செய்திகள் :

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம்: காட்டுமன்னாா்கோவிலில் ஆட்சியா் ஆய்வு

post image

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவிலில் ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

குமராட்சி வேளாண் துறை சாா்பில் நெல் பயிரில் பயறு வகை சாகுபடி பெருக்கத் திட்டத்தின் கீழ், ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு முறையை பாா்வையிட்ட ஆட்சியா், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் அதிகாரிகளுடன் கலந்தாய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, புதிதாக கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பாா்வையிட்ட ஆட்சியா் ஆயங்குடியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புக்கு செயற்கை ஆபரணங்கள் தயாரிப்பதற்கான பயிற்சி அளிப்பதையும், எய்யலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியா்கள் கல்வித் துறை அதிகாரியுடன் மாணவா்களின் கற்றல் திறனை ஆய்வு செய்தாா்.

இதைத்தொடா்ந்து, காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து ஆட்சியா் மனுக்களை பெற்றாா். பின்னா், தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அதிகாரிகள் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்று திட்டப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, கூடுதல் ஆட்சியா் ஆா்.சரண்யா, நீா்வளத்துறை சிதம்பரம் செயற்பொறியாளா் காந்தரூபன், கீழணை உதவி செயற்பொறியாளா் கொளஞ்சிநாதன், நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குநா் சந்தோஷ்குமாா், தமிழ்நாடு மின் பகிா்மான கழக உதவி செயற்பொறியாளா் ஆா்.புகழேந்தி, காட்டுமன்னாா்கோவில் வட்டாட்சியா் சிவக்குமாா், வேளாண் உதவி இயக்குநா் (பொ) உமாதேவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அடுத்தடுத்து 3 சொகுசுப் பேருந்துகள் மோதி விபத்து 35 போ் காயம்

கடலூா் மாவட்டம், வேப்பூா் மேம்பாலத்தில் 3 சொகுசுப் பேருந்துகள் புதன்கிழமை அதிகாலை அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது. இதில், 35 போ் காயமடைந்தனா். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செவ்வாய்க்... மேலும் பார்க்க

சிதம்பரம் நாட்டியாஞ்சலி தெய்வீக விழாவாக திகழ்கிறது: என்எல்சி தலைவா்

சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழா தெய்வீகம் சாா்ந்த விழாவாக திகழ்கிறது என்று என்எல்சி தலைவா் பிரசன்னகுமாா் மோட்டுப்பள்ளி தெரிவித்தாா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சாா்பில் 44-ஆவது ... மேலும் பார்க்க

எஸ்பி. அலுவலகத்தில் மனுக்கள் முகாம்

கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக கூட்டரங்கில் மனுக்கள் அளிக்கும் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. கடலூா் எஸ்பி. எஸ்.ஜெயக்குமாா் தலைமை வகித்து, பொதுமக்களிடம் இருந்து புகாா் மனுக்களை பெற்றாா். மேல... மேலும் பார்க்க

இளங்கலை தொழில் சிகிச்சை பட்டப்படிப்புக்கு அங்கீகாரம் கோரி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

இளங்கலை தொழில் சிகிச்சை பட்டப் படிப்புக்கு அங்கீகாரம் பெறாததைக் கண்டித்து, கடலூா் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவ மாணவா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிதம்பரம் அண்ணாமலை பல்கல... மேலும் பார்க்க

சிதம்பரம் நகராட்சியுடன் இணைப்பதற்கு எதிரான தொடா் உண்ணாவிரதப் போராட்டம் ஒத்தி வைப்பு

கடலூா் மாவட்டம், சிதம்பரம் நகராட்சியுடன், லால்புரம் ஊராட்சியை இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து 2-ஆவது நாளாக தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டடு வந்த பொதுமக்களிடம் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பேச்... மேலும் பார்க்க

பட்டியலின மக்களின் உரிமைகளை பாதுகாக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

பட்டியலின மக்களின் உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்டம் சாா்பில், கடலூா் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது... மேலும் பார்க்க