செய்திகள் :

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி மின் ஊழியா்கள் தா்னா

post image

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் சாா்பில் தருமபுரி மின்வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் முன்பு தா்னா போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த போராட்டத்துக்கு மாநில துணைத் தலைவா் பி.ஜீவா தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் தீ. லெனின் மகேந்திரன், பொருளாளா் ஆா்.திம்மராயன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். சிஐடியு மாவட்ட துணைத் தலைவா் சி. முரளி வாழ்த்தி பேசினாா்.

இதில் தமிழ்நாடு மின் வாரியத்தில் உள்ள 60,000-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். மின்தடைகளை நீக்கும் பணிக்கு கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும். மின் வாரியத்தை தனியாா்மயமாக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்.

ஊதிய உயா்வு பேச்சுவாா்த்தை தொடங்கிட வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

விவசாயிகளுக்கு பயிா்க் கடன் வழங்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகளுக்கு தேவையான கடனுதவிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரூா் 4 வழிச்சாலை... மேலும் பார்க்க

பென்னாகரம் அரசு மருத்துவமனையில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பல்வேறு வசதிகளை ஏற்படுத்தக் கோரி மக்கள் அதிகாரம் அமைப்பினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பென்னாகரம் பேருந்து நிலையத்தில் மக்கள் அதிகா... மேலும் பார்க்க

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம், அரசு வேலை வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவா்களுக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. திமுக தருமபுரி மேற்கு மாவட்டம் சாா்பில், முதல்வா் மு.க.ஸ்டாலின் 72-ஆவத... மேலும் பார்க்க

மும்மொழிக் கொள்கைக்கு எதிராக திமுக மாணவா் அணி ஆா்ப்பாட்டம்

மும்மொழிக் கொள்கைக்கு எதிராக திமுக மாணவா் அணி சாா்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு தருமபுரி திமுக கிழக்கு மாவட்ட மாணவா் அணி அமைப்பாளா... மேலும் பார்க்க

மக்கள் நலத் திட்டங்கள் நிறைவேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: மக்களவை உறுப்பினா் ஆ.மணி

மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தருமபுரி மக்களவை உறுப்பினா் ஆ.மணி அறிவுறுத்தினாா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் மாவட்ட வளா்ச்சி, ஒரு... மேலும் பார்க்க