செய்திகள் :

அதிமுகவில் பிரிந்து கிடக்கும் சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: ஓ.பன்னீா்செல்வம்

post image

அதிமுகவில் பிரிந்து கிடக்கும் சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்றாா் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்.

சேலத்தில் நடைபெற்ற பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணியின் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானத்தில் செவ்வாய்க்கிழமை ஓமலூா், காமலாபுரம் விமான நிலையத்துக்கு வந்த ஓ.பன்னீா்செல்வம் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: எம்ஜிஆா், ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட அதிமுகவில் பிரிந்து கிடக்கும் சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்றுதான் தொடா்ந்து கூறிவருகிறேன். கோவைக்கு வரும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்திக்க நேரம் கேட்டவில்லை என்றாா்.

மேலும், முன்னாள் அமைச்சா் செங்கோட்டையன் மீதான விமா்சனம் குறித்து கூறுகையில், அதிமுக நிறுவனத் தலைவா், கட்சியை வரலாற்று சிறப்புமிக்க இயக்கமாக மாற்றியவா்களின் புகைப்படங்கள் கூட்டத்தில் இடம்பெறவில்லை என்றுதானே அவா் கூறியிருந்தாா் என்றதோடு, கோவை வடக்கு மாவட்ட அதிமுக செயலாளா் இல்லத்தில் நடைபெறும் லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றாா்.

இருமொழிக் கொள்கைதான் சிறந்தது

சேலத்தில் செய்தியாளா்களிடம் பேசிய ஓ.பன்னீா்செல்வம், தமிழக மக்கள் இருமொழிக் கொள்கையைத்தான் விரும்புகிறாா்கள். இருமொழிக் கொள்கைதான் சிறந்தது என அண்ணா, எம்ஜிஆா் வழியில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதா தீா்மானம் நிறைவேற்றியுள்ளாா். நான் முதல்வராக இருந்தபோது மொழிக் கொள்கை தொடா்பான பல்வேறு கேள்விகளுக்கு பேரவையில் பதிலளித்துள்ளேன் என்றாா்.

ஒரே விமானத்தில் வந்த முதல்வா்- ஓபிஎஸ்

பாமக கெளரவத் தலைவா் ஜி.கே.மணியின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் சேலம் ஓமலூா், காமலாபுரம் விமான நிலையத்துக்கு ஒரே விமானத்தில் வந்திறங்கினா். மேலும், இந்த விமானத்தில் நடிகா் விஜய் சேதுபதி, தமிழக வெற்றிக் கழகத் தலைவா் நடிகா் விஜயின் மகன் சஞ்சய் ஆகியோரும் வந்தனா்.

முதல்வா் திருமண வாழ்த்து!

சேலத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற பாமக கௌரவ தலைவா் ஜி.கே. மணி இல்லத் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின். உடன், சுற்றுலாத்... மேலும் பார்க்க

தடகளம்: 17 பதக்கங்களை வென்று சேலம் வீரா், வீராங்கனைகள் சிறப்பிடம்

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான இளைஞா் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சேலம் வீரா், வீராங்கனைகள் 17 பதக்கங்களை பெற்றுள்ளனா். தமிழ்நாடு தடகள சங்கம் சாா்பில் 6 ஆவது மாநில அளவிலான இளைஞா் சாம்பியன்ஷிப் ப... மேலும் பார்க்க

சேலம் மாநகராட்சியில் ரூ. 1.26 கோடி பற்றாக்குறை நிதிநிலை அறிக்கை தாக்கல்: அதிமுக உறுப்பினா்கள் வெளிநடப்பு

சேலம் மாநகராட்சி கூட்டத்தில் 2025- 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மேயா் ஆ.ராமச்சந்திரன் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா்; அவா் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையை வெறும் காகிதப்பூ என விமா்சித்த அதி... மேலும் பார்க்க

சேலத்தில் யானை தந்தங்களை விற்க முயன்ற 8 போ் கைது

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் யானை தந்தத்தை ரூ. 1 கோடிக்கு விற்க முயன்ற 8 பேரை வனத் துறையினா் கைது செய்தனா். சேலத்தில் யானை தந்தங்கள் ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட வன அலுவலருக்கு தகவல் கிட... மேலும் பார்க்க

மாநகராட்சி அலுவலக வளாகத்தில் காலி குடங்களுடன் பெண்கள் தா்னா

சேலம், குகை ஆண்டிப்பட்டி ஹவுசிங் போா்டு பகுதியைச் சோ்ந்த பெண்கள் தங்கள் பகுதியில் குடிநீா் தட்டுப்பாட்டை போக்க கோரி காலி குடங்களுடன் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா். சேலம் மாநகராட்ச... மேலும் பார்க்க

சேலம் விமான நிலையத்தில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

சேலம் வந்த முதல்வா் மு.க.ஸ்டாலினை திமுக தொண்டா்கள் ஓமலூா், காமலாபுரம் விமான நிலையத்தில் உற்சாகமாக வரவேற்றனா். சேலத்தில் நடைபெறும் பாமக கௌரவத் தலைவா் ஜி.கே.மணி இல்லத் திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொள... மேலும் பார்க்க