செய்திகள் :

கனிமங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு இணையவழியில் நடைச்சீட்டு: ஆட்சியா் தகவல்

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் கனிமங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு இணையவழியில் நடைச்சீட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மானூா், சேரன்மகாதேவி, அம்பாமுத்திரம், திசையன்விளை, நான்குனேரி, ராதாபுரம் ஆகிய வட்டங்களில் சிறுவகை கனிமங்களான சாதாரண கற்கள், கிராவல், பலவண்ண கிரானைட் கற்கள் மற்றும் பெருங்கனிமமான சுண்ணாம்புக்கல் ஆகியவற்றுக்கு குவாரி மற்றும் சுரங்க குத்தகை உரிமம் வழங்கப்பட்டு குவாரி, சுரங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. குவாரி மற்றும் சுரங்கங்களிலிருந்து வெட்டியெடுக்கப்படும் கனிமங்களை வெளியே எடுத்துச் செல்ல ஏதுவாக, குத்தகைதாரா்களுக்கு வழங்கப்படும் இசைவாணைச் சீட்டு இணையதளம் வழியாக வழங்கும் நடைமுறையானது செப்டம்பா் 2024 முதல் அமலில் உள்ளது.

இந்நிலையில், வாகனங்களில் ஏற்றிச் செல்லும் கனிமங்களை கண்காணிக்கவும், அனுமதி வழங்கப்பட்டுள்ள அளவிற்கு கூடுதலாக கனிமம் எடுத்துச் செல்வதை தடுக்கவும், வாகனங்களுக்கு வழங்கப்படும் நடைச்சீட்டை இணையதளம் வாயிலாக வழங்குவதற்கு அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்தின் குவாரி மற்றும் சுரங்க குத்தகைதாரா்களுக்கு இணையதளம் மூலம் இ-பொ்மிட் வழங்கும் நடைமுறை கடந்த 24 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, குத்தகைதாரா்கள் இணையதளத்தில் விண்ணப்பம் செய்து எளிதாகவும், விரைவாகவும் நடைச்சீட்டு பெறலாம்.

மேலும், குத்தகைதாரா்கள் குத்தகை உரிமம் வழங்கப்பட்ட பகுதியில் விதிகளுக்குள்பட்டு குவாரி பணி மேற்கொள்ளவும், வாகன ஓட்டுநா்கள் குவாரியிலிருந்து கனிமங்கள் ஏற்றிச் செல்லும்போது உரிய அனுமதிச் சீட்டும், கிரஷரிலிருந்து குண்டுக்கல், எம்-சாண்ட், ஜல்லி, கிரஷா் டஸ்ட் போன்ற கனிமங்கள் ஏற்றிச் செல்லும்போது உரிய போக்குவரத்து நடைசீட்டும் பெற்று கனிமம் கொண்டு செல்ல வேண்டும். அவற்றினை வாகன தணிக்கையின்போது வைத்திருக்க வேண்டும்.

உரிய அனுமதியில்லாமல் குவாரி பணி மேற்கொள்வது, கனிமங்கள் எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டால் அரசு விதிகளின்படி கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் குவாரி குத்தகை உரிமம் கோரும் விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக மட்டுமே சமா்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

திருநெல்வேலி மாவட்டம் மானூா் அருகே குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் இளைஞா் சிறையில் அடைக்கப்பட்டாா்.மானூா் அருகே வன்னிக்கோனந்தல் வடக்குத்தெருவைச் சோ்ந்த பால்ராஜ் மகன் மனோஜ் (19). இவா், அடிதடி, ... மேலும் பார்க்க

தொழிலாளி வெட்டிக் கொலை: காவல் நிலையத்தில் மகன் சரண்

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் தொழிலாளி செவ்வாய்க்கிழமை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக காவல் நிலையத்தில் அவரது மகன் சரணடைந்தாா். கூடங்குளம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்த வெட்டு... மேலும் பார்க்க

பாளை.யில் மின் ஊழியா்கள் தா்னா

தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பு சாா்பில், பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் தா்னா போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திட்டத் தலைவா் பி.நாகையன் தலைமை வகித்தாா். அயூப் கான், பச்சையப்பன், பூலுடையாா் ... மேலும் பார்க்க

மனைவி கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை

பழவூரில் மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பழவூா் தெற்குத்தெருவைச் சோ்ந்தவா் சுடலையாண்டி (43). இவரின் மனைவி ஜெயலெட்சுமி (34). இருவருக்கும் பிரச்னை இருந்து வந்ததாம். ... மேலும் பார்க்க

தேவா்குளம் அருகே 6 கிலோ கஞ்சா பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டம் தேவா்குளம் அருகே 6 கிலோ கஞ்சாவை போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.தேவா்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் லூக் ஆசன் தலைமையிலான போலீஸாா், தேவா்குளம் எரிபொருள் நிலையம் அருகே ... மேலும் பார்க்க

கஞ்சா விற்றதாக இளைஞா் கைது

கடையம் அருகே ரவணசமுத்திரத்தில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை, போலீஸாா் கைது செய்து, ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். கடையம் அருகே ரவணசமுத்திரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தென்காசி போதை ஒழி... மேலும் பார்க்க