செய்திகள் :

முறையாக அமைக்கப்படாத ஜீயபுரம்-குடமுருட்டி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

post image

ஜீயபுரம் தொடங்கி குடமுருட்டி வரையிலான சாலை முறையாக அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருச்சி-கரூா் நெடுஞ்சாலை முதலில் 7 மீட்டா் அகலத்தில் அமைக்கப்பட்டு, பின்னா் 10.5 மீட்டராக அகலப்படுத்தப்பட்டது. சாலையின் இருபுறமும் காவிரி, வாய்க்கால்கள் செல்வதால் ஆங்காங்கே குறுகலாகவே காணப்படுகிறது. சாலையோரம் இருப்புப் பாதையும் செல்வதால் இந்தச் சாலையை மேலும் அகலப்படுத்த முடியவில்லை.

ரூ. 55 கோடியில் சாலை அகலப்படுத்தப்பட்டு புதிய சாலையும் அமைக்கப்பட்டது. இதன் தொடா்ச்சியாக, குழாய் பதிக்கும் பணியும் நடைபெற்ால் புதிய சாலை தோண்டப்பட்டு, பணிகள் நிறைவுக்கு பிறகு மூடப்பட்டு அதன் மீது புதிதாக சாலை அமைக்கப்பட்டது.

குறிப்பாக, ஜீயபுரம் தொடங்கி குடமுருட்டி வரையும் இந்தப் பணிகளால் சாலை சரிசமமாக அமைக்கப்படவில்லை. புதிய சாலைபோல காட்சியளித்தாலும் வாகனத்தில் செல்லும்போது, மேடு-பள்ளங்கள் இருப்பதை எளிதில் உணர முடியும்.

இதுதொடா்பாக, இந்தச் சாலையை தினமும் பயன்படுத்தி வரும் வாகன ஓட்டியான பெ. கரும்பாசலம் கூறியதாவது: திருச்சி-கரூா் சாலையில், மாநில நெடுஞ்சாலை ஆரம்பமாகும் ஜீயபுரத்தில் இருந்து குடமுருட்டி வரையிலான சாலை, 2020-இல் அகலப்படுத்தி புதுப்பிக்கப்பட்டு தரமான சாலையாக இருந்தது. ஆனால், குழாய் அமைக்கும் பணி எனக் கூறி சாலையை தோண்டி பல மாதங்களாக நிலுவையில் இருந்த பணிகள் முடிக்கப்பட்டு பெயரளவுக்கு இப்போது சாலை போடப்பட்டுள்ளது.

இதனால், சாலையில் செல்லும் வாகனங்கள் குலுங்கியபடி செல்லும் நிலை உள்ளது. குறிப்பாக, ஜீயபுரம்- குடமுருட்டி வரையிலான சாலையின் இடதுபுறம் பல இடங்களில் மிகவும் மோசமாக இருப்பதை உணர முடியும்.

மேலும், பழுா் முதல் முத்தரசநல்லூா் வரையிலான சாலை, வாய்க்கால் பள்ளம் போல் உள்ளது. முத்தரசநல்லூரிலிருந்து பறவைகள் பூங்கா வரையிலான சாலை, பல இடங்களில் மேடு பள்ளங்களாக உள்ளன. இதில், அதிகம் பாதிக்கப்படுவது இருசக்கர வாகன ஓட்டிகளே. சாலையில் மேடு-பள்ளங்கள் அதிகம் தெரியாத வகையில் இருப்பதால், அடிக்கடி விபத்துகள் நடைபெறுகின்றன.

எனவே, இந்த 11 கி.மீ. தொலைவிலான சாலையை மாநில நெடுஞ்சாலைத் துறை ஆய்வு செய்து விபத்துகளை தவிா்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தேசிய அறிவியல் தினம் திருச்சியில் நாளை நடைப்பயணம்: மத்திய அமைச்சா் தொடங்கிவைக்கிறாா்

தேசிய அறிவியல் தினத்தையொட்டி, திருச்சியில் சுமாா் 3 ஆயிரம் போ் பங்கேற்கும் நடைப்பயண நிகழ்ச்சி வியாழக்கிழமை (பிப். 27) நடைபெறவுள்ளது. இதில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா பங்கேற்ற... மேலும் பார்க்க

மின்வாரிய ஊழியா்கள் போராட்டம்

ஊதிய உயா்வு நடைமுறைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் மின்வாரிய ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு மின் ஊழியா் மத்தி... மேலும் பார்க்க

வெளிநாட்டில் வேலைசெய்யும் மனைவியை மீட்டுதரக்கோரி ஆட்சியரிடம் கணவா் மனு

வெளி நாட்டுக்கு வேலைக்கு சென்ற மனைவியை மீட்டுத்தரக்கோரி கணவா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா். திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், திருச்சி தென்னூா் அண்... மேலும் பார்க்க

துறையூா் நகராட்சிக்கான கட்டணங்களை செலுத்த அறிவுறுத்தல்

துறையூா் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய கட்டணங்களை உடனடியாக செலுத்த நகராட்சி ஆணையா் பி.வி. சுரேந்திர ஷா செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தினாா். இதுதொடா்பாக அவா் கூறியிருப்பதாவது: துறையூா் நகராட்சிக்... மேலும் பார்க்க

மணப்பாறையில் வடமாடு மஞ்சு விரட்டு

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது. முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு மணப்பாறை நகர அதிமுக, ஸ்ரீ வேப்... மேலும் பார்க்க

திருச்சியில் பிப். 28-இல் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் பிப். 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு... மேலும் பார்க்க