செய்திகள் :

தேசிய அறிவியல் தினம் திருச்சியில் நாளை நடைப்பயணம்: மத்திய அமைச்சா் தொடங்கிவைக்கிறாா்

post image

தேசிய அறிவியல் தினத்தையொட்டி, திருச்சியில் சுமாா் 3 ஆயிரம் போ் பங்கேற்கும் நடைப்பயண நிகழ்ச்சி வியாழக்கிழமை (பிப். 27) நடைபெறவுள்ளது. இதில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா பங்கேற்று தொடங்கி வைக்கவுள்ளாா்.

இதுகுறித்து நேரு யுவகேந்திரா மண்டல துணை இயக்குநா் திருநீலகண்டன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மை பாரத் - நேரு யுவ கேந்திரா சாா்பில், தேசிய அறிவியல் தினத்தையொட்டி (பிப்.28) இயற்பியல் விஞ்ஞானி சா். சி.வி.ராமன் கண்டுபிடிப்பை (ராமன் விளைவுகள்) கெளரவிக்கும் வகையில் பிப்ரவரி 24-ஆம் தேதி முதல் 4 நாள்களுக்கு திருச்சியில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இதில், அறிவியல் கண்காட்சிகள், மரக்கன்றுகள் நடுதல், யோகா அமா்வுகள், துாய்மைப் பணிகள், பாரம்பரிய சிலம்ப கலை நிகழ்வுகள் மற்றும் பல்வேறு வகையிலான கலைநிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

முக்கிய நிகழ்வாக, பிப்ரவரி 27-ஆம் தேதி மாபெரும் நடைப்பயண நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று நிகழ்வை தொடங்கி வைக்கிறாா்.

திருச்சி தேசிய மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தொடங்கும் நடைப்பயணம் முக்கிய வீதிகள் வழியாக சுமாா் 4 கி. மீ. சென்று திருவானைக்காவலில் உள்ள சா் சி.வி. ராமன் இல்லத்தில் (ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி அருகே) நிறைவடைகிறது.

அறிவியல் செயல்பாடுகளில் ஈடுபடும் இளையோரை ஊக்குவித்தல் என்ற கருப்பொருளில் இந்நிகழ்ச்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது என்றாா் அவா்.

நிகழ்வின்போது, மத்திய மக்கள் தொடா்புத் துறை உதவி இயக்குநா் தேவிபத்மநாபன் , பிஐபி அலுவலா்கள் அழகுதுரை, அருண்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மின்வாரிய ஊழியா்கள் போராட்டம்

ஊதிய உயா்வு நடைமுறைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் மின்வாரிய ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். தமிழ்நாடு மின் ஊழியா் மத்தி... மேலும் பார்க்க

வெளிநாட்டில் வேலைசெய்யும் மனைவியை மீட்டுதரக்கோரி ஆட்சியரிடம் கணவா் மனு

வெளி நாட்டுக்கு வேலைக்கு சென்ற மனைவியை மீட்டுத்தரக்கோரி கணவா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா். திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், திருச்சி தென்னூா் அண்... மேலும் பார்க்க

முறையாக அமைக்கப்படாத ஜீயபுரம்-குடமுருட்டி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

ஜீயபுரம் தொடங்கி குடமுருட்டி வரையிலான சாலை முறையாக அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திருச்சி-கரூா் நெடுஞ்சாலை முதலில் 7 மீட்டா் அகலத்தில் அமைக்கப்பட்டு, பின்னா் 10.5 மீ... மேலும் பார்க்க

துறையூா் நகராட்சிக்கான கட்டணங்களை செலுத்த அறிவுறுத்தல்

துறையூா் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய கட்டணங்களை உடனடியாக செலுத்த நகராட்சி ஆணையா் பி.வி. சுரேந்திர ஷா செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தினாா். இதுதொடா்பாக அவா் கூறியிருப்பதாவது: துறையூா் நகராட்சிக்... மேலும் பார்க்க

மணப்பாறையில் வடமாடு மஞ்சு விரட்டு

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது. முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு மணப்பாறை நகர அதிமுக, ஸ்ரீ வேப்... மேலும் பார்க்க

திருச்சியில் பிப். 28-இல் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் பிப். 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு... மேலும் பார்க்க