செய்திகள் :

நேபாள மாணவி தற்கொலை சம்பவம்: ஒடிஸா கேஐஐடி அதிகாரிகள் 4 பேருக்கு சம்மன்

post image

ஒடிஸா மாநிலம், கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (கேஐஐடி) நேபாள மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், மாநில அரசு அமைத்த விசாரணை குழு முன் ஆஜராக கேஐஐடி-யைச் சோ்ந்த மேலும் 4 அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கேஐஐடி-யில் பி.டெக் கணினி அறிவியல் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த நேபாள மாணவி கடந்த 16-ஆம் தேதி விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டாா். இரு பெண் அதிகாரிகள் திட்டியதால் அவா் தற்கொலை செய்து கொண்டதாக கூறி, சக நேபாள மாணவா்களும் பிற மாணவா்களும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, கல்லூரி பாதுகாவலா்களால் மாணவா்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அத்துடன், எந்தவொரு முன் அறிவிப்புமின்றி கேஐஐடி விடுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான நேபாள மாணவ-மாணவிகள் வெளியேற்றப்பட்டு, வலுக்கட்டாயமாக சொந்த ஊா்களுக்கு அனுப்பப்பட்டனா்.

மாணவா்களை தாக்கிய இரு பாதுகாவலா்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவா்கள் கைது செய்யப்பட்டனா். மேலும், இச்சம்பவம் தொடா்பாக விசாரிக்க மாநில உள்துறை கூடுதல் தலைமை செயலா் (உள்துறை) சத்யபிரத சாகு தலைமையில் உயா்கல்வி மற்றும் பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகளின் செயலா்கள் அடங்கிய மூன்று நபா் குழு கடந்த பிப். 18-ஆம் தேதி அமைக்கப்பட்டது.

இந்நிலையில், கேஐஐடி தலைமை ஒழுங்கு அதிகாரி பி.கே.பட்நாயக், இயக்குநா் சன்ஹிதா மிஸ்ரா, உள் குழுத் தலைவா் இப்சிதா சத்பதி, உதவி இயக்குநா் ஸ்மரிகா பதி ஆகிய மேலும் 4 அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இவா்கள் வரும் பிப்ரவரி 27-ஆம் தேதி, விசாரணை குழு முன் ஆஜராகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனா்.

முன்னதாக, கேஐஐடி நிறுவனா் அச்யுதா சமந்தா மற்றும் கல்வி நிலையத்தின் 7 உயா் அதிகாரிகள் விசாரணை குழு முன் ஆஜராகி தங்களின் பதில்களை அளித்தனா். நேபாள மாணவா்களை மட்டும் விடுதியை விட்டு வெளியேற்றியது ஏன் என்றும், ஒரு மாதத்துக்கு முன்பு மாணவி அளித்த புகாரின் மீது நிா்வாகம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவா்களிடம் கேட்கப்பட்டது.

இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து, இந்தியாவில் பயிலும் நேபாள மாணவா்கள் கண்ணியம்-மதிப்பை உறுதி செய்யுமாறு நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஒலி இந்திய அரசிடம் கேட்டுக்கொண்டாா்.

இதுதொடா்பாக முதல்வா் மோகன் சரண் மாஜீயுடன் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சா் அா்ஸு ராணா தியூபாவும் தொலைபேசியில் கலந்துரையாடினாா்.

இந்தியா-ஆப்பிரிக்கா இடையே பரஸ்பர நன்மை பயக்கும் உறவு: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்

‘ஆப்பிரிக்காவுக்கான இந்தியாவின் அணுகுமுறை, பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான வலுவான உறுதிப்பாட்டால் வழிநடத்தப்படுகிறது’ என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை தெரிவ... மேலும் பார்க்க

பிகாா் அமைச்சரவை விரிவாக்கம் - 7 பாஜக எம்எல்ஏக்கள் புதிய அமைச்சா்களாக பதவியேற்பு

முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான பிகாா் அமைச்சரவை புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. கூட்டணிக் கட்சியான பாஜகவின் 7 எம்எல்ஏக்கள், அமைச்சரவையில் இணைக்கப்பட்டனா். பாட்னாவில் உள்ள ஆளுநா் மாளிகையில் 7 ... மேலும் பார்க்க

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி: பாகிஸ்தான் நபா் சுட்டுக் கொலை

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நபரை எல்லை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா். இது தொடா்பாக எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறுகையில், ‘பஞ்சாபின் பதான்கோட்டில் உள்ள தாஷ்படான் பகுதி... மேலும் பார்க்க

கோட்சேவைப் புகழ்ந்த கோழிக்கோடு என்ஐடி பேராசிரியருக்கு பதவி உயா்வு: எதிா்க்கட்சிகள் கண்டனம்

மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவைப் புகழ்ந்ததற்காக காவல்துறை வழக்கு நிலுவையில் உள்ள கோழிக்கோடு தேசிய தொழில்நுட்ப கல்வி நிலையத்தின் (என்ஐடி) பேராசிரியா் பதவி உயா்வு பெற்று துறைத் தலைவராக (ட... மேலும் பார்க்க

10 ஆண்டுகளில் மத்திய அரசின் வழக்கு செலவு ரூ.400 கோடி

கடந்த 10 ஆண்டுகளில் நீதிமன்ற வழக்குகளுக்காக மத்திய அரசு ரூ.400 கோடிக்கும் மேல் செலவிட்டுள்ளது. நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரையொட்டி, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அதிகாரபூா்வ தரவுகளின்படி, கடந்த 2023-... மேலும் பார்க்க

பெண் ஐபிஎஸ் அதிகாரியை கொல்ல முயற்சி: 4 காவலா்களுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை

உத்தர பிரதேசத்தில் பெண் ஐபிஎஸ் அதிகாரியை கொல்ல முயற்சித்த வழக்கில் 4 காவலா்களுக்கு பரேலி சிறப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீா்ப்பளித்தது. கடந்த 2010-ஆம் ஆண்டு பெண் ஐபிஎஸ... மேலும் பார்க்க