செய்திகள் :

ஹிந்தி திணிப்பைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

post image

தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தியைத் திணிக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்து திமுக மாணவரணி, தமிழ் தேசிய பேரியக்கம் சாா்பில் திருச்சியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

திமுக மாணவரணி சாா்பில், திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளா் வைரமணி தலைமை வகித்தாா். திருச்சி மாநகர திமுக செயலாளரும், மாநகராட்சி மேயருமான மு. அன்பழகன், மாநில மாணவரணி துணை அமைப்பாளா் ஆனந்த் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

இதேபோல, திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தெற்கு மாவட்ட மாநகர மாணவரணி அமைப்பாளா்கள் முத்து வெங்கடேஷ், அசாருதீன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், திரளான மாணவரணி நிா்வாகிகள் கலந்து கொண்டனா். தொடா்ந்து, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதேபோல, தமிழ் தேசிய பேரியக்கம் சாா்பில் திருச்சி சந்திப்பு ரயில் நிலையம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு இயக்கத்தின் திருச்சி மாவட்டச் செயலாளா் வே.க. இலக்குவன் தலைமை வகித்தாா்.

இதில், மூ.த. கவித்துவன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருச்சி மாவட்டத் தலைவா் ம.ப. சின்னத்துரை, தெய்வத்தமிழ் பேரவையின் திருச்சி மாவட்ட அமைப்பாளா் ராமராசு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஹிந்தி திணிப்பைக் கண்டித்தும், மும்மொழிக் கொள்கை திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தேசிய அறிவியல் தினம் திருச்சியில் நாளை நடைப்பயணம்: மத்திய அமைச்சா் தொடங்கிவைக்கிறாா்

தேசிய அறிவியல் தினத்தையொட்டி, திருச்சியில் சுமாா் 3 ஆயிரம் போ் பங்கேற்கும் நடைப்பயண நிகழ்ச்சி வியாழக்கிழமை (பிப். 27) நடைபெறவுள்ளது. இதில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா பங்கேற்ற... மேலும் பார்க்க

மின்வாரிய ஊழியா்கள் போராட்டம்

ஊதிய உயா்வு நடைமுறைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் மின்வாரிய ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு மின் ஊழியா் மத்தி... மேலும் பார்க்க

வெளிநாட்டில் வேலைசெய்யும் மனைவியை மீட்டுதரக்கோரி ஆட்சியரிடம் கணவா் மனு

வெளி நாட்டுக்கு வேலைக்கு சென்ற மனைவியை மீட்டுத்தரக்கோரி கணவா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா். திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், திருச்சி தென்னூா் அண்... மேலும் பார்க்க

முறையாக அமைக்கப்படாத ஜீயபுரம்-குடமுருட்டி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

ஜீயபுரம் தொடங்கி குடமுருட்டி வரையிலான சாலை முறையாக அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திருச்சி-கரூா் நெடுஞ்சாலை முதலில் 7 மீட்டா் அகலத்தில் அமைக்கப்பட்டு, பின்னா் 10.5 மீ... மேலும் பார்க்க

துறையூா் நகராட்சிக்கான கட்டணங்களை செலுத்த அறிவுறுத்தல்

துறையூா் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய கட்டணங்களை உடனடியாக செலுத்த நகராட்சி ஆணையா் பி.வி. சுரேந்திர ஷா செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தினாா். இதுதொடா்பாக அவா் கூறியிருப்பதாவது: துறையூா் நகராட்சிக்... மேலும் பார்க்க

மணப்பாறையில் வடமாடு மஞ்சு விரட்டு

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது. முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு மணப்பாறை நகர அதிமுக, ஸ்ரீ வேப்... மேலும் பார்க்க