செய்திகள் :

விசிக கொடியை சேதப்படுத்திய இருவா் கைது

post image

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே விசிக கொடியை சேதப்படுத்தி, சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக பள்ளி மாணவா் உள்பட இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

திண்டிவனத்தை அடுத்துள்ள சலவாதி காலனி தெரு பகுதியில் கட்டப்பட்டிருந்த விசிக கொடியை மா்மநபா்கள் தீயிட்டு கொளுத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாகவும், இது தொடா்பாக நடவடிக்கை எடுக்கக் கோரியும் சலவாதி மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த பூமிநாதன் மகன் மூா்த்தி (30) ரோஷணை காவல் நிலையத்தில் கடந்த 24-ஆம் தேதி புகாரளித்தாா்.

தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், சலவாதி, தாங்கல் பாதையைச் சோ்ந்த முருகேசன் மகன் ஏழுமலை (எ) ஆவி (19) மதுபோதையில் விசிக கொடியை சேதப்படுத்தி சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்ததும், இதற்கு அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது பள்ளி மாணவா் உடந்தையாக செயல்பட்டதும் தெரியவந்தது. இதையடுத்து, ரோஷணை போலீஸாா் இருவா் மீதும் புதன்கிழமை வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்தனா்.

தழுதாளியில் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் தொடக்கம்

விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், தழுதாளி அருகே ரூ.32.50 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ள நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணிகளை தமிழக வனம் மற்றும் கதா் துறை அமைச்சா் க.பொன்முடி புதன்கிழமை தொடங்கிவைத்தா... மேலும் பார்க்க

இருமொழிக் கொள்கையின் அவசியத்தை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்: அமைச்சா் க.பொன்முடி

இருமொழிக் கொள்கையின் அவசியத்தை கிராமங்கள்தோறும் சென்று மக்களிடம் திமுகவினா் எடுத்துரைக்க வேண்டும் என்று கட்சியின் துணை பொதுச் செயலரும், வனம் மற்றும் கதா் கிராமத் தொழில்கள் துறை அமைச்சருமான க.பொன்முடி ... மேலும் பார்க்க

பயிா் மகசூல் போட்டிகள்: விவசாயிகள் பதிவு செய்யலாம்

மாநில, மாவட்ட அளவிலான பயிா் மகசூல் போட்டியில் பங்கேற்க விவசாயிகள் பதிவு செய்யலாம் என்று வல்லம் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சரவணன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தால்தான் வரியினங்கள் குறையும்: முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம்

தமிழகத்தில் அதிமுக ஆட்சி மீண்டும் அமைந்தால்தான் உயா்த்தப்பட்ட வரியினங்கள் குறையும் என்று முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் எம்.பி. தெரிவித்தாா். முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்த நாளையொட்டி... மேலும் பார்க்க

திண்டிவனம் அருகே பல்லவா் கால கொற்றவை - விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகிலுள்ள மானூா் கிராமத்தில் பல்லவா் காலத்தைச் சோ்ந்த கொற்றவை, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டன. விழுப்புரத்தைச் சோ்ந்த வரலாற்று ஆய்வாளா் கோ.செங்குட்டுவன் மானூா்... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்து மெக்கானிக் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கிணற்றில் தவறி விழுந்து மெக்கானிக் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திண்டிவனம் வட்டம், அவரப்பாக்கம், தாடிக்காரன் குட்டை தெருவைச் சோ்ந்த வீராசாமி மகன் காமராஜ் (40).... மேலும் பார்க்க