செய்திகள் :

உ.பி: ரூ.1 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த குற்றவாளி சுட்டுப்பிடிப்பு!

post image

லக்னௌ: உத்தரப்பிரதேச மாநிலம்,காசியாபாத் கொள்ளை வழக்கில் ரூ.1 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த குற்றவாளி ஜிதேந்திரா புதன்கிழமை காலை மீரட்டில் நடந்த போலீஸ் என்கவுண்டரில் சுட்டுப்பிடிக்கப்பட்டுள்ளார்.

ஹரியாணா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜிதேந்திரா என்ற ஜீது, 2023 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்தார்.

இதனிடையே, அவரை பிடிக்க காவல் துறையினருக்கு தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.1 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்திருந்தது.

இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டம் முண்டலி பகுதியில் புதன்கிழமை அதிகாலை நடந்த போலீஸ் என்கவுண்டரில் குற்றவாளி ஜிதேந்திரா படுகாயமடைந்ததாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக உள்பட 45 கட்சிகளுக்கு முதல்வர் அழைப்பு!

இது குறித்து உத்தரப்பிரதேச காவல்துறை சிறப்புப் படை கூடுதல் இயக்குநர் அமிதாப் யாஷ் கூறுகையில், காசியாபாத் கொள்ளை வழக்கில் ரூ.1 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த குற்றவாளி ஜிதேந்திரா, மீரட் மாவட்டம் முண்டலி பகுதியில் புதன்கிழமை காலை நடந்த போலீஸ் என்கவுண்டரில் சுட்டுப்பிடிக்கப்பட்டுள்ளார். இதில், காயமடைந்த ஜிதேந்திரா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

2016 ஆம் ஆண்டு ஜஜ்ஜாரில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜிதேந்திரா,2023 இல் பரோலில் வெளியே வந்தார்.

பின்னர், சிறைக்கு செல்லாமல் தலைமறைவாக இருந்து வந்த ஜிதேந்திரா, காஜியாபாத் மாவட்டம் டீலா மோர் பகுதியில் நடந்த கொலை வழக்கில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

சிறையில் இருந்தபோது லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் தொடர்பில் இருந்த ஜிதேந்திரா, பரோலில் வந்து தலைமறைவாகி அந்த கும்பலுடன் இணைந்து கொள்ளை, கொலையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மீனாட்சி அம்மன் கோவில் மதுரையின் பெருமை: ஞானேஷ்குமார்

மதுரை: சமீபத்தில் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்ற ஞானேஷ் குமார் தனது குடும்பத்தினருடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தவர், மீனாட்சி அம்மன் கோவில் மதுரையின் பெருமை என தெரிவித்... மேலும் பார்க்க

மருத்துவத்தில் உயர்ந்து நிற்கும் தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தில் அரசு மருத்துவமனை பணிகளுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள 2,642 மருத்துவா்களுக்கு புதன்கிழமை பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின், நாட்டின் மருத்துவத் தலைநகராக தமிழ்நாடு உயர்ந்து நிற... மேலும் பார்க்க

தமிழ் வளர்ச்சிக்காக திமுக என்ன செய்தது?: அன்புமணி கேள்வி

சேலம்: தமிழை வைத்து அரசியல் செய்யும் திமுக, இதுவரை தமிழ் வளர்ச்சிக்காக என்ன செய்தார்கள் என்று அன்புமணி கேள்வி எழுப்பினார்.சேலத்தில் நடைபெற்ற ஜி.கே.மணி இல்ல திருமண விழாவில் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அ... மேலும் பார்க்க

இந்தியை திமுக ஏன் இன்னமும் எதிர்க்கிறது?: மு.க.ஸ்டாலின் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் இந்தியை திமுக ஏன் இன்னமும் எதிர்க்கிறது என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து திமுகவினருக்கு புதன்கிழமை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதா... மேலும் பார்க்க

தமிழர்கள் ஹிந்தி கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம்: ஸ்ரீதர் வேம்பு

வணிகரீதியான வளர்ச்சிக்கு பொறியாளர்கள், தொழில்முனைவோர் ஹிந்தி கற்றுக்கொள்வது அவசியம் என ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார். தில்லி, மும்பையில் பணியாற்றும் ஸோஹோ நிறுவன பொறியாளர்கள் மத்தியில் பேசி... மேலும் பார்க்க

ராமேசுவரம் - தலைமன்னார் கப்பல் போக்குவரத்து! ஜூலையில் தொடக்கம்?

சென்னை: ராமேசுவரம்- தலைமன்னாருக்கிடையே இரண்டாவது பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை ஜூலை மாதம் தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை கட... மேலும் பார்க்க