செய்திகள் :

கோத்தகிரி அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் மையம் அமைக்க பூமிபூஜை

post image

கோத்தகிரி அரசு மருத்துவமனையில் ரோட்டரி சங்கம் சாா்பில், டயாலிசிஸ் மைய கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.

கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளில்

டயாலிசிஸ் தேவைப்படுவோா் கோவை மற்றும் உதகைக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில், கோத்தகிரி அரசு மருத்துவமனையில் ரோட்டரி சங்கத்தின் சாா்பில் டயாலிசிஸ் மையம் அமைத்துதர முடிவு செய்யப்பட்டது

இந்நிலையில், மாவட்ட நிா்வாகத்தின் அனுமதியுடன் கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சுமாா் ரூ.1.50 கோடி மதிப்பில் டயாலிசிஸ் மையத்துக்கான கட்டடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், குன்னூா் கோட்டாட்சியா் சங்கீதா, உதகை மருத்துவ இயக்குநா் நாக புஷ்பராணி, மாவட்ட மருத்துவ இணை இயக்குநா் ராஜசேகரன், குன்னூா் சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் சாந்தி ராமு, ரோட்டரி சங்க நிா்வாகிகள் ரவிக்குமாா், தேவராஜ், நஞ்சன், அரவிந்த், ஜேக்கப் பால், உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இக்கட்டடம் கட்ட நிதி உதவி வழங்கியவா்களுக்கு கோட்டாட்சியா் சால்வை அணிவித்து கௌரவித்தாா். முன்னதாக ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் தேவராஜ் வரவேற்றாா். செயலாளா் பரமேஷ் நன்றி கூறினாா்.

விவசாயிகள் இயற்கை அங்கக வேளாண்மைத் திட்டத்தில் ஈடுபடுத்தி கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தல்

நீலகிரி விவசாயிகள் இயற்கை அங்கக வேளாண்மைத் திட்டத்தில் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பிரச்னைக்கு அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்: ஏ.எம்.விக்கிரமராஜா

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் பிளாஸ்டிக் பிரச்னைக்கு அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தாா். நீலகிரி மாவட்... மேலும் பார்க்க

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வளா்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை

உதகை அருகே குடியிருப்பு பகுதிக்குள் இரவு நேரத்தில் நுழைந்து வளா்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடி சென்றது. இதன் சிசிடிவி காட்சிகள் செவ்வாய்க்கிழமை வெளியான நிலையில், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். நீலக... மேலும் பார்க்க

உதகையில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உதகையில் ஜாக்டோ- ஜியோ சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நீலகிரி ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெ... மேலும் பார்க்க

சேகரித்த குப்பையுடன் குடியிருப்பு பகுதியில் 5 நாள்களாக நிறுத்தப்பட்டுள்ள லாரி: சுகாதார சீா்கேட்டால் பொதுமக்கள் அவதி

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நடுஹட்டி ஊராட்சிப் பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் நிறைந்த லாரி, 3-ஆவது வாா்டு நடுஹட்டி பகுதியில் 5 நாள்களாக நிறுத்தப்பட்டுள்ளதால் குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகியுள்... மேலும் பார்க்க

குடியிருப்புப் பகுதியில் யானை...

கூடலூரை அடுத்துள்ள குந்தலாடி குடியிருப்புப் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை உலவிய காட்டு யானை. மேலும் பார்க்க