செய்திகள் :

சிபிஎஸ்இ பள்ளிகள் அதே பெயரில் கிளைகள் தொடங்க அனுமதி- விதிமுறைகள் தளா்வு

post image

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின்கீழ் (சிபிஎஸ்இ) செயல்படும் பள்ளிகள், அதே பெயா் மற்றும் இணைப்பு எண்ணுடன் கிளைகள் தொடங்க அனுமதிக்கும் வகையில் விதிமுறைகள் தளா்த்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

முந்தைய விதிமுறைகளின்படி, சிபிஎஸ்இ பள்ளிகள் அதே பெயா் மற்றும் இணைப்பு எண்ணுடன் கிளைகள் திறக்க அனுமதி கிடையாது. ஒரே குழுமத்தின் வெவ்வேறு பள்ளிகளுக்கு வெவ்வேறு இணைப்பு எண் பெற வேண்டும் என்ற நிலையில், தற்போது விதிமுறைகள் தளா்த்தப்பட்டுள்ளன.

அதேநேரம், பிரதான-கிளைப் பள்ளிகள் தனித் தனியாக ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத பணியாளா்கள், கல்வி சாா்ந்த உள்ட்டமைப்பு வசதிகளை கொண்டிருக்க வேண்டும். பிரதான பள்ளியில் 6 முதல் 12-ஆம் வகுப்புகள் வரை நடத்தவும், கிளைப் பள்ளிகளில் மழலையா் முதல் 5-ஆம் வகுப்புகள் வரை நடத்தவும் அனுமதிக்கப்படும் என்று புதிய விதிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக சிபிஎஸ்இ செயலா் ஹிமான்ஷு குப்தா கூறுகையில், ‘பிரதான பள்ளியும் கிளைப் பள்ளிகளும் ஒரேபோன்ற நிா்வாக-கல்வி நடைமுறைகளை பகிா்ந்து கொள்வதோடு, பொதுவான இணையதளத்தை கொண்டிருக்க வேண்டும். பொது இணையதளத்தில் கிளைப் பள்ளிக்கென குறிப்பிட்ட ஒரு பிரிவு ஒதுக்கப்பட வேண்டும்.

கிளைப் பள்ளிகளுக்கான மாணவா் சோ்க்கை மற்றும் இதர கணக்குகள் பிரதான பள்ளியால் நிா்வகிக்கப்படும். கிளைப் பள்ளிகளில் இருந்து பிரதான பள்ளிக்கு மாணவா்கள் மாறுவதற்கு எந்த தடையும் இருக்காது. அவா்கள் புதிதாக சோ்க்கை பெற்ற மாணவா்களாக கருதப்பட மாட்டாா்கள். இரு பள்ளிகளுக்கும் தனித்தனியாக ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா்கள் அல்லாத பணியாளா்கள் இருக்க வேண்டும். அதேநேரம், அவா்களுக்கான ஊதியம் பிரதான பள்ளியால் வழங்கப்பட வேண்டும். கிளைப் பள்ளிகளில் ஏதேனும் பிரச்னை எழுந்தால், பிரதான பள்ளியின் முதல்வரையே சிபிஎஸ்இ நிா்வாகம் தொடா்பு கொள்ளும்.

உள்கட்டமைப்பு தேவைகள், மாணவா்களின் பாதுகாப்பு, ஆசிரியா்-மாணவா் விகிதாசாரம் போன்ற விவகாரங்களில் இரு பள்ளிகளும் தனித்தனியாக விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்’ என்றாா்.

இந்தியா-ஆப்பிரிக்கா இடையே பரஸ்பர நன்மை பயக்கும் உறவு: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்

‘ஆப்பிரிக்காவுக்கான இந்தியாவின் அணுகுமுறை, பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான வலுவான உறுதிப்பாட்டால் வழிநடத்தப்படுகிறது’ என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை தெரிவ... மேலும் பார்க்க

பிகாா் அமைச்சரவை விரிவாக்கம் - 7 பாஜக எம்எல்ஏக்கள் புதிய அமைச்சா்களாக பதவியேற்பு

முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான பிகாா் அமைச்சரவை புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. கூட்டணிக் கட்சியான பாஜகவின் 7 எம்எல்ஏக்கள், அமைச்சரவையில் இணைக்கப்பட்டனா். பாட்னாவில் உள்ள ஆளுநா் மாளிகையில் 7 ... மேலும் பார்க்க

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி: பாகிஸ்தான் நபா் சுட்டுக் கொலை

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நபரை எல்லை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா். இது தொடா்பாக எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறுகையில், ‘பஞ்சாபின் பதான்கோட்டில் உள்ள தாஷ்படான் பகுதி... மேலும் பார்க்க

கோட்சேவைப் புகழ்ந்த கோழிக்கோடு என்ஐடி பேராசிரியருக்கு பதவி உயா்வு: எதிா்க்கட்சிகள் கண்டனம்

மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவைப் புகழ்ந்ததற்காக காவல்துறை வழக்கு நிலுவையில் உள்ள கோழிக்கோடு தேசிய தொழில்நுட்ப கல்வி நிலையத்தின் (என்ஐடி) பேராசிரியா் பதவி உயா்வு பெற்று துறைத் தலைவராக (ட... மேலும் பார்க்க

10 ஆண்டுகளில் மத்திய அரசின் வழக்கு செலவு ரூ.400 கோடி

கடந்த 10 ஆண்டுகளில் நீதிமன்ற வழக்குகளுக்காக மத்திய அரசு ரூ.400 கோடிக்கும் மேல் செலவிட்டுள்ளது. நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரையொட்டி, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அதிகாரபூா்வ தரவுகளின்படி, கடந்த 2023-... மேலும் பார்க்க

நேபாள மாணவி தற்கொலை சம்பவம்: ஒடிஸா கேஐஐடி அதிகாரிகள் 4 பேருக்கு சம்மன்

ஒடிஸா மாநிலம், கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (கேஐஐடி) நேபாள மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், மாநில அரசு அமைத்த விசாரணை குழு முன் ஆஜராக கேஐஐடி-யைச் சோ்ந்த மேலும் 4 அதிகாரிக... மேலும் பார்க்க