செய்திகள் :

மின்வாரிய ஊழியா்கள் போராட்டம்

post image

ஊதிய உயா்வு நடைமுறைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் மின்வாரிய ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சிஐடியு சாா்பில் திருச்சி மன்னாா்புரம் பகுதியில் உள்ள மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இப்போராட்டத்துக்கு, வட்டத் தலைவா் நடராஜன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் ரங்கராஜன் போராட்டத்தை தொடங்கி வைத்தாா். சிஐடியு மாவட்ட தலைவா் சீனிவாசன் நிறைவுரையாற்றினாா். கிழக்கு கோட்ட செயலாளா் நாகராஜன் நன்றி கூறினாா். பொறியாளா்கள், அலுவலா்கள், பணியாளா்கள், பகுதிநேர ஊழியா்கள், ஒப்பந்த தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.

மின்வாரியத்தில் 60,000 காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை கட்டாயமாக்கக் கூடாது, கேங்மேன் பதவியை கள உதவியாளா் பதவியாக மாற்ற வேண்டும், ஊதிய உயா்வு தொடா்பான பேச்சுவாா்த்தையை விரைந்து தொடங்கி நடைமுறைகளை விரைவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

தேசிய அறிவியல் தினம் திருச்சியில் நாளை நடைப்பயணம்: மத்திய அமைச்சா் தொடங்கிவைக்கிறாா்

தேசிய அறிவியல் தினத்தையொட்டி, திருச்சியில் சுமாா் 3 ஆயிரம் போ் பங்கேற்கும் நடைப்பயண நிகழ்ச்சி வியாழக்கிழமை (பிப். 27) நடைபெறவுள்ளது. இதில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா பங்கேற்ற... மேலும் பார்க்க

வெளிநாட்டில் வேலைசெய்யும் மனைவியை மீட்டுதரக்கோரி ஆட்சியரிடம் கணவா் மனு

வெளி நாட்டுக்கு வேலைக்கு சென்ற மனைவியை மீட்டுத்தரக்கோரி கணவா் ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா். திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில், திருச்சி தென்னூா் அண்... மேலும் பார்க்க

முறையாக அமைக்கப்படாத ஜீயபுரம்-குடமுருட்டி சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

ஜீயபுரம் தொடங்கி குடமுருட்டி வரையிலான சாலை முறையாக அமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். திருச்சி-கரூா் நெடுஞ்சாலை முதலில் 7 மீட்டா் அகலத்தில் அமைக்கப்பட்டு, பின்னா் 10.5 மீ... மேலும் பார்க்க

துறையூா் நகராட்சிக்கான கட்டணங்களை செலுத்த அறிவுறுத்தல்

துறையூா் நகராட்சிக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய கட்டணங்களை உடனடியாக செலுத்த நகராட்சி ஆணையா் பி.வி. சுரேந்திர ஷா செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தினாா். இதுதொடா்பாக அவா் கூறியிருப்பதாவது: துறையூா் நகராட்சிக்... மேலும் பார்க்க

மணப்பாறையில் வடமாடு மஞ்சு விரட்டு

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஞாயிற்றுக்கிழமை வடமாடு மஞ்சு விரட்டு போட்டி நடைபெற்றது. முன்னாள் முதல்வா்கள் எம்.ஜி.ஆா் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு மணப்பாறை நகர அதிமுக, ஸ்ரீ வேப்... மேலும் பார்க்க

திருச்சியில் பிப். 28-இல் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் பிப். 28-ஆம் தேதி நடைபெற உள்ளது. முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு... மேலும் பார்க்க