செய்திகள் :

மீனாட்சி அம்மன் கோவில் மதுரையின் பெருமை: ஞானேஷ்குமார்

post image

மதுரை: சமீபத்தில் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்ற ஞானேஷ் குமார் தனது குடும்பத்தினருடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தவர், மீனாட்சி அம்மன் கோவில் மதுரையின் பெருமை என தெரிவித்தார்.

சமீபத்தில் 26 ஆவது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்ற ஞானேஷ் குமார் புதன்கிழமை மதுரை வந்தார்.

அவர் உலக பிரசித்திப்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

கோவில் நிர்வாகம் சார்பாக அவருக்கு மரியாதை வழங்கப்பட்டது. தொடர்ந்து கோவிலில் மீனாட்சி அம்மன் சன்னதி மற்றும் சுந்தரேஸ்வரர் சன்னதிக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தார். மேலும் பொற்றாமரை குளத்தில் நின்று குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களுடன் பேசுகையில், மதுரையில் தேர்தல் செயல்முறைகளை குறித்து ஆய்வு செய்தேன், அவர்கள் நல்லமுறையில் பணிகளைச் செய்துள்ளனர்.

மருத்துவத்தில் உயர்ந்து நிற்கும் தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தேசக் கட்டமைப்பில் முதல் படியே வாக்களிப்பதுதான். எனவே, 18 வயதைப் பூா்த்தி செய்த ஒவ்வோா் இந்திய குடிமக்களும் ஆட்சியாளா்களைத் தோ்ந்தெடுப்பவா்களாக உருவெடுக்க வேண்டும், எப்போதும் வாக்களிக்கவும் வேண்டும். தோ்தல் ஆணையம் எப்போதும் வாக்காளா்களுக்குத் துணை நிற்கும் என்றும், மதுரையின் அனைத்து வாக்காளர்களுக்கும் எனது நல்வாழ்த்துகள் என ஞானேஷ் குமாா் தெரிவித்தாா்.

மேலும், மீனாட்சி அம்மன் கோவில் மதுரையின் பெருமை என கூறினார்.

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சங்கீதா மற்றும் பிற அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர், ராமேசுவத்தில் உள்ள ராமநாத சுவாமி கோவிலுக்குச் செல்ல இருப்பதாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் தனது குடும்பத்தினருடன் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

தமிழ்நாட்டுக் கொள்கையை மாற்றச் சொல்வதற்கு மத்திய அரசுக்கு உரிமை இல்லை! - அன்புமணி

மத்திய அரசின் கொள்கைகளை மாநில அரசு ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், "மக்கள்தொகையை குறைக்க வேண்டும் ... மேலும் பார்க்க

மருத்துவத்தில் உயர்ந்து நிற்கும் தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தில் அரசு மருத்துவமனை பணிகளுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள 2,642 மருத்துவா்களுக்கு புதன்கிழமை பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின், நாட்டின் மருத்துவத் தலைநகராக தமிழ்நாடு உயர்ந்து நிற... மேலும் பார்க்க

தமிழ் வளர்ச்சிக்காக திமுக என்ன செய்தது?: அன்புமணி கேள்வி

சேலம்: தமிழை வைத்து அரசியல் செய்யும் திமுக, இதுவரை தமிழ் வளர்ச்சிக்காக என்ன செய்தார்கள் என்று அன்புமணி கேள்வி எழுப்பினார்.சேலத்தில் நடைபெற்ற ஜி.கே.மணி இல்ல திருமண விழாவில் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அ... மேலும் பார்க்க

இந்தியை திமுக ஏன் இன்னமும் எதிர்க்கிறது?: மு.க.ஸ்டாலின் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் இந்தியை திமுக ஏன் இன்னமும் எதிர்க்கிறது என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து திமுகவினருக்கு புதன்கிழமை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதா... மேலும் பார்க்க

தமிழர்கள் ஹிந்தி கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம்: ஸ்ரீதர் வேம்பு

வணிகரீதியான வளர்ச்சிக்கு பொறியாளர்கள், தொழில்முனைவோர் ஹிந்தி கற்றுக்கொள்வது அவசியம் என ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார். தில்லி, மும்பையில் பணியாற்றும் ஸோஹோ நிறுவன பொறியாளர்கள் மத்தியில் பேசி... மேலும் பார்க்க

உ.பி: ரூ.1 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த குற்றவாளி சுட்டுப்பிடிப்பு!

லக்னௌ: உத்தரப்பிரதேச மாநிலம்,காசியாபாத் கொள்ளை வழக்கில் ரூ.1 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த குற்றவாளி ஜிதேந்திரா புதன்கிழமை காலை மீரட்டில் நடந்த போலீஸ் என்கவுண்டரில் சுட்டுப்பிடிக்கப்... மேலும் பார்க்க