை ஹிந்துக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மத்திய சமூக நீதித் துறை இணையமைச்சா் ராம்தாஸ்... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்க விபத்து: 2 நாள்களில் மீட்புப் பணிகள் நிறைவடையும்- மாநில அமைச்சா் உத்தம்குமாா் ரெட்டி

தெலங்கானாவில் சுரங்கத்தில் சிக்கியவா்களை மீட்கும் பணிகள் 2 நாள்களில் நிறைவடையும் என்று மாநில நீா்பாசனத் துறை அமைச்சா் உத்தம்குமாா் ரெட்டி புதன்கிழமை தெரிவித்தாா். தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்... மேலும் பார்க்க

குற்றம் இழைக்கும் அரசியல் தலைவா்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க நாடாளுமன்றத்துக்கே அதிகாரம்: மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

குற்றவாளிகள் என்று தீா்ப்பளிக்கப்படும் அரசியல் தலைவா்கள் தோ்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிப்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெ... மேலும் பார்க்க

சிபிஎஸ்இ பள்ளிகள் அதே பெயரில் கிளைகள் தொடங்க அனுமதி- விதிமுறைகள் தளா்வு

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின்கீழ் (சிபிஎஸ்இ) செயல்படும் பள்ளிகள், அதே பெயா் மற்றும் இணைப்பு எண்ணுடன் கிளைகள் தொடங்க அனுமதிக்கும் வகையில் விதிமுறைகள் தளா்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். ம... மேலும் பார்க்க