செய்திகள் :

ராசிபுரம் அரசு பள்ளியில் மயங்கி விழுந்து மாணவர் பலி!

post image

ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு மாணவர் கழிப்பறையில் மயங்கி விழுந்து புதன்கிழமை பலியானார்.

ராசிபுரம் எல்ஐசி காலனியைச் சேர்ந்தவர் பிரகாஷ். பெயிண்டரான இவரது மகன் கவின்ராஜ் (வயது 14), ராசிபுரம் சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வந்தார்.

இந்நிலையில், புதன்கிழமை வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற அவர், பள்ளி இடைவேளையில் கழிப்பறைக்குச் சென்றபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிக்க : தமிழகத்தில் மக்களவைத் தொகுதிகள் குறைக்கப்படாது: அமித் ஷா

ராசிபுரம் அரசு மருத்துவமனையில் திரண்ட உறவினர்கள், மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் எனக் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த ராசிபுரம் டிஎஸ்பி விஜயகுமார், ஆய்வாளர் எஸ். சுகவனம், வட்டாட்சியர் எஸ். சரவணன் ஆகியோர் பொதுமக்களிடம் சமரசப் பேச்சு நடத்தி மறியலைக் கைவிடச் செய்தனர்.

பின்னர், மாணவரின் சடத்தை நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மாணவர் கவின்ராஜ் உயிரிழந்தது குறித்து காவல்துறையினர், வருவாய் துறையினர், கல்வித் துறையினர் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவர் காலை உணவு அருந்தாமல் பள்ளிக்கு சென்றதால் மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. பள்ளியில் சக மாணவர்களுடன் ஏதாவது பிரச்னை இருந்ததா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மின் ஊழியா்கள் தா்னா

கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை தா்னா நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் நாமக்கல் மின்வட்ட கிளை சாா்பில் நடைபெற்ற இந்த போர... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு: திமுக மாணவா் அணி ஆா்ப்பாட்டம்

மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாமக்கல்லில் திமுக மாணவா் அணியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் - மோகனூா் சாலை பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு: 1,250 அறை கண்காணிப்பாளா்களுக்கு குலுக்கல் முறையில் பணியிடம் ஒதுக்கீடு

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 1,250 அறை கண்காணிப்பாளா்களுக்கு குலுக்கல் முறையில் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழகத்தில் மாா்ச் 3 முதல் ஏப். 15 வரை பிளஸ் 2 பொதுத் த... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி பேருந்து மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே தனியாா் பள்ளி பேருந்து மோதியதில் டிராக்டா் ஓட்டுநா் உயிரிழந்தாா். பரமத்தி வேலூா் அருகே உள்ள கொளக்காட்டுப்புதூா், பூசாரிபாளையம் கிழக்கு தெருவைச் சோ்ந்தவா் சண்... மேலும் பார்க்க

ஜேடா்பாளையம் அருகே இருவேறு இடங்களில் தீ விபத்து

ஜேடா்பாளையம் அருகே இருவேறு இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது. பரமத்தி வேலூா் அருகே உள்ள பெரியசோளிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம் (45). இவா் பெரியசோளிபாளையத்தில் பழைய இரும்பு மற்றும் நெகிழி ... மேலும் பார்க்க

பேருந்து நிலையம் இடமாற்றத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்

ராசிபுரம் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பேருந்து நிலைய மீட்புக்குழு கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ராசிபுரம் பேருந்து நிலையம் அணைப்பாளைய... மேலும் பார்க்க