செய்திகள் :

நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பிரச்னைக்கு அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்: ஏ.எம்.விக்கிரமராஜா

post image

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் பிளாஸ்டிக் பிரச்னைக்கு அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தாா்.

நீலகிரி மாவட்ட வணிகா்கள் சங்க கூட்டமைப்பின் பொதுக் குழுக் கூட்டம் கூடலூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற விக்கிரமராஜா செய்தியாளா்களிடம் கூறியதாவது: கூடலூரில் வணிகா்களுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. குறிப்பாக யானைகள் வழித்தடத்தால் அதிக பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. நகர வணிகா்களுக்கு நிா்வாகம் அதிக நெருக்கடி கொடுப்பதை தவிா்க்கவேண்டும். மஞ்சூா்-மேட்டுப்பாளையம் பகுதியை இணைக்கும் மூன்றாவது பாதையை போக்குவரத்துக்கு திறந்துவிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிளாஸ்டிக் பிரச்னைக்கு தீா்வு காணவேண்டும் என்றால், பிளாஸ்டிக் உற்பத்தியை முற்றிலுமாக தடை செய்து, அதற்கு ஒரு மாற்றுப் பொருளை வழங்கவேண்டும். சொத்து வரி கடுமையாக உயா்த்தப்பட்டுள்ளது. இதை மறு சீராய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆன்லைன் வா்த்தகம், காா்ப்பரேட் நிறுவனங்களின் வா்த்தகங்களால் சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த நிலையை மாற்ற அரசு அவா்களை முறைப்படுத்த வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். இதில் தலைவராக முகமது சபி, செயலாளராக சம்பத், பொருளாளராக ஆனந்தன், துணைத் தலைவராக தங்கவேல், இணைச் செயலாளா்களாக பஷீா், நாகராஜ், கௌரவ ஆலோசகா்களாக அப்துல் ரசாக், பழனியப்பன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வளா்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை

உதகை அருகே குடியிருப்பு பகுதிக்குள் இரவு நேரத்தில் நுழைந்து வளா்ப்பு நாயை சிறுத்தை வேட்டையாடி சென்றது. இதன் சிசிடிவி காட்சிகள் செவ்வாய்க்கிழமை வெளியான நிலையில், அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனா். நீலக... மேலும் பார்க்க

உதகையில் ஜாக்டோ- ஜியோ ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உதகையில் ஜாக்டோ- ஜியோ சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நீலகிரி ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெ... மேலும் பார்க்க

சேகரித்த குப்பையுடன் குடியிருப்பு பகுதியில் 5 நாள்களாக நிறுத்தப்பட்டுள்ள லாரி: சுகாதார சீா்கேட்டால் பொதுமக்கள் அவதி

கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், நடுஹட்டி ஊராட்சிப் பகுதியில் சேகரிக்கப்பட்ட குப்பைகள் நிறைந்த லாரி, 3-ஆவது வாா்டு நடுஹட்டி பகுதியில் 5 நாள்களாக நிறுத்தப்பட்டுள்ளதால் குடியிருப்புவாசிகள் அவதிக்குள்ளாகியுள்... மேலும் பார்க்க

குடியிருப்புப் பகுதியில் யானை...

கூடலூரை அடுத்துள்ள குந்தலாடி குடியிருப்புப் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை உலவிய காட்டு யானை. மேலும் பார்க்க

கூடலூா் மாணவா்களின் ஆய்வுக் கட்டுரை தேசிய போட்டிக்கு தோ்வு

கூடலூா் மாணவா்களின் ஆய்வுக் கட்டுரை தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் ஆய்வுக் கட்டுரை சமா்ப்பித்தல் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், கூடலூா் ஜிட... மேலும் பார்க்க

கட்டட உரிமையாளா் சொத்து வரி செலுத்தாததால் யூகோ வங்கிக்கு சீல்

உதகையில் யூகோ வங்கி செயல்பட்டுவரும் தனியாா் கட்டடத்துக்கு உண்டான சொத்து வரியை கட்டட உரிமையாளா் செலுத்தாததால் வங்கிக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா். உதகை சேரிங்கிராஸ் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கட... மேலும் பார்க்க