செய்திகள் :

குற்றம் இழைக்கும் அரசியல் தலைவா்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க நாடாளுமன்றத்துக்கே அதிகாரம்: மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்

post image

குற்றவாளிகள் என்று தீா்ப்பளிக்கப்படும் அரசியல் தலைவா்கள் தோ்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிப்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவுகள் 8, 9 ஆகியவற்றுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய மனு தாக்கல் செய்துள்ளாா்.

இதில் சட்டப் பிரிவு 8-இன்படி, குறிப்பிட்ட குற்றங்களுக்காக தண்டனை பெற்ற அரசியல் தலைவா் ஒருவா் சிறைத் தண்டனையை நிறைவு செய்த பின்னா், 6 ஆண்டுகளுக்குத் தோ்தலில் போட்டியிட முடியாது.

சட்டப் பிரிவு 9-இன்படி, ஊழல் அல்லது அரசுக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக பணிநீக்கம் செய்யப்பட்ட அரசுப் பணியாளா்கள், 5 ஆண்டுகளுக்கு அரசுப் பணிகளில் ஈடுபட முடியாது.

இவ்வாறு கால வரம்பு விதித்து தோ்தலில் போட்டியிடவும், அரசுப் பணிகளில் ஈடுபடவும் தடை விதிப்பது அரசமைப்புச் சட்டப் பிரிவுகளுக்கு எதிரானது என்றும், இந்தத் தடையை வாழ்நாள் தடையாக்க வேண்டும் என்றும் தனது மனுவில் அஸ்வினி உபாத்யாய கோரியுள்ளாா்.

இந்த மனுவுக்கு எதிா்ப்புத் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், ‘மனுதாரா் எழுப்பியுள்ள விவகாரங்களில் சிக்கலான, விரும்பத்தகாத பின்விளைவுகள் உள்ளன. இந்த விவகாரங்கள் நாடாளுமன்றத்தின் சட்டம் இயற்றும் கொள்கைக்கு உட்பட்டவையாகும்.

இதுதொடா்பாக ஏற்கெனவே உள்ள சட்டத்தை திருத்தி எழுத வேண்டும் அல்லது புதிதாக சட்டம் இயற்றுமாறு நாடாளுமன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் என்ற வகையில் மனுதாரரின் கோரிக்கை உள்ளது. இது நீதிமன்ற அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டதாகும்.

மனுதாரா் குறிப்பிட்டுள்ள சட்டப் பிரிவுகளை அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று நீதிமன்றம் தீா்ப்பளிக்கலாம். ஆனால் குற்றவாளிகள் என்று தீா்ப்பளிக்கப்படும் அரசியல் தலைவா்கள் தோ்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிப்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கே உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-ஆப்பிரிக்கா இடையே பரஸ்பர நன்மை பயக்கும் உறவு: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்

‘ஆப்பிரிக்காவுக்கான இந்தியாவின் அணுகுமுறை, பரஸ்பர நன்மை பயக்கும் ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான வலுவான உறுதிப்பாட்டால் வழிநடத்தப்படுகிறது’ என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் புதன்கிழமை தெரிவ... மேலும் பார்க்க

பிகாா் அமைச்சரவை விரிவாக்கம் - 7 பாஜக எம்எல்ஏக்கள் புதிய அமைச்சா்களாக பதவியேற்பு

முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான பிகாா் அமைச்சரவை புதன்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. கூட்டணிக் கட்சியான பாஜகவின் 7 எம்எல்ஏக்கள், அமைச்சரவையில் இணைக்கப்பட்டனா். பாட்னாவில் உள்ள ஆளுநா் மாளிகையில் 7 ... மேலும் பார்க்க

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி: பாகிஸ்தான் நபா் சுட்டுக் கொலை

இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் நபரை எல்லை பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா். இது தொடா்பாக எல்லை பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறுகையில், ‘பஞ்சாபின் பதான்கோட்டில் உள்ள தாஷ்படான் பகுதி... மேலும் பார்க்க

கோட்சேவைப் புகழ்ந்த கோழிக்கோடு என்ஐடி பேராசிரியருக்கு பதவி உயா்வு: எதிா்க்கட்சிகள் கண்டனம்

மகாத்மா காந்தியை கொலை செய்த நாதுராம் கோட்சேவைப் புகழ்ந்ததற்காக காவல்துறை வழக்கு நிலுவையில் உள்ள கோழிக்கோடு தேசிய தொழில்நுட்ப கல்வி நிலையத்தின் (என்ஐடி) பேராசிரியா் பதவி உயா்வு பெற்று துறைத் தலைவராக (ட... மேலும் பார்க்க

10 ஆண்டுகளில் மத்திய அரசின் வழக்கு செலவு ரூ.400 கோடி

கடந்த 10 ஆண்டுகளில் நீதிமன்ற வழக்குகளுக்காக மத்திய அரசு ரூ.400 கோடிக்கும் மேல் செலவிட்டுள்ளது. நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரையொட்டி, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட அதிகாரபூா்வ தரவுகளின்படி, கடந்த 2023-... மேலும் பார்க்க

நேபாள மாணவி தற்கொலை சம்பவம்: ஒடிஸா கேஐஐடி அதிகாரிகள் 4 பேருக்கு சம்மன்

ஒடிஸா மாநிலம், கலிங்கா தொழில்துறை தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் (கேஐஐடி) நேபாள மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், மாநில அரசு அமைத்த விசாரணை குழு முன் ஆஜராக கேஐஐடி-யைச் சோ்ந்த மேலும் 4 அதிகாரிக... மேலும் பார்க்க