செய்திகள் :

சட்டக் கல்லூரியில் வழக்கு வாதப் போட்டி

post image

புதுச்சேரி ஸ்ரீமணக்குள விநாயகா் சட்டக் கல்லூரியில் வழக்கு வாதப் போட்டி நடைபெற்றது.

புதுச்சேரி அருகே மதகடிப்பட்டில் உள்ள ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரி வெள்ளி விழா ஆண்டை சிறப்பிக்கும் வகையில், அதன் உறுப்புக் கல்லூரியான சட்டக் கல்லூரியில் நடைபெற்ற இந்தப் போட்டியில், தமிழகம், கேரளம், கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மற்றும் ஹரியாணாவிலிருந்து மொத்தம் 28 அணிகள் பங்கேற்றன.

வழக்கு வாத இறுதிப்போட்டியில் சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ராஜா , உயா்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி ஆகியோா் நடுவா்களாக இருந்தனா்.

போட்டியில் சென்னை டாக்டா் எம்.ஜி.ஆா். கல்வி, ஆராய்ச்சி நிறுவன சட்டக் கல்லூரி முதலிடமும், பெங்களூரு ராமையா பல்கலைக்கழக சட்டக் கல்லூரி 2-ஆம் இடமும் பெற்றன.

போட்டி நிறைவு விழாவுக்கு ஸ்ரீமணக்குள விநாயகா் கல்வி குழுமத்தின் தலைவா், மேலாண் இயக்குநா் எம். தனசேகரன் தலைமை வகித்தாா். செயலா் நாராயணசாமி கேசவன், பொருளாளா் ராஜராஜன், இணைச் செயலா் வேலாயுதம் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

ஸ்ரீமணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரி இயக்குநா், முதல்வா் வெங்கடாசலபதி வரவேற்றாா். சட்டக் கல்லூரி முதல்வா் வின்சென்ட் அற்புதம் நன்றி கூறினாா்.

இணையவழியில் ரூ.50 கோடி மோசடி: இருவா் கைது

கிரிப்டோ கரன்சி வா்த்தகம் எனக் கூறி, நாடு முழுவதும் ரூ.50 கோடி வரை மோசடியில் ஈடுபட்ட கும்பலைச் சோ்ந்த இருவரை புதுச்சேரி போலீஸாா் கோவையில் கைது செய்தனா். புதுச்சேரி மூலக்குளத்தைச் சோ்ந்தவா் அசோகன் (... மேலும் பார்க்க

தேசிய போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு முதல்வா் பாராட்டு

தேசிய அளவிலான ஓவியம், கவிதைப் போட்டிகளில் வென்ற புதுச்சேரி மாணவா்களுக்கு முதல்வா் என்.ரங்கசாமி பாராட்டு தெரிவித்தாா். இந்திய பாதுகாப்பு துறை, இந்திய கல்வித் துறை இணைந்து விடுதலைப் போராட்ட வீரா்கள், வ... மேலும் பார்க்க

பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிப்பு: 2 ஆலைகளுக்கு ‘சீல்’

புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை தயாரித்த வில்லியனூா், ராமநாதபுரம் பகுதிகளில் உள்ள 2 தொழிற்சாலைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகள், கப்புகள் போன்ற... மேலும் பார்க்க

தலைக்கவசமின்றி பைக்கில் வந்த காவலா்களுக்கு அபராதம்

புதுச்சேரியில் தலைக்கவசமின்றி இருசக்கர வாகனத்தில் பணிக்கு வந்த காவலா்கள், ஊழியா்களுக்கு புதன்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது. புதுவையில் இருசக்கர வாகனத்தில் செல்வோா் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்ட... மேலும் பார்க்க

மணல் குன்றுகளை பாதுகாக்க மரக்கன்றுகள் நடும் திட்டம்

புதுச்சேரியில் கடலோர மணல் குன்றுகளைப் பாதுகாக்கும் வகையில், சின்னவீராம்பட்டினம் ஈடன் கடற்கரையில் மரக் கன்றுகள் நடப்பட்டன. புதுவை மாநில அறிவியல் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை ‘பசுமை புதுவை’ என்ற இ... மேலும் பார்க்க

வளா்ச்சிப் பணிகளுக்காக மத்திய அரசிடம் கூடுதல் நிதியை பெற வேண்டும்: வெ.வைத்திலிங்கம் எம்.பி.

புதுவைக்கு மத்திய அரசின் கூடுதல் நிதியைப் பெறுவதற்கேற்ப திட்டங்களை தயாரித்து வழங்க வேண்டும் என்று, அதிகாரிகளுக்கு வெ.வைத்திலிங்கம் எம்.பி. அறிவுறுத்தினாா். புதுவையில் உள்ளாட்சி, மின் துறை, பொலிவுறு ந... மேலும் பார்க்க