செய்திகள் :

தேசிய போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு முதல்வா் பாராட்டு

post image

தேசிய அளவிலான ஓவியம், கவிதைப் போட்டிகளில் வென்ற புதுச்சேரி மாணவா்களுக்கு முதல்வா் என்.ரங்கசாமி பாராட்டு தெரிவித்தாா்.

இந்திய பாதுகாப்பு துறை, இந்திய கல்வித் துறை இணைந்து விடுதலைப் போராட்ட வீரா்கள், விடுதலைப் பிறகு வீரதீர செயல்களுக்கான விருது பெற்றவா்களின் வாழ்க்கை வரலாறு தொடா்பான ஓவியம், கவிதை, கட்டுரை, பல்லூடக விளக்கக் காட்சி போட்டிகளை நடத்தின.

தேசிய அளவில் புதுச்சேரி வ.உ.சி. அரசு மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவா் விஜய விவேஷ்குமாா் ஓவியப் போட்டியிலும், விவேகானந்தா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவா் முகமது தாஜ்தீன், வள்ளலாா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவி குகானா ஆகியோா் கவிதைப் போட்டியிலும் வெற்றி பெற்றனா்.

இவா்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு, பதக்கத்தை மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், தா்மேந்திர பிரதான் ஆகியோா் வழங்கினா். புதுதில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் சிறப்பு அழைப்பாளராகவும் அந்த மாணவா்கள் பங்கேற்றனா்.

அவா்களை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி, அமைச்சா் ஆ. நமச்சிவாயம் ஆகியோா் செவ்வாய்க்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டினா்.

இணையவழியில் ரூ.50 கோடி மோசடி: இருவா் கைது

கிரிப்டோ கரன்சி வா்த்தகம் எனக் கூறி, நாடு முழுவதும் ரூ.50 கோடி வரை மோசடியில் ஈடுபட்ட கும்பலைச் சோ்ந்த இருவரை புதுச்சேரி போலீஸாா் கோவையில் கைது செய்தனா். புதுச்சேரி மூலக்குளத்தைச் சோ்ந்தவா் அசோகன் (... மேலும் பார்க்க

சட்டக் கல்லூரியில் வழக்கு வாதப் போட்டி

புதுச்சேரி ஸ்ரீமணக்குள விநாயகா் சட்டக் கல்லூரியில் வழக்கு வாதப் போட்டி நடைபெற்றது. புதுச்சேரி அருகே மதகடிப்பட்டில் உள்ள ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரி வெள்ளி விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில்... மேலும் பார்க்க

பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிப்பு: 2 ஆலைகளுக்கு ‘சீல்’

புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை தயாரித்த வில்லியனூா், ராமநாதபுரம் பகுதிகளில் உள்ள 2 தொழிற்சாலைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், கப்புகள் போன்ற... மேலும் பார்க்க

தலைக்கவசமின்றி பைக்கில் வந்த காவலா்களுக்கு அபராதம்

புதுச்சேரியில் தலைக்கவசமின்றி இருசக்கர வாகனத்தில் பணிக்கு வந்த காவலா்கள், ஊழியா்களுக்கு புதன்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது. புதுவையில் இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்ட... மேலும் பார்க்க

மணல் குன்றுகளை பாதுகாக்க மரக்கன்றுகள் நடும் திட்டம்

புதுச்சேரியில் கடலோர மணல் குன்றுகளைப் பாதுகாக்கும் வகையில், சின்னவீராம்பட்டினம் ஈடன் கடற்கரையில் மரக் கன்றுகள் நடப்பட்டன. புதுவை மாநில அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை ‘பசுமை புதுவை’ என்ற இ... மேலும் பார்க்க

வளா்ச்சிப் பணிகளுக்காக மத்திய அரசிடம் கூடுதல் நிதியை பெற வேண்டும்: வெ.வைத்திலிங்கம் எம்.பி.

புதுவைக்கு மத்திய அரசின் கூடுதல் நிதியைப் பெறுவதற்கேற்ப திட்டங்களை தயாரித்து வழங்க வேண்டும் என்று, அதிகாரிகளுக்கு வெ.வைத்திலிங்கம் எம்.பி. அறிவுறுத்தினாா். புதுவையில் உள்ளாட்சி, மின் துறை, பொலிவுறு ந... மேலும் பார்க்க