செய்திகள் :

அருணாசல் நெடுஞ்சாலை திட்டம் விரைவில் நிறைவடையும்: கிரண் ரிஜிஜு

post image

அருணாச்சலப் பிரதேசத்தின் அனைத்து மாவட்டங்களையும் இணைக்கும் நெடுஞ்சாலை திட்டம் விரைவில் நிறைவடையும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

கம்லே மாவட்டத்தில் உள்ள போசிம்லாவில் நியிஷி பழங்குடியினரின் விழாவான நியோகுமு யூல்லோ முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கரும் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் கிரண் ரிஜிஜு கூறுகையில்,

மாநிலத்தின் 26 மாவட்டத் தலைமையகங்களையும் இணைக்கும் அருணாசல் நெடுஞ்சாலை நிறைவடையும் தறுவாயில் உள்ளது.

இது மாநிலத்தின் அனைத்து மாவட்டத் தலைமையகங்களையும் தடையின்றி இணைக்கும், அணுகலை மேம்படுத்தும் மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கும்.

சுமார் ரூ.42,000 கோடி மதிப்பில் கட்டப்படும் மிகப்பெரிய நெடுஞ்சாலை திட்டம், இந்தியாவில் மிகப்பெரியளவிலான முதல் திட்டமும் இதுவேயாகும் என்று அவர் கூறினார்.

தில்லி பேரவையின் துணைத் தலைவராகிறார் மோகன் சிங்!

தில்லி சட்டப்பேரவையின் துணைத் தலைவர் பதவிக்கு பாஜக எம்எல்ஏ மோகன் சிங் பிஷ்ட் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். முன்னதாக கடந்த பிப். 24 அன்று குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு விஜேந்தர் குப்தா பேரவையின் தலைவராக... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்கம்: விபத்து இடத்தை நெருங்கியும் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை!

தெலுங்கானா சுரங்கத்தில் விபத்து நடந்த இடத்தை மீட்புக் குழுவினர் நெருங்கிய நிலையில், விபத்தில் சிக்கியவர்களை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்ட... மேலும் பார்க்க

சமூகத் தீமைகளை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் துறவிகள்: முர்மு

இந்தியாவில் உள்ள துறவிகள் சமூகத் தீமைகளை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தின் கர்ஹா கிராமத்தில் உள்ள பாகே... மேலும் பார்க்க

பழக் கழிவுகளால் கான்கிரீட் வலிமையை அதிகரிக்கலாம்: புதிய யோசனை சொல்லும் இந்தூர் ஐஐடி!

கான்கிரீட்டில் உணவுக் கழிவுகளைக் கலப்பதன் மூலம் கட்டுமானத்தின் வலிமையை அதிகரிக்கலாம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.கான்கிரீட் வலிமையை அதிகரிப்பது குறித்து ஐஐடி இந்தூர் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்து... மேலும் பார்க்க

கும்பமேளா நிறைவு நாள்: இதுவரை 81 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்!

உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவின் கடைசி நாளான இன்று இதுவரை 81 லட்சம் பேர் புனித நீராடியுள்ளதாக அந்த மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் மகாசிவராத்திரி விழா கோலாகலமாகக் ... மேலும் பார்க்க

கௌரி சங்கர் கோயிலில் தில்லி முதல்வர் வழிபாடு!

மகாசிவராத்திரியை முன்னிட்டு கௌரி சங்கர் கோயிலில் தில்லி முதல்வர் ரேகா குப்தா வழிபாடு மேற்கொண்டார். நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா இன்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் மகா சிவராத்திரிய... மேலும் பார்க்க