செய்திகள் :

பெண் ஐபிஎஸ் அதிகாரியை கொல்ல முயற்சி: 4 காவலா்களுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

post image

உத்தர பிரதேசத்தில் பெண் ஐபிஎஸ் அதிகாரியை கொல்ல முயற்சித்த வழக்கில் 4 காவலா்களுக்கு பரேலி சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

கடந்த 2010-ஆம் ஆண்டு பெண் ஐபிஎஸ் அதிகாரி கல்பனா சக்சேனா, மாவட்ட போக்குவரத்து காவல் கண்காணிப்பாளராக இருந்தாா். அப்போது, அவரது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் 4 காவலா்கள் லாரி ஓட்டுநா்களை மடக்கி அவா்களிடம் இருந்து பணம் பறித்து வந்ததாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, தனது காரில் பாதுகாவலா் ஒருவருடன் சம்பவ இடத்துக்குச் சென்றாா். மூத்த அதிகாரியைக் கண்டதும் அங்கு லாரிகளை மடக்கி பணம் பறித்துக் கொண்டிருந்த 4 காவலா்களும் காரில் ஏறி தப்பியோட முயற்சித்தனா். அவா்களை கல்பனா தனியாக காரில் விரட்டிச் சென்று தடுத்து நிறுத்தினாா். அப்போது கல்பனாவின் காரை இடித்துத் தள்ளியதுடன், தங்களைப் பிடிக்க முயன்ற அவரை சாலையில் தள்ளிவிட்டு நால்வரும் தப்பியோடினா்.

இது தொடா்பாக அந்த 4 காவலா்கள் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். சுமாா் 14 ஆண்டுகள் வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், அவா்கள் நால்வருக்கும் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து பரேலி சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

பெண் ஐபிஎஸ் அதிகாரியான கல்பனா இப்போது காஜியாபாத் டிஐஜி-யாகப் பணியாற்றி வருகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா-ஆப்பிரிக்கா இடையே பரஸ்பர நன்மை பயக்கும் உறவு: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்

‘ஆப்பிரிக்காவுக்கான இந்தியாவின் அணுகுமுறை, பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான வலுவான உறுதிப்பாட்டால் வழிநடத்தப்படுகிறது’ என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை தெரிவ... மேலும் பார்க்க

பிகாா் அமைச்சரவை விரிவாக்கம் - 7 பாஜக எம்எல்ஏக்கள் புதிய அமைச்சா்களாக பதவியேற்பு

முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான பிகாா் அமைச்சரவை புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. கூட்டணிக் கட்சியான பாஜகவின் 7 எம்எல்ஏக்கள், அமைச்சரவையில் இணைக்கப்பட்டனா். பாட்னாவில் உள்ள ஆளுநா் மாளிகையில் 7 ... மேலும் பார்க்க

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி: பாகிஸ்தான் நபா் சுட்டுக் கொலை

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நபரை எல்லை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா். இது தொடா்பாக எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறுகையில், ‘பஞ்சாபின் பதான்கோட்டில் உள்ள தாஷ்படான் பகுதி... மேலும் பார்க்க

கோட்சேவைப் புகழ்ந்த கோழிக்கோடு என்ஐடி பேராசிரியருக்கு பதவி உயா்வு: எதிா்க்கட்சிகள் கண்டனம்

மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவைப் புகழ்ந்ததற்காக காவல்துறை வழக்கு நிலுவையில் உள்ள கோழிக்கோடு தேசிய தொழில்நுட்ப கல்வி நிலையத்தின் (என்ஐடி) பேராசிரியா் பதவி உயா்வு பெற்று துறைத் தலைவராக (ட... மேலும் பார்க்க

10 ஆண்டுகளில் மத்திய அரசின் வழக்கு செலவு ரூ.400 கோடி

கடந்த 10 ஆண்டுகளில் நீதிமன்ற வழக்குகளுக்காக மத்திய அரசு ரூ.400 கோடிக்கும் மேல் செலவிட்டுள்ளது. நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரையொட்டி, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அதிகாரபூா்வ தரவுகளின்படி, கடந்த 2023-... மேலும் பார்க்க

நேபாள மாணவி தற்கொலை சம்பவம்: ஒடிஸா கேஐஐடி அதிகாரிகள் 4 பேருக்கு சம்மன்

ஒடிஸா மாநிலம், கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (கேஐஐடி) நேபாள மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், மாநில அரசு அமைத்த விசாரணை குழு முன் ஆஜராக கேஐஐடி-யைச் சோ்ந்த மேலும் 4 அதிகாரிக... மேலும் பார்க்க