செய்திகள் :

பஞ்சாபில் கேஜரிவால் போட்டியில்லை! வேட்பாளர் அறிவிப்பு!

post image

பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளாரை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளில் மட்டுமே வென்று பாஜகவிடம் ஆட்சியை இழந்தது. பாஜக 48 தொகுதிகளில் வெற்றி பெற்று 27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைத்துள்ளது.

இதனிடையே, தில்லி தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தோல்வியை சந்தித்தார். துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவும் தோல்வி அடைந்தார்.

இதையும் படிக்க : ரசிகர் மன்றம் முதல் அரசியல் வரை... விஜய்யின் ஆவணப்படம் வெளியீடு!

பஞ்சாப் மாநிலத்தில் காலியாகவுள்ள லூதியானா மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் அரவிந்த் கேஜரிவால் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இதனிடையே, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் மற்றும் மாநில் அமைச்சர்கள், எம்எல்ஏக்களுடன் அரவிந்த் கேஜரிவால் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், லூதியானா மேற்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் பெயரை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.

ஆம் ஆத்மியின் மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சீவ் அரோரா, லூதியானா மேற்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லி பேரவையின் துணைத் தலைவராகிறார் மோகன் சிங்!

தில்லி சட்டப்பேரவையின் துணைத் தலைவர் பதவிக்கு பாஜக எம்எல்ஏ மோகன் சிங் பிஷ்ட் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். முன்னதாக கடந்த பிப். 24 அன்று குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு விஜேந்தர் குப்தா பேரவையின் தலைவராக... மேலும் பார்க்க

தெலங்கானா சுரங்கம்: விபத்து இடத்தை நெருங்கியும் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை!

தெலுங்கானா சுரங்கத்தில் விபத்து நடந்த இடத்தை மீட்புக் குழுவினர் நெருங்கிய நிலையில், விபத்தில் சிக்கியவர்களை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.தெலங்கானாவில் உள்ள நாகா்கா்னூல் மாவட்ட... மேலும் பார்க்க

சமூகத் தீமைகளை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் துறவிகள்: முர்மு

இந்தியாவில் உள்ள துறவிகள் சமூகத் தீமைகளை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார். மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தின் கர்ஹா கிராமத்தில் உள்ள பாகே... மேலும் பார்க்க

பழக் கழிவுகளால் கான்கிரீட் வலிமையை அதிகரிக்கலாம்: புதிய யோசனை சொல்லும் இந்தூர் ஐஐடி!

கான்கிரீட்டில் உணவுக் கழிவுகளைக் கலப்பதன் மூலம் கட்டுமானத்தின் வலிமையை அதிகரிக்கலாம் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.கான்கிரீட் வலிமையை அதிகரிப்பது குறித்து ஐஐடி இந்தூர் ஆராய்ச்சி நிறுவனம் ஆய்வு செய்து... மேலும் பார்க்க

கும்பமேளா நிறைவு நாள்: இதுவரை 81 லட்சம் பக்தர்கள் புனித நீராடல்!

உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவின் கடைசி நாளான இன்று இதுவரை 81 லட்சம் பேர் புனித நீராடியுள்ளதாக அந்த மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.நாடு முழுவதும் மகாசிவராத்திரி விழா கோலாகலமாகக் ... மேலும் பார்க்க

கௌரி சங்கர் கோயிலில் தில்லி முதல்வர் வழிபாடு!

மகாசிவராத்திரியை முன்னிட்டு கௌரி சங்கர் கோயிலில் தில்லி முதல்வர் ரேகா குப்தா வழிபாடு மேற்கொண்டார். நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா இன்று சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் மகா சிவராத்திரிய... மேலும் பார்க்க