செய்திகள் :

தொட்டில் குழந்தை திட்டத்தில் வேலை: 8, +2 முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

post image

தர்மரி மாவட்ட தொட்டில் குழந்தைகள் திட்டத்தின்கீழ் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு 8, பிளஸ் 2 முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: காப்பாளர் மற்றும் மேற்பார்வையாளர் - 1

சம்பளம்: மாதம் ரூ.7,500

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி்: உதவியாளர்(பெண்கள்) - 2

சம்பளம்: மாதம் ரூ.4,500

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: காவலர் - 1

சம்பளம்: மாதம் ரூ.4,500

தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

பணி: செவிலியர் - 1

சம்பளம்: மாதம் ரூ.7,500

தகுதி: செவிலியர் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: மேற்கண்ட அனைத்து பணிகளுக்கும் 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வுக்கான அழைப்புக் கடிதம் தகுதியானவர்களுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்படும். நேர்முகத் தேர்வுக்கு வரும்போது தேவையான சான்றிதழ்களின் அசல் மற்றும் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட நகல்களை கொண்டு வரவும்.

விண்ணப்பிக்கும் முறை: www.dharmapuri.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தர்மபுரி மாவட்டம் - 636 705

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது அஞ்சல் மூலம் 28 ஆம் தேதிக்குள் வந்து சேர வேண்டும்.

ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: ஐடிஐ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

இந்திய ரயில்வேயின்கீழ் செயல்பட்டு வரும் ரைட்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Site Assessors பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் மார்ச் 5 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி:... மேலும் பார்க்க

திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

திருவண்ணாமலை,அருணாசலேசுவரர் கோவிலில் காலியாக பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்து மதத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்து 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்க... மேலும் பார்க்க

இந்து அறநிலையத்துறையில் வேலை வேண்டுமா?

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் காலியாக பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான இந்து மதத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்து 28 ஆம் தேதிக்குள் விண்ணப்பங... மேலும் பார்க்க

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாட்டில் உள்ள சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூல... மேலும் பார்க்க

கடலோரக் காவல்படையில் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்திய கடலோரக் காவல்படையில் நிரப்பப்பட உள்ள 300 நவிக் பணியிடங்களுக்கு 10, பிளஸ் 2 முடித்த இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: Navik(General Duty)காலியிடங்கள்: 260சம்பளம... மேலும் பார்க்க

பட்டதாரிகளுக்கு ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் வேலை!

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.பணி: Junior Executive(Quality Assurance)தகுதி: 60 சதவிகித ... மேலும் பார்க்க