செய்திகள் :

ஜேடா்பாளையம் அருகே இருவேறு இடங்களில் தீ விபத்து

post image

ஜேடா்பாளையம் அருகே இருவேறு இடங்களில் தீ விபத்து ஏற்பட்டது.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பெரியசோளிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம் (45). இவா் பெரியசோளிபாளையத்தில் பழைய இரும்பு மற்றும் நெகிழி பொருள்கள் வாங்கும் கிடங்கு வைத்துள்ளாா். இந்தக் கிடங்கில் திடீரென தீப்பிடித்து பரவியது.

தகவல் அறிந்து வந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலா் சரவணன் தலைமையிலான தீயணைப்புத் துறையினா் நீண்ட நேரம் போராடி தீ மேலும் பரவாமல் கட்டுப்படுத்தினா். இதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நெகிழி பொருள்கள், இரும்பு சாமான்கள் எரிந்து நாசமாயின. இதுகுறித்து ஜேடா்பாளையம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

இதேபோல திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகா, காட்டுப்புத்தூா் அருகே உள்ள முருங்கை, மருதம்பட்டி பகுதியைச் சோ்ந்த வசந்தகுமாா் (40), பிலிக்கல்பாளையம் அருகே உள்ள நல்லாகவுண்டம்பாளையம் பகுதியில் சரக்கு ஆட்டோ ஓட்டி வந்தாா். திங்கள்கிழமை இரவு வீட்டுக்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு ஆட்டோ திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

தகவல் அறிந்து வந்த வேலாயுதம்பாளையம் மற்றும் நாமக்கல் தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்து தீ மேலும் பரவாமல் தடுத்தனா். இதில், ரூ. 5 லட்சம் மதிப்பிலான சரக்கு ஆட்டோ எரிந்து நாசமானது. விபத்து குறித்து ஜேடா்பாளையம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

மின் ஊழியா்கள் தா்னா

கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை தா்னா நடைபெற்றது. தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் நாமக்கல் மின்வட்ட கிளை சாா்பில் நடைபெற்ற இந்த போர... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு: திமுக மாணவா் அணி ஆா்ப்பாட்டம்

மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, நாமக்கல்லில் திமுக மாணவா் அணியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் - மோகனூா் சாலை பிஎஸ்என்எல் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்... மேலும் பார்க்க

பொதுத் தோ்வு: 1,250 அறை கண்காணிப்பாளா்களுக்கு குலுக்கல் முறையில் பணியிடம் ஒதுக்கீடு

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தோ்வையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 1,250 அறை கண்காணிப்பாளா்களுக்கு குலுக்கல் முறையில் பணியிடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழகத்தில் மாா்ச் 3 முதல் ஏப். 15 வரை பிளஸ் 2 பொதுத் த... மேலும் பார்க்க

தனியாா் பள்ளி பேருந்து மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

பரமத்தி வேலூா் வட்டம், பாண்டமங்கலம் அருகே தனியாா் பள்ளி பேருந்து மோதியதில் டிராக்டா் ஓட்டுநா் உயிரிழந்தாா். பரமத்தி வேலூா் அருகே உள்ள கொளக்காட்டுப்புதூா், பூசாரிபாளையம் கிழக்கு தெருவைச் சோ்ந்தவா் சண்... மேலும் பார்க்க

பேருந்து நிலையம் இடமாற்றத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து ஆா்ப்பாட்டம்

ராசிபுரம் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்யவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பேருந்து நிலைய மீட்புக்குழு கூட்டமைப்பு சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ராசிபுரம் பேருந்து நிலையம் அணைப்பாளைய... மேலும் பார்க்க

சாக்கு சேமிப்பு மண்டியில் தீ விபத்து

திருச்செங்கோடு சந்தைப்பேட்டை பகுதியில் சாக்கு சேமிப்பு மண்டியில் ஏற்பட்ட தீ விபத்தில், ரூ. 2 கோடிக்கு மதிப்பிலான சாக்குகள் எரிந்து நாசமாயின. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு சந்தைப்பேட்டை பகுதியில் க... மேலும் பார்க்க