செய்திகள் :

குளித்தலை அருகே கார் மீது அரசுப் பேருந்து மோதியதில் 5 பேர் பலி

post image

கரூர்: கரூர் மாவட்டம், குளித்தலை அருகே காரும் அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் 2 பெண்கள் உள்பட 5 பேர் பலியாகினர்.

கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த செல்வராஜ் தனது குடும்பத்தினருடன் தஞ்சாவூர் மாவட்டம். ஒரத்தநாடு கீழையூர் பகுதியில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட காரில் சென்றுகொண்டிருந்தனர்.

கார் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்து கொண்டிருந்த அரசுப் பேருந்து காரின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இதையும் படிக்க |தவெக தலைவர் விஜய் வீட்டில் காலணி வீச்சு!

இந்த கோர விபத்தில் காரில் இருந்த செல்வராஜ் அவரது மனைவி கலையரசி, மகள் அகல்யா, மகன் அருண், கார் ஓட்டுநர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த விஷ்ணு என ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மீனாட்சி அம்மன் கோவில் மதுரையின் பெருமை: ஞானேஷ்குமார்

மதுரை: சமீபத்தில் புதிய தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்ற ஞானேஷ் குமார் தனது குடும்பத்தினருடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தவர், மீனாட்சி அம்மன் கோவில் மதுரையின் பெருமை என தெரிவித்... மேலும் பார்க்க

மருத்துவத்தில் உயர்ந்து நிற்கும் தமிழ்நாடு: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழகத்தில் அரசு மருத்துவமனை பணிகளுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள 2,642 மருத்துவா்களுக்கு புதன்கிழமை பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலின், நாட்டின் மருத்துவத் தலைநகராக தமிழ்நாடு உயர்ந்து நிற... மேலும் பார்க்க

தமிழ் வளர்ச்சிக்காக திமுக என்ன செய்தது?: அன்புமணி கேள்வி

சேலம்: தமிழை வைத்து அரசியல் செய்யும் திமுக, இதுவரை தமிழ் வளர்ச்சிக்காக என்ன செய்தார்கள் என்று அன்புமணி கேள்வி எழுப்பினார்.சேலத்தில் நடைபெற்ற ஜி.கே.மணி இல்ல திருமண விழாவில் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அ... மேலும் பார்க்க

இந்தியை திமுக ஏன் இன்னமும் எதிர்க்கிறது?: மு.க.ஸ்டாலின் விளக்கம்

சென்னை: தமிழகத்தில் இந்தியை திமுக ஏன் இன்னமும் எதிர்க்கிறது என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து திமுகவினருக்கு புதன்கிழமை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதா... மேலும் பார்க்க

தமிழர்கள் ஹிந்தி கற்றுக்கொள்வது புத்திசாலித்தனம்: ஸ்ரீதர் வேம்பு

வணிகரீதியான வளர்ச்சிக்கு பொறியாளர்கள், தொழில்முனைவோர் ஹிந்தி கற்றுக்கொள்வது அவசியம் என ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார். தில்லி, மும்பையில் பணியாற்றும் ஸோஹோ நிறுவன பொறியாளர்கள் மத்தியில் பேசி... மேலும் பார்க்க

உ.பி: ரூ.1 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த குற்றவாளி சுட்டுப்பிடிப்பு!

லக்னௌ: உத்தரப்பிரதேச மாநிலம்,காசியாபாத் கொள்ளை வழக்கில் ரூ.1 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த குற்றவாளி ஜிதேந்திரா புதன்கிழமை காலை மீரட்டில் நடந்த போலீஸ் என்கவுண்டரில் சுட்டுப்பிடிக்கப்... மேலும் பார்க்க